“எங்களுக்கு பல் வளரல” பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்!

“எங்களுக்கு பல் வளரல” பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் தங்களின் பற்கள் வளர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சருக்கும் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளது கலகலப்பை உண்டாக்கியுள்ளது.

அசாமை சேர்ந்த ரிஸ்வான் (6) மற்றும் ஆரியன் (5) சகோதரர்களுக்கு முன்பற்கள் வளராததால் உணவை மென்று சுவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்சினையை மாநில முதல்வருக்கும் பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு செல்ல முடிவெடுத்தனர் இச்சிறுவர்கள். இதையடுத்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தாவுக்கு ரிஸ்வான் எழுதிய கடிதத்தில் தெரிவித்ததவது:

அன்புள்ள ஹிமந்தா அங்கிள், எனக்கு 5 பற்கள் வளரவில்லை. இதனால் எனக்கு பிடித்த உணவுகளை உண்பதில் சிரமம் ஏற்படுகிறது. தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஹிமந்தா அங்கிள்.

இவ்வாறு ரிஸ்வான் எழுத, தம்பி ஆரியன் ஒருபடி மேலே போய் பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் "அன்புள்ள மோடி ஜி, எனக்கு 3 பற்கள் வளரவில்லை. இதனால் பிடித்தமான உணவுகளை மெல்லும்போது சிரமப்படுகிறேன். இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடி ஜி" என எழுதியுள்ளார்.

இந்த கடிதங்களை அச்சிறுவர்களின் மாமா தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதற்கு பலரும் கலகலப்பான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com