தேவையானவை:
பச்சரிசி – .ஒரு கப்
துவரம்பருப்பு – கால் கப்
ஜீரகம் – ஒரு ஸ்பூன்.
பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை.
தேவையான உப்பு
செய்முறை.
அரிசி பருப்பு இரண்டையும் ஊறவைத்து உப்பு சேர்த்து மைய அரைக்கவும் பின் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஜீரகம் கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல்லில் ரவாதோசைகாகு வார்ப்பது போல் வார்த்து திருப்பிபோடவும். பச்சரிசி என்பதால் சூடாக சாப்பிடவேண்டும். தொட்டு கொள்ள கார சட்னி செமையாக இருக்கும். ஏகாதசிக்கு என் பாட்டிக்கு இது தான் பலகார உணவு.
ராஜலட்சுமி கவுரிசங்கர்.