– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.விஜயவாடாவைச் சேர்ந்த மனீஷா, சிரீஷா என்ற சகோதரிகள், 'ஜங்கம் சிஸ்டர்ஸ்' ஆக புகழ் பெற்றுள்ளார்கள். பகவத் கீதையை முற்றிலுமாகப் படித்தறிந்த இவர்கள் இருவரும், கீதாவதானம் செய்கிறார்கள். அதற்குப் பிறகு நாட்டியாவதானமும் செய்கிறார்கள்..'அவதானம்என்றால் என்ன?'அவதானம்' என்பது தெலுங்கு மொழியில் ஒரு முக்கியமான போட்டிச் செயல். இலக்கியத் திறமைக்கும் கவிதை மொழி அறிவுக்கும் சொல் வன்மைக்கும், 'அவதானம்' என்பது ஒரு உரைகல் என்று சொல்லலாம். தமிழ் மொழியில் பட்டிமன்றம் சிறப்பானது போல், தெலுங்கு மொழியில் அவதானம் சிறப்பானது. 'அஷ்டாவதானம்' என்று கேள்விப்பட்டுள்ளோம். சதாவதானம், சஹஸ்ராவதானம் கூட பார்த்துள்ளோம். எட்டு பேர் அமர்ந்து கேள்வி கேட்க, அவதானம் செய்பவர் பதிலளிக்கும்போது, அது அஷ்டாவதானம் எனப்படுகிறது. அதேபோல், சதாவதானம் என்பது 100 பேர் கேள்வி கேட்பார்கள். சஹஸ்ராவதானம் என்பது ஆயிரம் பேர் கேள்வி கேட்பார்கள். இது தெலுங்கு இலக்கியத்தில் உள்ள மிகச் சிறப்பான அறிவுச் செல்வம். இதில் கணிதாவதானம், நேத்ராவதானம், நாட்டியாவதானம் போன்ற எத்தனையோ போட்டிகள் உள்ளன..பகவத் கீதை இந்தியர்களின் ஆன்மிகச் செல்வம். இன்னும் கூற வேண்டுமென்றால், உலக மக்களுக்கு இது ஒரு வழிகாட்டி. வாழ்க்கை நடத்தும் வழிமுறையைக் கூறும் நூல். இந்த கீதாவதானம் என்ன என்பதை அறிந்து கொள்ள இவர்களோடு ஒரு சந்திப்பு….அக்கா மனீஷா சக்ரவர்த்தி :"நான் தொலைதூரக்கல்வி மூலம் தெலுங்கில் எம்.ஏ., படித்து வருகிறேன். இலக்கியஅவதானங்கள் செய்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே என் தந்தையார் எங்களுக்கு ருக்மிணி கல்யாணம், கஜேந்திர மோட்சம் போன்ற ஆன்மிக இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தெலுங்கில் நாங்கள் சுமார் இரண்டாயிரம் செய்யுள்களுக்கு மேல் மனப்பாடம் செய்துள்ளோம். இன்னும் கற்றுக்கொண்டே வருகிறோம். மனு சரித்ரம், மேகசந்தேசம் என்ற இரண்டு காவியங்களையும் முழுவதுமாக மனப்பாடம் செய்துள்ளோம். எங்கள் தந்தையாரே எங்கள் குரு. நான் அரசு இசைக் கல்லூரியில் சங்கீதம் சர்டிபிகேட் கோர்ஸ் செய்துள்ளேன். எங்கள் சித்தப்பா விஜயகுமார் எங்களுக்கு சிறு வயதிலிருந்தே குச்சிப்புடி நாட்டியம் சொல்லித் தருகிறார். நான் நாட்டியத்தில் டிப்ளமோ கோர்ஸ் படித்துள்ளேன். விரைவில் நடனத்தில் எம்.ஏ., பட்டம் வாங்கப்போகிறேன்.".தங்கை சிரீஷா சக்ரவர்த்தி :"நான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டேன். என் ஐந்தாவது வயதிலிருந்தே எங்கள் சித்தப்பாதான் எனக்கும் என் அக்காவுக்கும் நாட்டியம் சொல்லித் தருகிறார். நாட்டிய சாஸ்திரமும் கற்றுத் தந்துள்ளார். நாட்டிய சாஸ்திரத்தில் மொத்தம் ஆறாயிரம் சுலோகங்கள் உள்ளன. அவற்றுள் 3,500 சுலோகங்களை மனப்பாடம் செய்து விட்டோம். 2021 புத்தாண்டான உகாதி பண்டிகைக்குள் 6,000 ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்து, நாட்டியாவதானம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, அதனை நிறைவேற்றி உள்ளோம். சிறு வயதிலிருந்தே இவ்வாறு ஏதோ ஒரு சாதனை செய்வதே எங்கள் வாழ்க்கையாக உள்ளது. எனது அக்கா செய்யுள் இலக்கியத்தில் அவதானம் செய்கிறாள். நான் நாட்டியத்தில் அவதானம் செய்வதற்காகத் தயாராகி வருகிறேன். அக்கா ஐந்தாவது வகுப்பு படிக்கும்போது முதன்முதலில் கணிதாவதானம் செய்தாள். நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போது கணிதாவதானம் ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து இதுவரை பத்து அவதானங்கள் செய்துள்ளோம்.".குமாரிகள் மனீஷாவும் சிரீஷாவும் மென்மேலும் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்று, உன்னத உயரங்களை எட்ட வேண்டும் என்று விரும்பி வாழ்த்துவோம். இந்த கலைச் சகோதரிகளின் தந்தையாரான ஜங்கம் ஸ்ரீனிவாச சக்ரவர்த்தி, 'கீதாவதானம்' எவ்வாறு செய்யப்படும் என்பதை விளக்கமாகக் கூறினார்..பகவத்கீதை அவதானம் என்றால்…1. ஸ்லோகத்தின் எண்ணிக்கை : பகவத் கீதையில் உள்ள 700 ஸ்லோகங்களில் எந்த அத்தியாயத்தில் எந்த ஸ்லோக எண்ணைச் சொன்னாலும் அந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.2. ந்யஸ்தாக்ஷரி என்றால் : ஒரு ஸ்லோகத்தில் ஆங்காங்கே எழுத்துக்களைக் கொடுப்பார் கள். இறுதியில், மொத்த ஸ்லோகத்தையும் சொல்ல வேண்டும்.3. தத்தபதி என்பது : ஒரு சொல்லைச் சொல்வார்கள். அந்தச் சொல் எந்த ஸ்லோகத்தில் உள்ளது? எத்தனையாவது அத்தியாயத்தில் உள்ளது? என்று கேட்டால் அதற்கு உடனுக் குடன் பதில் சொல்ல வேண்டும்.4. பாத வ்யதிக்ரமம் என்றால் : ஒரு சுலோகத்தில் ஏதோ ஒரு வரி சொல்வார்கள். அந்த வரி உள்ள சுலோகம் முழுவதையும் சொல்ல வேண்டும்.5. ஸ்லோகதாரா என்றால் : ஒரு அத்தியாயத்தில் அவர்கள் ஒரு எண்ணைக் கூறுவார்கள். அதாவது, இரண்டு என்ற எண்ணைக் கூறினால், அந்த அத்தியாயத்தில் உள்ள 2, 12, 22, 32 என்பது போல, அந்த எண்ணிக்கையில் உள்ள சுலோகங்களைக் கூற வேண்டும்.6. ஸ்லோகார்த்த தாத்பரியம் என்றால் : எந்த ஸ்லோகம் கேட்டாலும் அதற்கு உடனே அர்த்தம் கூற வேண்டும்.7. ஸ்லோக ஆரோகண அவரோகணம் என்றால் : பகவத் கீதையில் ஐந்து அல்லது பத்து ஸ்லோகங்கள் கேட்பார்கள். அவற்றைக் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் கூற வேண்டும்.8. பிரஸ்துதி பிரசங்கம் என்றால் : பகவத் கீதை மீது கேட்கும் கேள்விகளுக்கு சாமர்த்திமாக பதிலளிக்க வேண்டும் என்று விவரித்தார்.
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.விஜயவாடாவைச் சேர்ந்த மனீஷா, சிரீஷா என்ற சகோதரிகள், 'ஜங்கம் சிஸ்டர்ஸ்' ஆக புகழ் பெற்றுள்ளார்கள். பகவத் கீதையை முற்றிலுமாகப் படித்தறிந்த இவர்கள் இருவரும், கீதாவதானம் செய்கிறார்கள். அதற்குப் பிறகு நாட்டியாவதானமும் செய்கிறார்கள்..'அவதானம்என்றால் என்ன?'அவதானம்' என்பது தெலுங்கு மொழியில் ஒரு முக்கியமான போட்டிச் செயல். இலக்கியத் திறமைக்கும் கவிதை மொழி அறிவுக்கும் சொல் வன்மைக்கும், 'அவதானம்' என்பது ஒரு உரைகல் என்று சொல்லலாம். தமிழ் மொழியில் பட்டிமன்றம் சிறப்பானது போல், தெலுங்கு மொழியில் அவதானம் சிறப்பானது. 'அஷ்டாவதானம்' என்று கேள்விப்பட்டுள்ளோம். சதாவதானம், சஹஸ்ராவதானம் கூட பார்த்துள்ளோம். எட்டு பேர் அமர்ந்து கேள்வி கேட்க, அவதானம் செய்பவர் பதிலளிக்கும்போது, அது அஷ்டாவதானம் எனப்படுகிறது. அதேபோல், சதாவதானம் என்பது 100 பேர் கேள்வி கேட்பார்கள். சஹஸ்ராவதானம் என்பது ஆயிரம் பேர் கேள்வி கேட்பார்கள். இது தெலுங்கு இலக்கியத்தில் உள்ள மிகச் சிறப்பான அறிவுச் செல்வம். இதில் கணிதாவதானம், நேத்ராவதானம், நாட்டியாவதானம் போன்ற எத்தனையோ போட்டிகள் உள்ளன..பகவத் கீதை இந்தியர்களின் ஆன்மிகச் செல்வம். இன்னும் கூற வேண்டுமென்றால், உலக மக்களுக்கு இது ஒரு வழிகாட்டி. வாழ்க்கை நடத்தும் வழிமுறையைக் கூறும் நூல். இந்த கீதாவதானம் என்ன என்பதை அறிந்து கொள்ள இவர்களோடு ஒரு சந்திப்பு….அக்கா மனீஷா சக்ரவர்த்தி :"நான் தொலைதூரக்கல்வி மூலம் தெலுங்கில் எம்.ஏ., படித்து வருகிறேன். இலக்கியஅவதானங்கள் செய்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே என் தந்தையார் எங்களுக்கு ருக்மிணி கல்யாணம், கஜேந்திர மோட்சம் போன்ற ஆன்மிக இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தெலுங்கில் நாங்கள் சுமார் இரண்டாயிரம் செய்யுள்களுக்கு மேல் மனப்பாடம் செய்துள்ளோம். இன்னும் கற்றுக்கொண்டே வருகிறோம். மனு சரித்ரம், மேகசந்தேசம் என்ற இரண்டு காவியங்களையும் முழுவதுமாக மனப்பாடம் செய்துள்ளோம். எங்கள் தந்தையாரே எங்கள் குரு. நான் அரசு இசைக் கல்லூரியில் சங்கீதம் சர்டிபிகேட் கோர்ஸ் செய்துள்ளேன். எங்கள் சித்தப்பா விஜயகுமார் எங்களுக்கு சிறு வயதிலிருந்தே குச்சிப்புடி நாட்டியம் சொல்லித் தருகிறார். நான் நாட்டியத்தில் டிப்ளமோ கோர்ஸ் படித்துள்ளேன். விரைவில் நடனத்தில் எம்.ஏ., பட்டம் வாங்கப்போகிறேன்.".தங்கை சிரீஷா சக்ரவர்த்தி :"நான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டேன். என் ஐந்தாவது வயதிலிருந்தே எங்கள் சித்தப்பாதான் எனக்கும் என் அக்காவுக்கும் நாட்டியம் சொல்லித் தருகிறார். நாட்டிய சாஸ்திரமும் கற்றுத் தந்துள்ளார். நாட்டிய சாஸ்திரத்தில் மொத்தம் ஆறாயிரம் சுலோகங்கள் உள்ளன. அவற்றுள் 3,500 சுலோகங்களை மனப்பாடம் செய்து விட்டோம். 2021 புத்தாண்டான உகாதி பண்டிகைக்குள் 6,000 ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்து, நாட்டியாவதானம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, அதனை நிறைவேற்றி உள்ளோம். சிறு வயதிலிருந்தே இவ்வாறு ஏதோ ஒரு சாதனை செய்வதே எங்கள் வாழ்க்கையாக உள்ளது. எனது அக்கா செய்யுள் இலக்கியத்தில் அவதானம் செய்கிறாள். நான் நாட்டியத்தில் அவதானம் செய்வதற்காகத் தயாராகி வருகிறேன். அக்கா ஐந்தாவது வகுப்பு படிக்கும்போது முதன்முதலில் கணிதாவதானம் செய்தாள். நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போது கணிதாவதானம் ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து இதுவரை பத்து அவதானங்கள் செய்துள்ளோம்.".குமாரிகள் மனீஷாவும் சிரீஷாவும் மென்மேலும் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்று, உன்னத உயரங்களை எட்ட வேண்டும் என்று விரும்பி வாழ்த்துவோம். இந்த கலைச் சகோதரிகளின் தந்தையாரான ஜங்கம் ஸ்ரீனிவாச சக்ரவர்த்தி, 'கீதாவதானம்' எவ்வாறு செய்யப்படும் என்பதை விளக்கமாகக் கூறினார்..பகவத்கீதை அவதானம் என்றால்…1. ஸ்லோகத்தின் எண்ணிக்கை : பகவத் கீதையில் உள்ள 700 ஸ்லோகங்களில் எந்த அத்தியாயத்தில் எந்த ஸ்லோக எண்ணைச் சொன்னாலும் அந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.2. ந்யஸ்தாக்ஷரி என்றால் : ஒரு ஸ்லோகத்தில் ஆங்காங்கே எழுத்துக்களைக் கொடுப்பார் கள். இறுதியில், மொத்த ஸ்லோகத்தையும் சொல்ல வேண்டும்.3. தத்தபதி என்பது : ஒரு சொல்லைச் சொல்வார்கள். அந்தச் சொல் எந்த ஸ்லோகத்தில் உள்ளது? எத்தனையாவது அத்தியாயத்தில் உள்ளது? என்று கேட்டால் அதற்கு உடனுக் குடன் பதில் சொல்ல வேண்டும்.4. பாத வ்யதிக்ரமம் என்றால் : ஒரு சுலோகத்தில் ஏதோ ஒரு வரி சொல்வார்கள். அந்த வரி உள்ள சுலோகம் முழுவதையும் சொல்ல வேண்டும்.5. ஸ்லோகதாரா என்றால் : ஒரு அத்தியாயத்தில் அவர்கள் ஒரு எண்ணைக் கூறுவார்கள். அதாவது, இரண்டு என்ற எண்ணைக் கூறினால், அந்த அத்தியாயத்தில் உள்ள 2, 12, 22, 32 என்பது போல, அந்த எண்ணிக்கையில் உள்ள சுலோகங்களைக் கூற வேண்டும்.6. ஸ்லோகார்த்த தாத்பரியம் என்றால் : எந்த ஸ்லோகம் கேட்டாலும் அதற்கு உடனே அர்த்தம் கூற வேண்டும்.7. ஸ்லோக ஆரோகண அவரோகணம் என்றால் : பகவத் கீதையில் ஐந்து அல்லது பத்து ஸ்லோகங்கள் கேட்பார்கள். அவற்றைக் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் கூற வேண்டும்.8. பிரஸ்துதி பிரசங்கம் என்றால் : பகவத் கீதை மீது கேட்கும் கேள்விகளுக்கு சாமர்த்திமாக பதிலளிக்க வேண்டும் என்று விவரித்தார்.