தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு!

தமிழகத்தில் நாளை (அக்டோபர் -6) உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி,  வார்டு உறுப்பினர், மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளையும், வருகிற ஞாயிறுக்கிழமையு (அக்டோபர் – 9) ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று 5 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் நாளை உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com