தலையங்கம்.உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது..2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்குமுள்ள பல கோடிக்கணக்கான பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கெளரவம்..மக்களாட்சியைத் தாங்கும் நான்கு தூண்களாக மதிக்கப்படுபவை நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை,பத்திரிகைத்துறை. இவற்றில் உலகெங்கும் பல காலமாகப் பல நாடுகளில் பத்திரிகைத்துறை அடக்குமுறைகளை சந்தித்து வந்திருக்கிறது. அதிகாரங்களை எதிர்த்து குரல் எழுப்பியே வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில் உலகின் பெருமைமிக்க விருதாகக் கருதப்படும் நோபல் அமைதி விருது பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது..எல்லா நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்படுவார்கள். ஆனால், மக்களுக்கு எதிராகச் செயல்படும் அரசுகள் பத்திரிகையாளர்களை எதிரிகளாகக் கருதி அவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுகின்றன. அவைகளையும் மீறி அடிக்க அடிக்கத் துள்ளியெழும் பந்தைப்போல் பத்திரிகையாளர்கள் எழுந்தார்களே தவிர, துவண்டுவிடவில்லை..அப்படி எழுந்த, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தைரியமான போராட்டத்தை முன்னெடுத்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவுக்கும் இந்த ஆண்டு நோபல் விருது பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..பரிசை அறிவித்த நோபல் கமிட்டி "இவர்கள் இருவரும், தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் பத்திரிகையாளர்கள்… அனைவருக்குமான பிரதிநிதிகள். 'ராப்ளர்' என்ற செய்தி தளத்தின் துணை நிறுவனரான மரியா ரெஸ்ஸா, தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தவும், அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தவும் தனது கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தினார். 'நோவாஜா கெஜெட்டா' என்ற செய்தித்தாளின் துணை நிறுவனரான டிமிட்ரி முரடோவ், பல ஆண்டுகளாக ரஷ்யாவில் கருத்துச் சுதந்திரத்தை அதிகச் சவாலான சூழ்நிலையில் பாதுகாத்து வந்தவர்" என்று பாராட்டியுள்ளது..இந்த ஆண்டு நோபல் பரிசுக்குழு இந்த விருதைப் பத்திரிகையாளர்களுக்கு அளிப்பதின் மூலம் அவர்களின் பணியை கெளரவிப்பதோடு கருத்துச் சுதந்திர அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கு "பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்" என்ற செய்தியையும் பதிவு செய்திருக்கிறது.
தலையங்கம்.உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது..2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்குமுள்ள பல கோடிக்கணக்கான பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கெளரவம்..மக்களாட்சியைத் தாங்கும் நான்கு தூண்களாக மதிக்கப்படுபவை நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை,பத்திரிகைத்துறை. இவற்றில் உலகெங்கும் பல காலமாகப் பல நாடுகளில் பத்திரிகைத்துறை அடக்குமுறைகளை சந்தித்து வந்திருக்கிறது. அதிகாரங்களை எதிர்த்து குரல் எழுப்பியே வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில் உலகின் பெருமைமிக்க விருதாகக் கருதப்படும் நோபல் அமைதி விருது பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது..எல்லா நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்படுவார்கள். ஆனால், மக்களுக்கு எதிராகச் செயல்படும் அரசுகள் பத்திரிகையாளர்களை எதிரிகளாகக் கருதி அவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுகின்றன. அவைகளையும் மீறி அடிக்க அடிக்கத் துள்ளியெழும் பந்தைப்போல் பத்திரிகையாளர்கள் எழுந்தார்களே தவிர, துவண்டுவிடவில்லை..அப்படி எழுந்த, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தைரியமான போராட்டத்தை முன்னெடுத்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவுக்கும் இந்த ஆண்டு நோபல் விருது பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..பரிசை அறிவித்த நோபல் கமிட்டி "இவர்கள் இருவரும், தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் பத்திரிகையாளர்கள்… அனைவருக்குமான பிரதிநிதிகள். 'ராப்ளர்' என்ற செய்தி தளத்தின் துணை நிறுவனரான மரியா ரெஸ்ஸா, தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தவும், அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தவும் தனது கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தினார். 'நோவாஜா கெஜெட்டா' என்ற செய்தித்தாளின் துணை நிறுவனரான டிமிட்ரி முரடோவ், பல ஆண்டுகளாக ரஷ்யாவில் கருத்துச் சுதந்திரத்தை அதிகச் சவாலான சூழ்நிலையில் பாதுகாத்து வந்தவர்" என்று பாராட்டியுள்ளது..இந்த ஆண்டு நோபல் பரிசுக்குழு இந்த விருதைப் பத்திரிகையாளர்களுக்கு அளிப்பதின் மூலம் அவர்களின் பணியை கெளரவிப்பதோடு கருத்துச் சுதந்திர அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கு "பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்" என்ற செய்தியையும் பதிவு செய்திருக்கிறது.