வாசகர் ஜமாய்க்கிறாங்க!.* தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும்!.* ஒரு குக்கரைப் போல இருங்கள்… பிரஷர் அதிகமாகும்போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!.* சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல… கிள்ளி எறிந்து விட வேண்டும்!.* வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!.* கோபத்தை உப்பைப் போல பயன்படுத்துங்கள். அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!.* தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிபி போல… சமைப்பது உங்கள் கையில்தான்!.* வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது… வெந்த பின்தான் தெரியும்!.வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது… நட்பு என்ற சட்னி வேண்டும்!.– நிர்மலா தேவி, மதுரை.பித்தம் போக்கும் சித்த மருத்துவம்!.* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீங்கி, உடல் பலம் பெறும்..* இஞ்சி துண்டை தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்..* ரோஜாப்பூ கஷாயம், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர், சிறுநீருடன் வெளியேறும்..* வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் எலுமிச்சை சாதம் சாப்பிட்டால் பித்தம் தணிக்கும்..* சாப்பாட்டில், ஊறுகாய்க்கு பதிலாக உப்பு நார்த்தங்காய் சேர்த்துக் கொள்வதால் பித்தம் அறவே நீங்கும்..* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்..* ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் பித்தம் தணியும்..* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்த பாண்டு தீரும்..* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து, அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி, பின் ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்..* எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து, அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால், பித்தம் தணியும்..* பச்சரிசியை பசும்பாலில் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சியாக்கினால் கிடைப்பதே பால் கஞ்சி. இதைக் குடிப்பதால் உடலின் உள் சூடு தணிந்து, பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்..– பி.மஹதி
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.* தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும்!.* ஒரு குக்கரைப் போல இருங்கள்… பிரஷர் அதிகமாகும்போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!.* சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல… கிள்ளி எறிந்து விட வேண்டும்!.* வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!.* கோபத்தை உப்பைப் போல பயன்படுத்துங்கள். அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!.* தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிபி போல… சமைப்பது உங்கள் கையில்தான்!.* வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது… வெந்த பின்தான் தெரியும்!.வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது… நட்பு என்ற சட்னி வேண்டும்!.– நிர்மலா தேவி, மதுரை.பித்தம் போக்கும் சித்த மருத்துவம்!.* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீங்கி, உடல் பலம் பெறும்..* இஞ்சி துண்டை தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்..* ரோஜாப்பூ கஷாயம், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர், சிறுநீருடன் வெளியேறும்..* வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் எலுமிச்சை சாதம் சாப்பிட்டால் பித்தம் தணிக்கும்..* சாப்பாட்டில், ஊறுகாய்க்கு பதிலாக உப்பு நார்த்தங்காய் சேர்த்துக் கொள்வதால் பித்தம் அறவே நீங்கும்..* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்..* ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் பித்தம் தணியும்..* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்த பாண்டு தீரும்..* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து, அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி, பின் ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்..* எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து, அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால், பித்தம் தணியும்..* பச்சரிசியை பசும்பாலில் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சியாக்கினால் கிடைப்பதே பால் கஞ்சி. இதைக் குடிப்பதால் உடலின் உள் சூடு தணிந்து, பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்..– பி.மஹதி