ராசி பாஸ்கர்."குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் பொருட்களை வைத்தால்தான் வேகவைக்க முடிகிறது. அதேபோல் நமது உடலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நடமாடும் அடுப்பாக உள்ளது. மனித உடலின் இயக்கத்திற்குப் பல உறுப்புகளின் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இந்த உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு உடலிலுள்ள செல்களும் அவற்றில் நடைபெறும் வினைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன" என்கிறார் திருவனந்தபுரம், இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் பெ.சசிக்குமார். அவரிடம் பேசினோம்..உடல் தட்பவெப்பத்திற்குச் செல்கள் எவ்வளவு முக்கியம்?."கோடிக்கணக்கான செல்கள் தினமும் இறந்து, புதியவை பிறப்பதால்தான் நமது உடல் உயிர் வாழ்கின்றது. இந்தச் செல்களில் நடக்கும் வேதிவினைகளில் முக்கியப் பங்காற்றுவது என்சைம்கள் எனப்படும் நொதிகள். இந்த வேதிவினைகள் சரியாக நடைபெற சரியான தட்பவெட்பநிலை மிக அவசியம். அந்தத் தட்பவெட்ப நிலைதான் மனித உடலுக்குத் தேவையான வெப்பமாக வரையறுக்கப்படுகிறது. வெப்பநிலை அதிகரித்தாலும் குறைந்தாலும் உடலில் ஏற்படும் வேதிவினைகள் சரிவர நடைபெறாமல் போகும். அது உடலிலுள்ள உறுப்புகளைச் செயலிழக்கச் செய்துவிடும்.".உடல் வெப்பம் எந்தளவுக்குமேல் போகக் கூடாது?."வெவ்வேறு அலகுகளில் உடலின் வெப்ப நிலையைக் குறிப்பிடும்பொழுது அது வேறு விதமாகக் குறிப்பிடப்படுகிறது. 100 டிகிரி காய்ச்சல் என்றால் அங்கே வெப்பநிலை பாரன்ஹீட் அலகில் குறிப்பிடப்படுகிறது. பெருநகரங்களில் சாலையைக் கடக்கும் பொழுது வெப்பநிலை செல்சியஸ் அலகில் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடியும். உடலின் வெப்பநிலையைப் பாரன்ஹீட்டில் கூறும் பொழுது 98.6 மற்றும் செல்சியஸில் கூறும் போது 37 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெப்பநிலை 97-99 பாரன் ஹீட்டில் இருந்தாலும் உடல் செயல்பாட்டில் பிரச்னைகள் ஏதும் இருக்காது..106 டிகிரிக்கு மேல் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது வேதிவினைகள் நடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு அவை உடல் உறுப்புகளின் கோளாறுக்குக் காரணமாகிறது. அதுவே வெப்பநிலை குறையும் பொழுது இதே போன்ற செயல்கள் நடைபெறுகிறது. உதாரணத்திற்கு, ரத்தத்தைக் கொண்டுசெல் லும் ரத்தநாளங்களில் அளவு குறைந்து, போதுமான அளவு பிராணவாயு மற்றும் சத்துக்களைக் கொண்டுசெல்ல இயலாமல், இதயம் வேகமாக இயங்கி ரத்த மண்டலம் செயலற்றுப் போகிறது.".சுற்றுப்புறச் சூழலைப் பொறுத்து ஏற்படும் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் எவை?."நாம் உண்ணும் உணவு வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு உடலின் வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவு வைப்பதற்கு உதவி செய்கிறது. நமது அறையில் சூடாக வைக்கப்பட்ட தேநீர் வெப்ப வேறுபாட்டின் காரணமாக, அறையில் உள்ள வளிமண்டல காற்றுக்குக் கடத்தப்படும்பொழுது அதன் வெப்பநிலை குறைகிறது. அதுவே, அறையின் வெப்ப நிலையும், தேநீரின் வெப்பநிலையும் ஒரே மாதிரி உள்ள அறையில் வைக்கப்படும் பொழுது தேநீரின் வெப்பம் குறைவதில்லை..இதைப்போலவே நாம் இருக்கும் இடத்தில் உள்ள வெப்பநிலையைப் பொறுத்து நமது உடம்பில் இருந்து வெளியேறும் வெப் பத்தின் அளவு மாறுபடுகிறது. அதற்கு ஏற்ற வாறு நமது உடலில் உருவாக்கவேண்டிய வெப்ப ஆற்றலின் தேவையும் வேறுபடுகிறது.".அப்படியென்றால் வெப்பம் கடத்தப்படுவதில் பல வழிமுறைகள் உள்ளனவா?."வெப்பம் மூன்று விதமாகக் கடத்தப்படுகிறது. பொருளைத் தொடும்பொழுது நமது கையில் உள்ள வெப்பம் தொட்ட பொருளுக்குக் கடத்தப்படுவது. இதேபோல் குளிர்ந்த தரையில் படுக்கும்பொழுது வெப்பப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்த வகையான முறையை வெப்பக்கடத்தல் என்கிறோம். மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பொருட்களை நாம் தொடும்பொழுது நரம்புகளால் நமக்குச் சமிக்ஞை கிடைத்ததும் உடனடியாக உடல் பாகங்கள் தொடுவதி லிருந்து விலக்கிக் கொள்கிறோம்..குளிர்ந்த காற்று வீசும்பொழுது அது நமது உடலின் பாகங்களில் பட்டு உடல் மீது உள்ள வெப்பத்தை எடுத்துக்கொண்டு செல்கிறது. இதை வெப்பச்சலனம் என்று கூறுகிறோம்..தகதகக்கும் சூரியனிலிருந்து வெப்பக் கதிர்வீச்சு மூலமாகப் புவிக்கு வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. குளிர் காய்வதற்கு, எரியும் விறகிற்குச் சிறிது தூரத்திற்கு அருகில் நாம் அமர்ந்திருந்தாலும், விறகு எரிவதால் கிடைக்கும் வெப்பம் நமது உடம்புக்குக் கிடைக்கிறது. அதே போல் நமது உடலில் இருந்த வெப்பமும் வளிமண்டலத்தில் உள்ள காற்றுக்குக் கடத்தப் படுகிறது. ஆனால் இது நடப்பதற்கு வளி மண்டலத்தில் காற்றின் வெப்பம் 20 செல்சிய ஸுக்குக் குறைவாக இருந்தால்தான் இதன் அளவு அதிகமாக இருக்கும்..குளிரான பகுதியில் வசிப்பவர்களுக்கு அவர்களது உடலின் வெப்ப நிலையைத் தக்கவைத்துக்கொள்ள அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை உருவாக்கு வதற்காக அவர்கள் வெப்பமான பகுதியில் வாழ்பவர்களைவிட அதிக அளவு உணவு உட் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் வெப்ப ஆற்றலாக உடலில் மாற்றப்படுவதால் உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவுகிறது.".வெப்பத்தை அதிகரிக்க மனிதச் செயல்பாடு கள் எப்படி இருக்கும்?."மனித உடலின் சராசரி பரப்பு 1.5 லிருந்து 1.9 சதுர மீட்டராக இருக்கும். இதில் எந்த அளவு குளிர்ந்த காற்றில் தொட்டுக்கொண்டு இருக்கிறதோ அதைப் பொறுத்து நமது உடம்பில் இருந்து வெளியேறும் வெப்ப ஆற்றலின் அளவு மாறுபடும். குளிரின்போது கைகளைக் கட்டிக்கொள்வதும், உடலை குறுக்கி வைத்துப் படுப்பதும் உடலின் பரப்பளவைக் குறைப்பதற்கான சில உத்தி களாகும். குளிரில் உடல் நடுங்குவது தசைகளை வேகமாக அசைப்பதன் மூலம் வெப் பத்தை உருவாக்குவதற்கு உடல் உருவாக்கும் ஒரு முதற்கட்ட முயற்சியாகும். அது சில நிமிடங்கள் மட்டுமே உதவும்..சாதாரணமாக, நாம் வேலை செய்தாலும் செய்யவில்லை என்றாலும் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றல் தேவைப்படுகிறது..கடினமாக வேலை செய்தால் தேவைப்படும் ஆற்றல், ஓய்வு நிலையில் இருக்கும்போது தேவைப்படும் வளர்சிதை மாற்றத்தின் ஆற்றலைப் போல் இருமடங்காகத்தான் இருக்கும். அதுவே குளிர்ப் பிரதேசத்தில் இருக்கும்பொழுது உடலின் வெப்பநிலையைத் தக்கவைத்துக்கொள்ள உண்ணவேண் டிய உணவு, வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஆற்றலின் அளவில் 50-75 விழுக்காடு வரை இருக்கும்.".குழந்தைகளின் வெப்பநிலை மாற்றம் எப்படிப் பட்டதாக இருக்கும்?."பிறந்த குழந்தையின் உடலின் பரப்பளவிற்கும் அதன் எடைக்கும் உள்ள விகிதம் வளர்ந்த மனிதர்களைவிட அதிகமாக இருப்பதால் குழந்தையின் உடலிலிருந்து ஏற்படும் வெப்ப இழப்பு அதிகமாக இருக்கும். அதைச் சரி செய்வதற்காகக் குழந்தைகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதே போல் சிறு குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி நடந்துகொண்டே இருப்பதால் உடலில் வளர்சிதை மாற்றத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் ஓடியாடும் குழந்தைகளின் உடலின் வெப்ப நிலையும் சிறிது அதிகமாக இருக்கும். நாம் உடற்பயிற்சி செய்யும்பொழுதும், விளை யாட்டு வீரர்கள் ஓடும்பொழுதும் அவர்கள் உடலில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பு, அதிகப் படியான வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு.".மற்ற உயிரினங்களுக்கு உடல் வெப்பநிலை எப்படி மாறுபடுகிறது?."நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப வளர் சிதை மாற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலின் அளவு மாறுபடுகிறது. உலகிலுள்ள விலங்கினங்களில் ரீங்காரப் பறவைதான் அதிவேகமாக இறக்கைகளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்குத் தேவைப்படும் ஆற்றலை நமக்குத் தேவைப் படும் ஆற்றலுடன் ஒப்பிட்டால், ரீங்காரப் பறவைக்குப் பலமடங்கு ஆற்றல் தேவைப் படும். அது ஒரு மணி நேரம் நிற்காமல் பறப்பதற்கு எடையில் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு எடை குறையும் அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால்தான் இடையிடையே தேன் மற்றும் பூவில் இருக்கும் சர்க்கரை நீரைப் பருகி தனது ஆற்றல்.செலவினத்தைச் சமன் செய்கிறது.".உடல் வெப்ப பாதிப்பினால் உள் உறுப்புகள் பாதிக்குமா?."உடலில் உள்ள வெப்ப ஆற்றலை இழக் காமல் இருப்பதற்காக நாம் உடுத்தும் ஆடைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. உடலின் கீழ் பகுதியைவிட மேல் பகுதியில்தான் முக்கியமான உடல் உறுப்புகளான இதயம், கணையம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் என்று பல பாகங்களின் இயக்கம் நடைபெறு கிறது. குளிரான பகுதிக்கு நாம் செல்லும் பொழுது மேல்பாகத்தை முழுவதுமாக மூடக் கூடிய துணிகளை அணிகிறோம்..ஒரு சூடான பொருளிலிருந்து வெப்ப இழப்பு எவ்வளவு வேகத்தில் நடைபெறும் என்பதை அதன் வெப்பக் கடத்துத் திறன் தீர்மானிக்கிறது. கண்ணாடி டம்ளரில் வைக் கப்பட்டுள்ள தேநீர் எவர்சில்வர் டம்ளரில் வைக்கப்பட்டுள்ள தேநீரைவிட மெதுவாகச் சூடு குறைவதற்குக் கண்ணாடியின் வெப்பக் கடத்துத் திறன் குறைவாக இருப்பதே காரணம். நமது உடலிலுள்ள தோலும் கண்ணாடி டம்ளரைவிடக் குறைவான வெப்பக் கடத்துத் திறனைக் கொண்டுள்ளது. இருந்தபோதும் உடலைவிடச் சுற்றுப்புறச் சூழல் குறைந்த வெப்பநிலையில் இருக்கும் பொழுது உடலிலுள்ள வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குக் கடத்தப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக நாம் சரியான ஆடைகளை அணிய வேண்டும்..உடலில் உள்ள வெப்பநிலையைக் கட்டுக் குள் வைப்பதற்கு ஸ்வட்டர் (sweater) அணிகிறோம். ஆங்கிலத்தில் வியர்வையை (swear) உண்டாக்கக்கூடிய துணி என்ற பொருள்படும் வகையில் இந்தப் பெயர் வந்தது. உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளி யேறும். இப்படி வியர்வை வெளியே வருவ தால் உடலின் எடையைக் குறைப்பதற்கு இது ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் இந்தப் பெயர் வந்தது.".உடற்பயிற்சியின்போது ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் என்ன?."சாதாரணமாக நடை பயிற்சி செய்யும் பொழுது நாம் அணியும் ஆடைகளுடன் ஸ்வெட்டரை ஒப்பிட்டால் அதன் வெப்ப கடத்துத்திறன் பத்து மடங்கு குறைவாக இருக்கும். அதனால் உடலிலிருந்து வளி மண்டலத்திற்குக் கடத்தப்படும் வெப்பம் குறைவாக இருக்கும். அதுவே வெப்பம் அதிகமான பகுதியில் நாம் இருக்கும்பொழுது வளிமண்டலத்தில் இருந்து உடலுக்குக் கடத்தப்படும் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். அங்கே ஆடை பயன் தராது. அதனால் உடல் அதிகப்படியான வியர்வையை வெளியேற்றி உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.".ஓய்வு நிலையில் அமர்ந்து கொண்டிருக்கும் மனித உடலிலிருந்து ஏற்படும் வெப்ப இழப்புகள் என்ன?."கார் மற்றும் பேருந்துகளில் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைப்பதற்கு ரேடியேட்டர் எனப்படும் தண்ணீரால் குளிர் விக்கும் அமைப்புகள் உள்ளன. ஆனால் இருசக்கர வாகனங்களில் இதுபோன்ற தனியாகக் குளிர்விக்கும் அமைப்புகள் ஏதும் இல்லை. அதற்குப் பதிலாக அவை ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, பரப்பளவை அதிகரிப்பதற் காகப்பின் (fin) எனப்படும் அமைப்புகள் உள்ளன. இந்தக் கூரிய நுனி உடைய அமைப்பு கள் இயந்திரத்தில் உருவாகும் வெப்பத்தை வேகமாக வளிமண்டலத்திற்குக் கடத்துவதற்கு உதவுகின்றன. இதைப்போலவே நாம் குளிரில் செல்லும்பொழுதும் உடல் பாகங்களைவிட அதிகமான வெப்பத்தைக் கடத்தும் பகுதிகளாக நமது கை மற்றும் கால் விரல்கள் உரு மாறுகின்றன. அதனால்தான் உடனடியாகக் கை மற்றும் கால் விரல்களை உறைகள் கொண்டு மூடுவதால், உடனடியாக ஏற்படும் வெப்ப இழப்பு குறைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வளிமண்டலக் காற்று உட லின் பாகங்களைத் தொடுவதை முடிந்தவரை குறைப்பதன் மூலம் உடலிலிருந்து ஏற்படும் வெப்ப இழப்பை கணிசமாகக் குறைக்க முடிகிறது.".காய்ச்சல் வரக் காரணம் என்ன?."உடலில் ஏதாவது தொற்று ஏற்படும் பொழுது அதை விரட்டுவதற்காக உடல் அதை எதிர்த்து தனது போராட்டத்தைத் தொடங்குகிறது. போராட்டம் நடந்து கொண் டிருக்கும்பொழுது அதன் விளைவாக உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. அதனால்தான் காய்ச்சல் அடிக்கும்பொழுது, அது உடலில் நடந்துகொண்டிருக்கும் ஏதாவது ஒரு செய லில் சமிக்ஞையை நமக்குத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக காய்ச்சல் இருக்கிறது. பல் வேறு காரணங்களால் உடலின் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்ன என்று ஆராய்ந்து சரியான மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும்.".காய்ச்சல் கண்டபோது கைகளைத் திருப்பிப் பரிசோதிப்பது எதனால்?."நமது உள்ளங்கையில் வெளிர் நிறத்திலும் பொருட்களைத் தூக்குவதற்கு, பிடிப்பதற்கு ஏதுவாக ரேகைகள் உருவாகிவிட்டதால், அவற்றின் வெப்பக் கடத்துத் திறன் உடலில் உள்ள மற்ற தோல்களின் வெப்பக் கடத்துத் திறனைவிட வேறு விகிதத்தில் இருக்கும். அதனால்தான் காய்ச்சல் அடிக்கிறதா என்று பார்ப்பதற்கு உள்ளங்கையால் தொட்டுப் பார்க்காமல் கையைத் திருப்பி விரல்களுக்கு மேல் உள்ள தோல் பகுதி உடலை தொடுமாறு வைத்து உடலின் வெப்பம் எவ்வளவு என்று பார்க்கிறோம்."
ராசி பாஸ்கர்."குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் பொருட்களை வைத்தால்தான் வேகவைக்க முடிகிறது. அதேபோல் நமது உடலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நடமாடும் அடுப்பாக உள்ளது. மனித உடலின் இயக்கத்திற்குப் பல உறுப்புகளின் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இந்த உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு உடலிலுள்ள செல்களும் அவற்றில் நடைபெறும் வினைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன" என்கிறார் திருவனந்தபுரம், இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் பெ.சசிக்குமார். அவரிடம் பேசினோம்..உடல் தட்பவெப்பத்திற்குச் செல்கள் எவ்வளவு முக்கியம்?."கோடிக்கணக்கான செல்கள் தினமும் இறந்து, புதியவை பிறப்பதால்தான் நமது உடல் உயிர் வாழ்கின்றது. இந்தச் செல்களில் நடக்கும் வேதிவினைகளில் முக்கியப் பங்காற்றுவது என்சைம்கள் எனப்படும் நொதிகள். இந்த வேதிவினைகள் சரியாக நடைபெற சரியான தட்பவெட்பநிலை மிக அவசியம். அந்தத் தட்பவெட்ப நிலைதான் மனித உடலுக்குத் தேவையான வெப்பமாக வரையறுக்கப்படுகிறது. வெப்பநிலை அதிகரித்தாலும் குறைந்தாலும் உடலில் ஏற்படும் வேதிவினைகள் சரிவர நடைபெறாமல் போகும். அது உடலிலுள்ள உறுப்புகளைச் செயலிழக்கச் செய்துவிடும்.".உடல் வெப்பம் எந்தளவுக்குமேல் போகக் கூடாது?."வெவ்வேறு அலகுகளில் உடலின் வெப்ப நிலையைக் குறிப்பிடும்பொழுது அது வேறு விதமாகக் குறிப்பிடப்படுகிறது. 100 டிகிரி காய்ச்சல் என்றால் அங்கே வெப்பநிலை பாரன்ஹீட் அலகில் குறிப்பிடப்படுகிறது. பெருநகரங்களில் சாலையைக் கடக்கும் பொழுது வெப்பநிலை செல்சியஸ் அலகில் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடியும். உடலின் வெப்பநிலையைப் பாரன்ஹீட்டில் கூறும் பொழுது 98.6 மற்றும் செல்சியஸில் கூறும் போது 37 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெப்பநிலை 97-99 பாரன் ஹீட்டில் இருந்தாலும் உடல் செயல்பாட்டில் பிரச்னைகள் ஏதும் இருக்காது..106 டிகிரிக்கு மேல் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது வேதிவினைகள் நடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு அவை உடல் உறுப்புகளின் கோளாறுக்குக் காரணமாகிறது. அதுவே வெப்பநிலை குறையும் பொழுது இதே போன்ற செயல்கள் நடைபெறுகிறது. உதாரணத்திற்கு, ரத்தத்தைக் கொண்டுசெல் லும் ரத்தநாளங்களில் அளவு குறைந்து, போதுமான அளவு பிராணவாயு மற்றும் சத்துக்களைக் கொண்டுசெல்ல இயலாமல், இதயம் வேகமாக இயங்கி ரத்த மண்டலம் செயலற்றுப் போகிறது.".சுற்றுப்புறச் சூழலைப் பொறுத்து ஏற்படும் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் எவை?."நாம் உண்ணும் உணவு வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு உடலின் வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவு வைப்பதற்கு உதவி செய்கிறது. நமது அறையில் சூடாக வைக்கப்பட்ட தேநீர் வெப்ப வேறுபாட்டின் காரணமாக, அறையில் உள்ள வளிமண்டல காற்றுக்குக் கடத்தப்படும்பொழுது அதன் வெப்பநிலை குறைகிறது. அதுவே, அறையின் வெப்ப நிலையும், தேநீரின் வெப்பநிலையும் ஒரே மாதிரி உள்ள அறையில் வைக்கப்படும் பொழுது தேநீரின் வெப்பம் குறைவதில்லை..இதைப்போலவே நாம் இருக்கும் இடத்தில் உள்ள வெப்பநிலையைப் பொறுத்து நமது உடம்பில் இருந்து வெளியேறும் வெப் பத்தின் அளவு மாறுபடுகிறது. அதற்கு ஏற்ற வாறு நமது உடலில் உருவாக்கவேண்டிய வெப்ப ஆற்றலின் தேவையும் வேறுபடுகிறது.".அப்படியென்றால் வெப்பம் கடத்தப்படுவதில் பல வழிமுறைகள் உள்ளனவா?."வெப்பம் மூன்று விதமாகக் கடத்தப்படுகிறது. பொருளைத் தொடும்பொழுது நமது கையில் உள்ள வெப்பம் தொட்ட பொருளுக்குக் கடத்தப்படுவது. இதேபோல் குளிர்ந்த தரையில் படுக்கும்பொழுது வெப்பப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்த வகையான முறையை வெப்பக்கடத்தல் என்கிறோம். மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பொருட்களை நாம் தொடும்பொழுது நரம்புகளால் நமக்குச் சமிக்ஞை கிடைத்ததும் உடனடியாக உடல் பாகங்கள் தொடுவதி லிருந்து விலக்கிக் கொள்கிறோம்..குளிர்ந்த காற்று வீசும்பொழுது அது நமது உடலின் பாகங்களில் பட்டு உடல் மீது உள்ள வெப்பத்தை எடுத்துக்கொண்டு செல்கிறது. இதை வெப்பச்சலனம் என்று கூறுகிறோம்..தகதகக்கும் சூரியனிலிருந்து வெப்பக் கதிர்வீச்சு மூலமாகப் புவிக்கு வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. குளிர் காய்வதற்கு, எரியும் விறகிற்குச் சிறிது தூரத்திற்கு அருகில் நாம் அமர்ந்திருந்தாலும், விறகு எரிவதால் கிடைக்கும் வெப்பம் நமது உடம்புக்குக் கிடைக்கிறது. அதே போல் நமது உடலில் இருந்த வெப்பமும் வளிமண்டலத்தில் உள்ள காற்றுக்குக் கடத்தப் படுகிறது. ஆனால் இது நடப்பதற்கு வளி மண்டலத்தில் காற்றின் வெப்பம் 20 செல்சிய ஸுக்குக் குறைவாக இருந்தால்தான் இதன் அளவு அதிகமாக இருக்கும்..குளிரான பகுதியில் வசிப்பவர்களுக்கு அவர்களது உடலின் வெப்ப நிலையைத் தக்கவைத்துக்கொள்ள அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை உருவாக்கு வதற்காக அவர்கள் வெப்பமான பகுதியில் வாழ்பவர்களைவிட அதிக அளவு உணவு உட் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் வெப்ப ஆற்றலாக உடலில் மாற்றப்படுவதால் உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவுகிறது.".வெப்பத்தை அதிகரிக்க மனிதச் செயல்பாடு கள் எப்படி இருக்கும்?."மனித உடலின் சராசரி பரப்பு 1.5 லிருந்து 1.9 சதுர மீட்டராக இருக்கும். இதில் எந்த அளவு குளிர்ந்த காற்றில் தொட்டுக்கொண்டு இருக்கிறதோ அதைப் பொறுத்து நமது உடம்பில் இருந்து வெளியேறும் வெப்ப ஆற்றலின் அளவு மாறுபடும். குளிரின்போது கைகளைக் கட்டிக்கொள்வதும், உடலை குறுக்கி வைத்துப் படுப்பதும் உடலின் பரப்பளவைக் குறைப்பதற்கான சில உத்தி களாகும். குளிரில் உடல் நடுங்குவது தசைகளை வேகமாக அசைப்பதன் மூலம் வெப் பத்தை உருவாக்குவதற்கு உடல் உருவாக்கும் ஒரு முதற்கட்ட முயற்சியாகும். அது சில நிமிடங்கள் மட்டுமே உதவும்..சாதாரணமாக, நாம் வேலை செய்தாலும் செய்யவில்லை என்றாலும் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றல் தேவைப்படுகிறது..கடினமாக வேலை செய்தால் தேவைப்படும் ஆற்றல், ஓய்வு நிலையில் இருக்கும்போது தேவைப்படும் வளர்சிதை மாற்றத்தின் ஆற்றலைப் போல் இருமடங்காகத்தான் இருக்கும். அதுவே குளிர்ப் பிரதேசத்தில் இருக்கும்பொழுது உடலின் வெப்பநிலையைத் தக்கவைத்துக்கொள்ள உண்ணவேண் டிய உணவு, வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஆற்றலின் அளவில் 50-75 விழுக்காடு வரை இருக்கும்.".குழந்தைகளின் வெப்பநிலை மாற்றம் எப்படிப் பட்டதாக இருக்கும்?."பிறந்த குழந்தையின் உடலின் பரப்பளவிற்கும் அதன் எடைக்கும் உள்ள விகிதம் வளர்ந்த மனிதர்களைவிட அதிகமாக இருப்பதால் குழந்தையின் உடலிலிருந்து ஏற்படும் வெப்ப இழப்பு அதிகமாக இருக்கும். அதைச் சரி செய்வதற்காகக் குழந்தைகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதே போல் சிறு குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி நடந்துகொண்டே இருப்பதால் உடலில் வளர்சிதை மாற்றத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் ஓடியாடும் குழந்தைகளின் உடலின் வெப்ப நிலையும் சிறிது அதிகமாக இருக்கும். நாம் உடற்பயிற்சி செய்யும்பொழுதும், விளை யாட்டு வீரர்கள் ஓடும்பொழுதும் அவர்கள் உடலில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பு, அதிகப் படியான வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு.".மற்ற உயிரினங்களுக்கு உடல் வெப்பநிலை எப்படி மாறுபடுகிறது?."நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப வளர் சிதை மாற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலின் அளவு மாறுபடுகிறது. உலகிலுள்ள விலங்கினங்களில் ரீங்காரப் பறவைதான் அதிவேகமாக இறக்கைகளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்குத் தேவைப்படும் ஆற்றலை நமக்குத் தேவைப் படும் ஆற்றலுடன் ஒப்பிட்டால், ரீங்காரப் பறவைக்குப் பலமடங்கு ஆற்றல் தேவைப் படும். அது ஒரு மணி நேரம் நிற்காமல் பறப்பதற்கு எடையில் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு எடை குறையும் அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால்தான் இடையிடையே தேன் மற்றும் பூவில் இருக்கும் சர்க்கரை நீரைப் பருகி தனது ஆற்றல்.செலவினத்தைச் சமன் செய்கிறது.".உடல் வெப்ப பாதிப்பினால் உள் உறுப்புகள் பாதிக்குமா?."உடலில் உள்ள வெப்ப ஆற்றலை இழக் காமல் இருப்பதற்காக நாம் உடுத்தும் ஆடைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. உடலின் கீழ் பகுதியைவிட மேல் பகுதியில்தான் முக்கியமான உடல் உறுப்புகளான இதயம், கணையம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் என்று பல பாகங்களின் இயக்கம் நடைபெறு கிறது. குளிரான பகுதிக்கு நாம் செல்லும் பொழுது மேல்பாகத்தை முழுவதுமாக மூடக் கூடிய துணிகளை அணிகிறோம்..ஒரு சூடான பொருளிலிருந்து வெப்ப இழப்பு எவ்வளவு வேகத்தில் நடைபெறும் என்பதை அதன் வெப்பக் கடத்துத் திறன் தீர்மானிக்கிறது. கண்ணாடி டம்ளரில் வைக் கப்பட்டுள்ள தேநீர் எவர்சில்வர் டம்ளரில் வைக்கப்பட்டுள்ள தேநீரைவிட மெதுவாகச் சூடு குறைவதற்குக் கண்ணாடியின் வெப்பக் கடத்துத் திறன் குறைவாக இருப்பதே காரணம். நமது உடலிலுள்ள தோலும் கண்ணாடி டம்ளரைவிடக் குறைவான வெப்பக் கடத்துத் திறனைக் கொண்டுள்ளது. இருந்தபோதும் உடலைவிடச் சுற்றுப்புறச் சூழல் குறைந்த வெப்பநிலையில் இருக்கும் பொழுது உடலிலுள்ள வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குக் கடத்தப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக நாம் சரியான ஆடைகளை அணிய வேண்டும்..உடலில் உள்ள வெப்பநிலையைக் கட்டுக் குள் வைப்பதற்கு ஸ்வட்டர் (sweater) அணிகிறோம். ஆங்கிலத்தில் வியர்வையை (swear) உண்டாக்கக்கூடிய துணி என்ற பொருள்படும் வகையில் இந்தப் பெயர் வந்தது. உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளி யேறும். இப்படி வியர்வை வெளியே வருவ தால் உடலின் எடையைக் குறைப்பதற்கு இது ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் இந்தப் பெயர் வந்தது.".உடற்பயிற்சியின்போது ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் என்ன?."சாதாரணமாக நடை பயிற்சி செய்யும் பொழுது நாம் அணியும் ஆடைகளுடன் ஸ்வெட்டரை ஒப்பிட்டால் அதன் வெப்ப கடத்துத்திறன் பத்து மடங்கு குறைவாக இருக்கும். அதனால் உடலிலிருந்து வளி மண்டலத்திற்குக் கடத்தப்படும் வெப்பம் குறைவாக இருக்கும். அதுவே வெப்பம் அதிகமான பகுதியில் நாம் இருக்கும்பொழுது வளிமண்டலத்தில் இருந்து உடலுக்குக் கடத்தப்படும் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். அங்கே ஆடை பயன் தராது. அதனால் உடல் அதிகப்படியான வியர்வையை வெளியேற்றி உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.".ஓய்வு நிலையில் அமர்ந்து கொண்டிருக்கும் மனித உடலிலிருந்து ஏற்படும் வெப்ப இழப்புகள் என்ன?."கார் மற்றும் பேருந்துகளில் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைப்பதற்கு ரேடியேட்டர் எனப்படும் தண்ணீரால் குளிர் விக்கும் அமைப்புகள் உள்ளன. ஆனால் இருசக்கர வாகனங்களில் இதுபோன்ற தனியாகக் குளிர்விக்கும் அமைப்புகள் ஏதும் இல்லை. அதற்குப் பதிலாக அவை ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, பரப்பளவை அதிகரிப்பதற் காகப்பின் (fin) எனப்படும் அமைப்புகள் உள்ளன. இந்தக் கூரிய நுனி உடைய அமைப்பு கள் இயந்திரத்தில் உருவாகும் வெப்பத்தை வேகமாக வளிமண்டலத்திற்குக் கடத்துவதற்கு உதவுகின்றன. இதைப்போலவே நாம் குளிரில் செல்லும்பொழுதும் உடல் பாகங்களைவிட அதிகமான வெப்பத்தைக் கடத்தும் பகுதிகளாக நமது கை மற்றும் கால் விரல்கள் உரு மாறுகின்றன. அதனால்தான் உடனடியாகக் கை மற்றும் கால் விரல்களை உறைகள் கொண்டு மூடுவதால், உடனடியாக ஏற்படும் வெப்ப இழப்பு குறைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வளிமண்டலக் காற்று உட லின் பாகங்களைத் தொடுவதை முடிந்தவரை குறைப்பதன் மூலம் உடலிலிருந்து ஏற்படும் வெப்ப இழப்பை கணிசமாகக் குறைக்க முடிகிறது.".காய்ச்சல் வரக் காரணம் என்ன?."உடலில் ஏதாவது தொற்று ஏற்படும் பொழுது அதை விரட்டுவதற்காக உடல் அதை எதிர்த்து தனது போராட்டத்தைத் தொடங்குகிறது. போராட்டம் நடந்து கொண் டிருக்கும்பொழுது அதன் விளைவாக உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. அதனால்தான் காய்ச்சல் அடிக்கும்பொழுது, அது உடலில் நடந்துகொண்டிருக்கும் ஏதாவது ஒரு செய லில் சமிக்ஞையை நமக்குத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக காய்ச்சல் இருக்கிறது. பல் வேறு காரணங்களால் உடலின் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்ன என்று ஆராய்ந்து சரியான மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும்.".காய்ச்சல் கண்டபோது கைகளைத் திருப்பிப் பரிசோதிப்பது எதனால்?."நமது உள்ளங்கையில் வெளிர் நிறத்திலும் பொருட்களைத் தூக்குவதற்கு, பிடிப்பதற்கு ஏதுவாக ரேகைகள் உருவாகிவிட்டதால், அவற்றின் வெப்பக் கடத்துத் திறன் உடலில் உள்ள மற்ற தோல்களின் வெப்பக் கடத்துத் திறனைவிட வேறு விகிதத்தில் இருக்கும். அதனால்தான் காய்ச்சல் அடிக்கிறதா என்று பார்ப்பதற்கு உள்ளங்கையால் தொட்டுப் பார்க்காமல் கையைத் திருப்பி விரல்களுக்கு மேல் உள்ள தோல் பகுதி உடலை தொடுமாறு வைத்து உடலின் வெப்பம் எவ்வளவு என்று பார்க்கிறோம்."