கரும்பு வில்லுடன் காமாட்சி!.பண்டாசுரனை வதம் செய்ததால் காஞ்சி காமாட்சி அம்மன் கரும்பு வில்லுடனும், புஷ்ப பாணத்துடனும் காட்சி தருகிறாள்..சலவைக்கல் கணபதி!.கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் கணபதி பத்து கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த கணபதியைச் சலவைக் கல்லில் வடித்து இருக்கிறார்கள்..நான்கு கரங்களுடன் அருளும் முருகன்!.முருகப்பெருமான் பொதுவாக தனியாக நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் மட்டுமே காட்சி தருவார். மாறாக, திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்..பன்னிரு நாகங்களுடன் பைரவர்!.திருப்பத்தூர் அருள்மிகு பிரம்மேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர் பன்னிரு நாகங்களை அணிந்து காட்சி தருகிறார். காசியைப் போன்றே இங்கும் நாகங்களுடன் காலபைரவர் தருவது விசேஷம்..முருகன் கோயிலில் சடாரி!.பெருமாள் கோயில்களில் சடாரி சாதிப்பது போல், முருகனின் திருப்பாதச் சின்னங்களை அடியார்களின் தலையில் சாத்தும் வழக்கம் திருத்தணிகை திருக்கோயிலில் உள்ளது..குதிரை முகத்துடன் சனி பகவான்!.திருவானைக்காவல் ஆலயத்தில் சனி பகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். 'பாலசனி' என இவர் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். சனியின் மனைவியரான ஜேஷ்டா தேவி, நீலா தேவி ஆகியோரும் குழந்தை வடிவில் அருள்பாலிப்பது விசேஷம்..கிளி ஏந்தும் துர்கை!.காஞ்சிக்கு அருகிலுள்ள களத்தூரில் துர்கை எட்டுக் கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு, சூலம், கேடயம், வில், அம்பு, கத்தி போன்ற ஆயுதங்களோடு, வலது திருக்கரம் ஒன்றில் கிளியையும் எந்தி காட்சி தருகிறாள்..தொகுப்பு : நெ.இராமன், சென்னை
கரும்பு வில்லுடன் காமாட்சி!.பண்டாசுரனை வதம் செய்ததால் காஞ்சி காமாட்சி அம்மன் கரும்பு வில்லுடனும், புஷ்ப பாணத்துடனும் காட்சி தருகிறாள்..சலவைக்கல் கணபதி!.கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் கணபதி பத்து கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த கணபதியைச் சலவைக் கல்லில் வடித்து இருக்கிறார்கள்..நான்கு கரங்களுடன் அருளும் முருகன்!.முருகப்பெருமான் பொதுவாக தனியாக நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் மட்டுமே காட்சி தருவார். மாறாக, திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்..பன்னிரு நாகங்களுடன் பைரவர்!.திருப்பத்தூர் அருள்மிகு பிரம்மேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர் பன்னிரு நாகங்களை அணிந்து காட்சி தருகிறார். காசியைப் போன்றே இங்கும் நாகங்களுடன் காலபைரவர் தருவது விசேஷம்..முருகன் கோயிலில் சடாரி!.பெருமாள் கோயில்களில் சடாரி சாதிப்பது போல், முருகனின் திருப்பாதச் சின்னங்களை அடியார்களின் தலையில் சாத்தும் வழக்கம் திருத்தணிகை திருக்கோயிலில் உள்ளது..குதிரை முகத்துடன் சனி பகவான்!.திருவானைக்காவல் ஆலயத்தில் சனி பகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். 'பாலசனி' என இவர் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். சனியின் மனைவியரான ஜேஷ்டா தேவி, நீலா தேவி ஆகியோரும் குழந்தை வடிவில் அருள்பாலிப்பது விசேஷம்..கிளி ஏந்தும் துர்கை!.காஞ்சிக்கு அருகிலுள்ள களத்தூரில் துர்கை எட்டுக் கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு, சூலம், கேடயம், வில், அம்பு, கத்தி போன்ற ஆயுதங்களோடு, வலது திருக்கரம் ஒன்றில் கிளியையும் எந்தி காட்சி தருகிறாள்..தொகுப்பு : நெ.இராமன், சென்னை