ஊழல்அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை: உத்தர பிரதேச அரசு அதிரடி!

ஊழல்அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை: உத்தர பிரதேச அரசு அதிரடி!

உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது அம்மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முதல் கட்டமாக அதில் 207 வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கபட்டிருக்கிறது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்ததன்படி லஞ்சம் , ஊழல் ஆகியவற்றில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைக் கண்காணித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அவனிஷ் அவஸ்தி கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் லக்னோ , மீரட் , பாரய்லி , ஆக்ரா, அயோத்யா, கோராக்பூர் , வாரணாசி, பிராயக்ராஜ், ஜான்சி மற்றும் கான்பூர் பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் லஞ்ச புகாரில் இதுவரை 1,156 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 297 வழக்குகள் தீவிர விசாரணையாகவும் , 467 வழக்குகள் வெளிப்படையாகவும் நடைபெற்றது. மேலும் 330 வழக்குகளில் பாதி ரகசியமாகவும் மீதி புலனாய்வு விசாரணைகளாகவும் மேற்கொள்ளப்பட்டிருள்ளது. அந்தவகையில் ஊழல் மற்றும் லஞ்சத்தில் ஈடுபட்ட 470 ஊழல் அரசு அதிகாரிகள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

-இவ்வாறு உத்தர பிரதேச மாநில  உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com