சரணாகதி.– ரெங்கநாதன்.திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு மகான் சேங்கனூரில் இருந்தார். அவ்வூர் அருகிலிருந்த திருக்கண்ணமங்கை கோயிலில் அருளும் பக்தவத்சலப் பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக, 'திருக்கண்ணமங்கை ஆண்டான்' என்ற பெயர் இவருக்கு வந்தது. கோயிலுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வது, கோயிலை சுத்தப்படுத்துவது என பகவானிடம் சரணாகதி செய்து வாழ்ந்து வந்தார்..ஒரு சமயம், 'சரணாகதி செய்பவரை பகவான் காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது' என்று சந்தேகம் கொண்ட ஒருவர், இவரை அணுகி அந்தக் கேள்வியைக் கேட்டார். 'இவர் சாஸ்திரத்தை நம்பாதவர்' என கண்ணமங்கலம் ஆண்டான் புரிந்து கொண்டார்..சிறிது நேரம் மௌனம் சாதித்தார் திருக்கண்ண மங்கை ஆண்டான். அப்போது எதிர் வீட்டிலிருப்பவர் தான் வளர்க்கும் நாயை பிடித்துக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் வசிக்கும் மற்றொரு நாய் வேகமாக ஓடி வந்து, எதிர்வீட்டு நாயைப் பார்த்துக் குரைத்து ஹிம்சை செய்தது. யாருடனோ பேசிக்கொண்டிருந்த அந்த நாயின் எஜமானர், தனது நாய் படும் ஹிம்சையை காணப் பொறுக்காமல், குபீர் எனப் பாய்ந்து தனது நாயை தாக்க வந்த நாயை கல்லால் அடித்து விரட்டி, தனது நாயை அழைத்துச் சென்றார்..இதைப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாத சந்தேகம் எழுப்பியவரிடம், "இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் இவ்வளவு அபிமானம்? இவர் அந்த நாயின் உறவினரா? ரத்த சம்பந்தமா?" என்று கேட்டார்.."இது அவரது சொந்த நாய். அதனால் அவருக்கு அபிமானம்" என்றார் அந்த நபர்.."சொந்த நாயாக இது ஆவதற்குக் காரணமென்ன?" என்று கண்ணமங்கை ஆண்டான் கேட்க, "இந்த நாய் அவரது வீட்டில் இருக்கிறது. அவர் தரும் உணவை உண்டு அவர் காலையே சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த அன்பே, அது தனது சொந்தம் என நினைக்க வைக்கிறது. அதைக் காப்பது தனது பொறுப்பு என அவர் நினைக்கிறார்" என்றார் அந்த விதண்டாவாத ஆசாமி.."தனக்குப் பிரியமான நாயை, மற்றொரு நாய் ஹிம்சை செய்தால் அதைக் காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கு சுபாவமாக இருந்தால், பக்தவத்சலன் திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படிச் செய்ய மாட்டாரா? 'நீயே கதி' என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியவர்களை அணைத்துக்கொள்ளாமல் இருந்து விடுவாரா எம்பெருமான்? சரணாகதி சத்தியமாக, 'எஜமானன் காப்பாற்றுவார்' என்று உலக வாழ்க்கையிலே தெரியும்போது, கருணையே வடிவான எம்பெருமான் சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவார் என்ற சந்தேகம் ஒருவருக்கு வரலாமா? சரணாகதி செய்பவர்களுக்கு எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யம் ஒன்றே லட்சியம். அது ஒன்றே சரணாகதி செய்பவர், தனது எஜமானன் எம்பெருமானுக்குச் செய்ய வேண்டியது" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் விளக்கிச் சொல்ல, சந்தேகம் தெளிந்து விடை பெற்றார் அந்த நபர்.
சரணாகதி.– ரெங்கநாதன்.திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு மகான் சேங்கனூரில் இருந்தார். அவ்வூர் அருகிலிருந்த திருக்கண்ணமங்கை கோயிலில் அருளும் பக்தவத்சலப் பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக, 'திருக்கண்ணமங்கை ஆண்டான்' என்ற பெயர் இவருக்கு வந்தது. கோயிலுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வது, கோயிலை சுத்தப்படுத்துவது என பகவானிடம் சரணாகதி செய்து வாழ்ந்து வந்தார்..ஒரு சமயம், 'சரணாகதி செய்பவரை பகவான் காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது' என்று சந்தேகம் கொண்ட ஒருவர், இவரை அணுகி அந்தக் கேள்வியைக் கேட்டார். 'இவர் சாஸ்திரத்தை நம்பாதவர்' என கண்ணமங்கலம் ஆண்டான் புரிந்து கொண்டார்..சிறிது நேரம் மௌனம் சாதித்தார் திருக்கண்ண மங்கை ஆண்டான். அப்போது எதிர் வீட்டிலிருப்பவர் தான் வளர்க்கும் நாயை பிடித்துக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் வசிக்கும் மற்றொரு நாய் வேகமாக ஓடி வந்து, எதிர்வீட்டு நாயைப் பார்த்துக் குரைத்து ஹிம்சை செய்தது. யாருடனோ பேசிக்கொண்டிருந்த அந்த நாயின் எஜமானர், தனது நாய் படும் ஹிம்சையை காணப் பொறுக்காமல், குபீர் எனப் பாய்ந்து தனது நாயை தாக்க வந்த நாயை கல்லால் அடித்து விரட்டி, தனது நாயை அழைத்துச் சென்றார்..இதைப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாத சந்தேகம் எழுப்பியவரிடம், "இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் இவ்வளவு அபிமானம்? இவர் அந்த நாயின் உறவினரா? ரத்த சம்பந்தமா?" என்று கேட்டார்.."இது அவரது சொந்த நாய். அதனால் அவருக்கு அபிமானம்" என்றார் அந்த நபர்.."சொந்த நாயாக இது ஆவதற்குக் காரணமென்ன?" என்று கண்ணமங்கை ஆண்டான் கேட்க, "இந்த நாய் அவரது வீட்டில் இருக்கிறது. அவர் தரும் உணவை உண்டு அவர் காலையே சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த அன்பே, அது தனது சொந்தம் என நினைக்க வைக்கிறது. அதைக் காப்பது தனது பொறுப்பு என அவர் நினைக்கிறார்" என்றார் அந்த விதண்டாவாத ஆசாமி.."தனக்குப் பிரியமான நாயை, மற்றொரு நாய் ஹிம்சை செய்தால் அதைக் காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கு சுபாவமாக இருந்தால், பக்தவத்சலன் திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படிச் செய்ய மாட்டாரா? 'நீயே கதி' என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியவர்களை அணைத்துக்கொள்ளாமல் இருந்து விடுவாரா எம்பெருமான்? சரணாகதி சத்தியமாக, 'எஜமானன் காப்பாற்றுவார்' என்று உலக வாழ்க்கையிலே தெரியும்போது, கருணையே வடிவான எம்பெருமான் சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவார் என்ற சந்தேகம் ஒருவருக்கு வரலாமா? சரணாகதி செய்பவர்களுக்கு எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யம் ஒன்றே லட்சியம். அது ஒன்றே சரணாகதி செய்பவர், தனது எஜமானன் எம்பெருமானுக்குச் செய்ய வேண்டியது" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் விளக்கிச் சொல்ல, சந்தேகம் தெளிந்து விடை பெற்றார் அந்த நபர்.