–ஹர்ஷா.பிரதமர் மோடி மாதந்தோறும் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது நாட்டின் எதாவது ஒரு பகுதியில் நிகழ்ந்த ஒரு சாமானியனின் சாதனை அல்லது முன்னெடுப்பை உதாராணம் காட்டிப் பேசுவார். கடந்த செப்டெம்பர் மாதம்.உலக ஆறுகள் தினம் செப்டெம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், அந்த நாளின் பெருமை குறித்து பேசினார். அதில் தமிழகத்தில் உழைக்கும் பெண்கள் ஒரு நதியை மீட்டெடுத்தது குறித்துப் பாராட்டிப் பேசியிருக்கிறார். பிரதமர் தன் உரையில் தமிழகத்தில் கமண்டல நாகநதி வறண்டு போனது, இருப்பினும் அப்பகுதி பெண்கள் எடுத்த முன்னெடுப்பால் அந்த நதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பல ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்" என்றார் .எங்கிருக்கிறது இந்த நதி?.திருவண்ணாமலையின் நாகநதி ஆறு, ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு பாலாற்றின் கிளையாக, வேலூர் மாவட்டத்தில் பாம்புபோல வளைந்து 14 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது நாகநதி..60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்கு உதவிய நாகநதி ஆறு, ஆலை கழிவுகள் தேங்குவது, விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆக்கிரமிப்புகள் என பல காரணங்களால் 15 ஆண்டுகளாக வற்றிக்கிடந்தது. இதைத்தான் பெண்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள்?.எப்படிச்செய்தார்கள் ?.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் வேலூரில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழை நீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்..நாகநதி ஆறு அமைந்த பாதையில் 300க்கும் மேற்பட்ட நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்து, கற்களை அடுக்கி, 349 தடுப்பணைகளை கட்டியதில் பெரும்பங்கை வகித்தவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது..இத்தனை சுருக்கமாய் எழுத்தில் சொல்லிவிடும் கதைக்கு பின் கடப்பாரை, மண்வெட்டியை தூக்கிக்கொண்டு வியர்வை சிந்தி வேலை செய்த ஆயிரக்கணக்கான பெண்களின் கடும் உழைப்பு இருக்கிறது..கொள்ளு, கேழ்வரகு மட்டுமே விளைந்த நிலங்களில் இப்போது தண்ணீர் அதிகம் தேவைப்படும் மஞ்சள், வாழை மரங்களும் விளைந்து நிற்பது பெண்களின் வெற்றிக்கு சான்றாக உள்ளது. விவசாயிகளின் வாழ்த்துக்களை பெற்றவர்கள் இந்தப் பெண்கள் முன்னர் 80 அல்லது 100 அடியில் தண்ணீர் கிடைத்த ஊராக இருந்தது கீழரசம்பட்டு கிராமத்தில் இன்று "20 அடியில் ஊற்று தண்ணீர்," ."மழை வந்தால் ஒரே நாளில் ஆற்று தண்ணீர் காணாமல் போய்விடும் அல்லது சில இடங்களில் தேங்கி குட்டையாக இருக்கும். ஆனால் இந்தப் பெண்கள் தூர் வாரி, கிணறுகளை அமைத்ததால், இன்று நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஒரு போகம் விளைச்சலுக்கு சிரமப்பட்ட விவசாயிகள், இரு போகம் அறுவடை செய்கிறார்கள். வீடியோ"ஜல்லிக் கற்களை சுமந்து, கனமான சிமெண்ட் வளையங்களை இறக்கி கிணறு அமைத்தோம். காயம்பட்டு வலித்த அதே கைகளில், ஊற்று நீரை அள்ளிக் குடித்தபோது சந்தோசம் மட்டுமே மிச்சமாய் இருந்தது. வேலூர் என்றாலே அதிகமான வெயில், தண்ணீர் பஞ்சம் இருக்கும் மாவட்டம் என்பார்கள். நாகநதியை சுத்தப்படுத்தி, நிலத்தடி நீரை நாங்கள் சேமித்துள்ளதால், எங்கள் உழைப்பை பலரும் பாராட்டுகிறார்கள். பிரதமர் பேசியிருப்பதால் இப்போது தினமும் பத்திரிகைக்காரங்களும் டி.வி.காரர்களும் எங்களைப் பார்க்க வருகிறார்கள் என்கிறார் இந்த குழுவின் ஒரு உறுப்பினரான கிருஷ்ணம்மாள்..தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண்கள். அவர்களைத்தான் நம் பிரதமர் அடையாளம் காட்டியிருக்கிறார்.
–ஹர்ஷா.பிரதமர் மோடி மாதந்தோறும் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது நாட்டின் எதாவது ஒரு பகுதியில் நிகழ்ந்த ஒரு சாமானியனின் சாதனை அல்லது முன்னெடுப்பை உதாராணம் காட்டிப் பேசுவார். கடந்த செப்டெம்பர் மாதம்.உலக ஆறுகள் தினம் செப்டெம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், அந்த நாளின் பெருமை குறித்து பேசினார். அதில் தமிழகத்தில் உழைக்கும் பெண்கள் ஒரு நதியை மீட்டெடுத்தது குறித்துப் பாராட்டிப் பேசியிருக்கிறார். பிரதமர் தன் உரையில் தமிழகத்தில் கமண்டல நாகநதி வறண்டு போனது, இருப்பினும் அப்பகுதி பெண்கள் எடுத்த முன்னெடுப்பால் அந்த நதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பல ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்" என்றார் .எங்கிருக்கிறது இந்த நதி?.திருவண்ணாமலையின் நாகநதி ஆறு, ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு பாலாற்றின் கிளையாக, வேலூர் மாவட்டத்தில் பாம்புபோல வளைந்து 14 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது நாகநதி..60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்கு உதவிய நாகநதி ஆறு, ஆலை கழிவுகள் தேங்குவது, விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆக்கிரமிப்புகள் என பல காரணங்களால் 15 ஆண்டுகளாக வற்றிக்கிடந்தது. இதைத்தான் பெண்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள்?.எப்படிச்செய்தார்கள் ?.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் வேலூரில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழை நீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்..நாகநதி ஆறு அமைந்த பாதையில் 300க்கும் மேற்பட்ட நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்து, கற்களை அடுக்கி, 349 தடுப்பணைகளை கட்டியதில் பெரும்பங்கை வகித்தவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது..இத்தனை சுருக்கமாய் எழுத்தில் சொல்லிவிடும் கதைக்கு பின் கடப்பாரை, மண்வெட்டியை தூக்கிக்கொண்டு வியர்வை சிந்தி வேலை செய்த ஆயிரக்கணக்கான பெண்களின் கடும் உழைப்பு இருக்கிறது..கொள்ளு, கேழ்வரகு மட்டுமே விளைந்த நிலங்களில் இப்போது தண்ணீர் அதிகம் தேவைப்படும் மஞ்சள், வாழை மரங்களும் விளைந்து நிற்பது பெண்களின் வெற்றிக்கு சான்றாக உள்ளது. விவசாயிகளின் வாழ்த்துக்களை பெற்றவர்கள் இந்தப் பெண்கள் முன்னர் 80 அல்லது 100 அடியில் தண்ணீர் கிடைத்த ஊராக இருந்தது கீழரசம்பட்டு கிராமத்தில் இன்று "20 அடியில் ஊற்று தண்ணீர்," ."மழை வந்தால் ஒரே நாளில் ஆற்று தண்ணீர் காணாமல் போய்விடும் அல்லது சில இடங்களில் தேங்கி குட்டையாக இருக்கும். ஆனால் இந்தப் பெண்கள் தூர் வாரி, கிணறுகளை அமைத்ததால், இன்று நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஒரு போகம் விளைச்சலுக்கு சிரமப்பட்ட விவசாயிகள், இரு போகம் அறுவடை செய்கிறார்கள். வீடியோ"ஜல்லிக் கற்களை சுமந்து, கனமான சிமெண்ட் வளையங்களை இறக்கி கிணறு அமைத்தோம். காயம்பட்டு வலித்த அதே கைகளில், ஊற்று நீரை அள்ளிக் குடித்தபோது சந்தோசம் மட்டுமே மிச்சமாய் இருந்தது. வேலூர் என்றாலே அதிகமான வெயில், தண்ணீர் பஞ்சம் இருக்கும் மாவட்டம் என்பார்கள். நாகநதியை சுத்தப்படுத்தி, நிலத்தடி நீரை நாங்கள் சேமித்துள்ளதால், எங்கள் உழைப்பை பலரும் பாராட்டுகிறார்கள். பிரதமர் பேசியிருப்பதால் இப்போது தினமும் பத்திரிகைக்காரங்களும் டி.வி.காரர்களும் எங்களைப் பார்க்க வருகிறார்கள் என்கிறார் இந்த குழுவின் ஒரு உறுப்பினரான கிருஷ்ணம்மாள்..தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண்கள். அவர்களைத்தான் நம் பிரதமர் அடையாளம் காட்டியிருக்கிறார்.