நா.ஜெயஸ்ரீ, செய்யாறு.
தேவையானவை:
கொள்ளு -1கப்
தேங்காய் துருவல்– அரை மூடி
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -4
கறிவேப்பிலை , கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கொள்ளை நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அத்துடன் மிளகாய் சேர்த்து
கொரகொரப்பாக அறைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல் ,பெருங்காயம் ,கறிவேப்பிலை,கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.