பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஆயில் பாண்டுகள்தான் காரணமா?.சண்முகவடிவு, நெல்லை.? பெட்ரோல் விலை ஏற்றத்துக்குக் காரணம் முந்தைய அரசு வெளியிட்ட ஆயில் பாண்டுகள்தான் காரணம் என்கிறாரே நிர்மலா சீத்தாராமன்?.முதலில் 'சர்வதேச சந்தையின் விலையேற்றம்' என்றார். பின்னர் 'மாநிலங்கள் இதை ஜி.எஸ்.டி.யில் கொண்டுவராததால்'என்றார். இப்போது 'இந்தக் கடன் பத்திரங்கள்' என்கிறார். இந்தப் பத்திரங்கள் குறித்த உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.2005-10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. அந்த மானியத் தொகைக்கு ஈடாக எண்ணெய் நிறுவனங்களுக்கு 2005-12 ஆண்டுகளில் 1,44,000 கோடி ரூபாய்க்கு ஆயில் பாண்டுகள் வழங்கப்பட்டன.இந்தப் பாண்டுகளுக்கு மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் வட்டித் தொகையுடன் சேர்த்து அசலை வழங்கவேண்டும். எண்ணெய் நிறுவனங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 2026-ம் ஆண்டு வரை மத்திய அரசு இந்த வட்டித் தொகையை வழங்க வேண்டும். இந்த ஆயில் பாண்டுகளில் தற்போதைய நிலுவைத் தொகை 2020-21 நிலவரப்படி ரூ.1,31,000 கோடி ஆகும். இதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு ரூ.9,900 கோடி ரூபாய் வட்டியாகச் செலுத்தி வருகிறது.2020 – 21 காலகட்டத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ரூ. 3,89,000 கோடி ரூபாய் கலால் வரியாகக் கிடைக்கிறது. இந்த வரியானது 2015-16 காலகட்டத்தில் ரூ.1,16,000 கோடியாக மட்டுமே இருந்தது. சென்ற 5 ஆண்டுகளில் மட்டும் கலால் வரி மூன்று மடங்குக்கு மேல் அதிகமாக அரசுக்குக் கிடைத்து வருகிறது.அவ்வாறு கிடைக்கும் வரியோடு ஒப்பிட்டால் தற்போது செலுத்தவேண்டிய வட்டித் தொகையான ரூ.9,900 கோடி என்பது மிகவும் குறைவு. அதனால் இந்தக் கடன் பத்திரம், வட்டி எல்லாவற்றையும் எளிதாகச் செலுத்திவிட்டு வரியைக் குறைக்கலாம். முந்தைய அரசின் மீது பழிபோடுவதைத்தான் மோடி அரசு ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகிறது.வண்ணை கணேசன் சென்னை? பிரதமரின் சுதந்திர தின உரையில் 100 லட்சம் கோடிகளில் கதிசக்தி திட்டம் அறிவித்திருக்கிறாரே?2019 சுதந்திர தின உரையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் என அறிவித்ததும், 2020 – சுதந்திர தின உரையில் தேசிய கட்டமைப்புக் குழாய் திட்டத்துக்கு அரசு 100 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்யும் என அறிவித்ததும் நினைவிருக்கிறதா? 2021 ஆகஸ்ட் உரையில் கதிசக்தி திட்டத்தின்கீழ் கட்டமைப்பு வசதிக்காக 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார். எல்லா வருடமும் 100 லட்சம் கோடி. இப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரம் செலவின விவரம் எதுவும் நாடாளுமன்றத்தில் இதுவரை சொல்லப்படவில்லை. வாழ்க சுதந்திரம்.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்? இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டது குறித்து?தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆளுநராகச் செல்வது ராஜாஜி காலத்திலேயே தொடங்கி, இன்று இல.கணேசன் வரை தொடர்வது தமிழகத்துக்குப் பெருமை.தாமதமாகக் கிடைத்தாலும் ஒரு நல்ல தமிழக அரசியல் வாதி ஒருவருக்குக் கிடைத்திருப்பதற்குப் பெருமைப்படுவோம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இன்றைய அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் நேர்மையான தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். . இல.கணேசன் மிகச் சிறந்த இலக்கியப் பேச்சாளர். 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் 'பொற்றாமரை'கலை, இலக்கிய அமைப்பின் தலைவராக இருந்து இலக்கியப் பணிகளையும் ஆற்றி வருகிறார். கம்பன் கழகம் உட்படப் பல தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு அமைதியாகப் பார்வையாளராகவும் வருபவர். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு என்ற கொள்கை உடையவர். மனிதநேயமும், சமூக நல்லிணக்கமும் இதயத்தில் என்றும் பேணுபவர்.ஆ. கண்ணன், பாப்பான்குளம்?'தேசிய ராணுவ அகாடமி தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் 'ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று நாட்டு விடுதலைக்கு முன்னரே முழங்கிய தேசத்தில் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றம் மூலம்தான் பெறமுடிகிறது என்பதுதான் வருத்தம்.நடராஜன், சிதம்பரம்? சசி தரூர், சுனந்தா மர்ம மரண வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே?'ஏழரை ஆண்டுகாலச் சித்ரவதை முடிவுக்கு வந்திருக்கிறது'என்று சசி தரூர் நிம்மதியை அறிவித்திருக்கிறார். உண்மைதான். அவரை ஒரு கொலைகாரனாகப் பிம்பப்படுத்தும் முயற்சிகள் அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஏழரை ஆண்டு காலத்தில் இரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டுவிட்டார். பல்வேறு நாடுகளுக்குப் போய் வந்துகொண்டு இருந்தார். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகி இருந்திருக்கிறார். இதைச் சித்திரவதை என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை. அவர் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பதால் மட்டுமே சிறைவாசம் எதுவும் இல்லாமல் வலம் வர முடிந்தது. சாமானிய மனிதர்களுக்கு அப்படிப்பட்ட வசதிகள் வாய்ப்பதில்லை என்பதும் உண்மை.சரவண நாகராஜன், செம்பானர்கோவில்? கொடநாடு விவகாரம் மீண்டும் கிளம்புகிறதே?பசுமை போர்த்திய மலைகளில் மூடுபனி எப்போதும் போர்த்தியிருக்கும் அந்த பங்களாவின் மர்மங்கள் வெளிவருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஒரு காவலாளி கொலை. இன்னொ ருத்தர் இதுவரை எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆஸ்தான டிரைவர் விபத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் இன்னொருத்தருக்கு குடும்பத்தோடு விபத்து. மனைவியோடு குழந்தையும் சாகிறது. இவர் மட்டும் தப்பிக்கிறார். இன்னொரு அறியாத பையன் அங்கே தொழில்நுட்பப் பிரிவில் வேலை பார்க்கிறான் என்கிற ஒரே காரணத்திற்காகத் தற்கொலை செய்து கொள்கிறான் என்று ராஜேஷ்குமாரின் கதைகள் போல நிகழ்ந்த நிஜங்களின் பின்னணி மக்களுக்குத் தெரிய வேண்டியது அவசியம்.ராகவன், மானாமதுரை? ஆகஸ்ட் 14ஐ பிரிவு கொடுமைகளின் நினைவு தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறாரே பிரதமர்.எதிர்மறையான எண்ணம். நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி நல்லவற்றை நினைத்துக் கொண்டாடுவதும் கெட்டதை மறந்து விடுவதும்தான் நல்ல வாழ்க்கை. அதுதான் நாட்டு முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.பிரிவினை நிகழ்ந்த நேரத்தில் நிகழ்ந்த துயரங்களை இன்று படித்தாலும் மனம் கனக்கிறது. ஒரு துயரத்தை, கொடுமை எனத் தெரிந்த ஒன்றை மறுபடியும் நினைக்க வேண்டிய அவசியம் எல்லைப்புற மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களினால் பா.ஜ.க.வுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் நாட்டு நலனுக்கு அது அவசியமில்லை என்பதை நமது பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். . சத்தியநாராயணன், அயன்புரம்? வாசகர்களிடம் தொடர்கள் படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டதா?அப்படிச் சொல்லிவிட முடியாது. அச்சுப் பத்திரிகைகளில் நீண்ட தொடர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவரும் இன்றைய சூழலில் இணையத்தில் தினந்தோறும் பல எழுத்தாளர்களின் தொடர்கதைகளை வெளியிடும் ஒரு தளம் பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிப்பதாகத் தெரிவிக்கிறது. ஒலிப் புத்தகங்கள் வெளியிடும் நிறுவனங்கள்கூட இப்போது தொடர்களை முயற்சி செய்கிறார்கள். தொடர்ந்து ஒரு தொடரைப் படிக்கச் செய்விப்பது, அதை எழுதுபவரின் எழுத்தின் வலிமை என்பதை நமக்குப் புரியவைத்தவர் அமரர் கல்கி. அதுதான் இன்றும் உண்மை.மு. மதிவாணன், குபேந்திர நகர்? வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லையாமே?இத்தனை பெரிய அளவில் திருடுபோக வாய்ப்பில்லை. இது கொள்முதல் செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டிற்கும் கணக்கிற்கும் உண்மையில் வந்திறங்கியிருக்கும் கரியின் அளவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நிலக்கரியில் நெருப்பு கனிய நிறைய நேரம் ஆகும்.மு.மதிவாணன், அரூர்? தி.மு.க.வின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும் சோதனையும் அடைந்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?அவருடைய நண்பர் வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனையையும் அதனால் அவர் அடைந்த வேதனையையும் சொல்லுகிறாரோ?ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்?'ஆப்கானை விட்டு நான் வெளியேறாமல் இருந்திருந்தால், ராணுவத்திற்கும், தாலி பானுக்கும் போர் மூண்டு, லட்சக்கணக்கானோர் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டிருக்கும்'என்று அஷ்ரப் கனி தெரிவித்துள்ளாரே?உண்மை நிலை அதுவல்ல. அமெரிக்கப் படைகள் பின்லேடனைப் பிடிக்க உதவிய பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் உள்பட தங்களது வலிமையான ஆயுதங்களைத் தாலிபான்களுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறத் திட்டமிட்டவுடனேயே இவரது ராணுவம் இவர் மீது நம்பிக்கையிழந்து தாலிபான்களை வரவேற்க ஆரம்பித்துவிட்டது. இவர் தப்பிக்க அமெரிக்க ராணுவம் உதவியது. ஆனால் இவர் வெளியேறினாலும் பலர் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டிருப்பது என்பது உண்மை.ஸ்ருதி ராஜன், சென்னை? 2024ல் மோடியை எதிர்க்க எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகுமா?உருவாகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதன் வெற்றி அந்தக் கூட்டணியின் தலைவராக மற்ற கட்சிகளால் ஒப்புக்கொண்டவரைப் பொறுத்தது.
பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஆயில் பாண்டுகள்தான் காரணமா?.சண்முகவடிவு, நெல்லை.? பெட்ரோல் விலை ஏற்றத்துக்குக் காரணம் முந்தைய அரசு வெளியிட்ட ஆயில் பாண்டுகள்தான் காரணம் என்கிறாரே நிர்மலா சீத்தாராமன்?.முதலில் 'சர்வதேச சந்தையின் விலையேற்றம்' என்றார். பின்னர் 'மாநிலங்கள் இதை ஜி.எஸ்.டி.யில் கொண்டுவராததால்'என்றார். இப்போது 'இந்தக் கடன் பத்திரங்கள்' என்கிறார். இந்தப் பத்திரங்கள் குறித்த உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.2005-10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. அந்த மானியத் தொகைக்கு ஈடாக எண்ணெய் நிறுவனங்களுக்கு 2005-12 ஆண்டுகளில் 1,44,000 கோடி ரூபாய்க்கு ஆயில் பாண்டுகள் வழங்கப்பட்டன.இந்தப் பாண்டுகளுக்கு மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் வட்டித் தொகையுடன் சேர்த்து அசலை வழங்கவேண்டும். எண்ணெய் நிறுவனங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 2026-ம் ஆண்டு வரை மத்திய அரசு இந்த வட்டித் தொகையை வழங்க வேண்டும். இந்த ஆயில் பாண்டுகளில் தற்போதைய நிலுவைத் தொகை 2020-21 நிலவரப்படி ரூ.1,31,000 கோடி ஆகும். இதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு ரூ.9,900 கோடி ரூபாய் வட்டியாகச் செலுத்தி வருகிறது.2020 – 21 காலகட்டத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ரூ. 3,89,000 கோடி ரூபாய் கலால் வரியாகக் கிடைக்கிறது. இந்த வரியானது 2015-16 காலகட்டத்தில் ரூ.1,16,000 கோடியாக மட்டுமே இருந்தது. சென்ற 5 ஆண்டுகளில் மட்டும் கலால் வரி மூன்று மடங்குக்கு மேல் அதிகமாக அரசுக்குக் கிடைத்து வருகிறது.அவ்வாறு கிடைக்கும் வரியோடு ஒப்பிட்டால் தற்போது செலுத்தவேண்டிய வட்டித் தொகையான ரூ.9,900 கோடி என்பது மிகவும் குறைவு. அதனால் இந்தக் கடன் பத்திரம், வட்டி எல்லாவற்றையும் எளிதாகச் செலுத்திவிட்டு வரியைக் குறைக்கலாம். முந்தைய அரசின் மீது பழிபோடுவதைத்தான் மோடி அரசு ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகிறது.வண்ணை கணேசன் சென்னை? பிரதமரின் சுதந்திர தின உரையில் 100 லட்சம் கோடிகளில் கதிசக்தி திட்டம் அறிவித்திருக்கிறாரே?2019 சுதந்திர தின உரையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் என அறிவித்ததும், 2020 – சுதந்திர தின உரையில் தேசிய கட்டமைப்புக் குழாய் திட்டத்துக்கு அரசு 100 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்யும் என அறிவித்ததும் நினைவிருக்கிறதா? 2021 ஆகஸ்ட் உரையில் கதிசக்தி திட்டத்தின்கீழ் கட்டமைப்பு வசதிக்காக 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார். எல்லா வருடமும் 100 லட்சம் கோடி. இப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரம் செலவின விவரம் எதுவும் நாடாளுமன்றத்தில் இதுவரை சொல்லப்படவில்லை. வாழ்க சுதந்திரம்.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்? இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டது குறித்து?தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆளுநராகச் செல்வது ராஜாஜி காலத்திலேயே தொடங்கி, இன்று இல.கணேசன் வரை தொடர்வது தமிழகத்துக்குப் பெருமை.தாமதமாகக் கிடைத்தாலும் ஒரு நல்ல தமிழக அரசியல் வாதி ஒருவருக்குக் கிடைத்திருப்பதற்குப் பெருமைப்படுவோம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இன்றைய அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் நேர்மையான தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். . இல.கணேசன் மிகச் சிறந்த இலக்கியப் பேச்சாளர். 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் 'பொற்றாமரை'கலை, இலக்கிய அமைப்பின் தலைவராக இருந்து இலக்கியப் பணிகளையும் ஆற்றி வருகிறார். கம்பன் கழகம் உட்படப் பல தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு அமைதியாகப் பார்வையாளராகவும் வருபவர். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு என்ற கொள்கை உடையவர். மனிதநேயமும், சமூக நல்லிணக்கமும் இதயத்தில் என்றும் பேணுபவர்.ஆ. கண்ணன், பாப்பான்குளம்?'தேசிய ராணுவ அகாடமி தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் 'ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று நாட்டு விடுதலைக்கு முன்னரே முழங்கிய தேசத்தில் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றம் மூலம்தான் பெறமுடிகிறது என்பதுதான் வருத்தம்.நடராஜன், சிதம்பரம்? சசி தரூர், சுனந்தா மர்ம மரண வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே?'ஏழரை ஆண்டுகாலச் சித்ரவதை முடிவுக்கு வந்திருக்கிறது'என்று சசி தரூர் நிம்மதியை அறிவித்திருக்கிறார். உண்மைதான். அவரை ஒரு கொலைகாரனாகப் பிம்பப்படுத்தும் முயற்சிகள் அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஏழரை ஆண்டு காலத்தில் இரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டுவிட்டார். பல்வேறு நாடுகளுக்குப் போய் வந்துகொண்டு இருந்தார். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகி இருந்திருக்கிறார். இதைச் சித்திரவதை என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை. அவர் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பதால் மட்டுமே சிறைவாசம் எதுவும் இல்லாமல் வலம் வர முடிந்தது. சாமானிய மனிதர்களுக்கு அப்படிப்பட்ட வசதிகள் வாய்ப்பதில்லை என்பதும் உண்மை.சரவண நாகராஜன், செம்பானர்கோவில்? கொடநாடு விவகாரம் மீண்டும் கிளம்புகிறதே?பசுமை போர்த்திய மலைகளில் மூடுபனி எப்போதும் போர்த்தியிருக்கும் அந்த பங்களாவின் மர்மங்கள் வெளிவருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஒரு காவலாளி கொலை. இன்னொ ருத்தர் இதுவரை எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆஸ்தான டிரைவர் விபத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் இன்னொருத்தருக்கு குடும்பத்தோடு விபத்து. மனைவியோடு குழந்தையும் சாகிறது. இவர் மட்டும் தப்பிக்கிறார். இன்னொரு அறியாத பையன் அங்கே தொழில்நுட்பப் பிரிவில் வேலை பார்க்கிறான் என்கிற ஒரே காரணத்திற்காகத் தற்கொலை செய்து கொள்கிறான் என்று ராஜேஷ்குமாரின் கதைகள் போல நிகழ்ந்த நிஜங்களின் பின்னணி மக்களுக்குத் தெரிய வேண்டியது அவசியம்.ராகவன், மானாமதுரை? ஆகஸ்ட் 14ஐ பிரிவு கொடுமைகளின் நினைவு தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறாரே பிரதமர்.எதிர்மறையான எண்ணம். நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி நல்லவற்றை நினைத்துக் கொண்டாடுவதும் கெட்டதை மறந்து விடுவதும்தான் நல்ல வாழ்க்கை. அதுதான் நாட்டு முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.பிரிவினை நிகழ்ந்த நேரத்தில் நிகழ்ந்த துயரங்களை இன்று படித்தாலும் மனம் கனக்கிறது. ஒரு துயரத்தை, கொடுமை எனத் தெரிந்த ஒன்றை மறுபடியும் நினைக்க வேண்டிய அவசியம் எல்லைப்புற மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களினால் பா.ஜ.க.வுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் நாட்டு நலனுக்கு அது அவசியமில்லை என்பதை நமது பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். . சத்தியநாராயணன், அயன்புரம்? வாசகர்களிடம் தொடர்கள் படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டதா?அப்படிச் சொல்லிவிட முடியாது. அச்சுப் பத்திரிகைகளில் நீண்ட தொடர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவரும் இன்றைய சூழலில் இணையத்தில் தினந்தோறும் பல எழுத்தாளர்களின் தொடர்கதைகளை வெளியிடும் ஒரு தளம் பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிப்பதாகத் தெரிவிக்கிறது. ஒலிப் புத்தகங்கள் வெளியிடும் நிறுவனங்கள்கூட இப்போது தொடர்களை முயற்சி செய்கிறார்கள். தொடர்ந்து ஒரு தொடரைப் படிக்கச் செய்விப்பது, அதை எழுதுபவரின் எழுத்தின் வலிமை என்பதை நமக்குப் புரியவைத்தவர் அமரர் கல்கி. அதுதான் இன்றும் உண்மை.மு. மதிவாணன், குபேந்திர நகர்? வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லையாமே?இத்தனை பெரிய அளவில் திருடுபோக வாய்ப்பில்லை. இது கொள்முதல் செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டிற்கும் கணக்கிற்கும் உண்மையில் வந்திறங்கியிருக்கும் கரியின் அளவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நிலக்கரியில் நெருப்பு கனிய நிறைய நேரம் ஆகும்.மு.மதிவாணன், அரூர்? தி.மு.க.வின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும் சோதனையும் அடைந்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?அவருடைய நண்பர் வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனையையும் அதனால் அவர் அடைந்த வேதனையையும் சொல்லுகிறாரோ?ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்?'ஆப்கானை விட்டு நான் வெளியேறாமல் இருந்திருந்தால், ராணுவத்திற்கும், தாலி பானுக்கும் போர் மூண்டு, லட்சக்கணக்கானோர் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டிருக்கும்'என்று அஷ்ரப் கனி தெரிவித்துள்ளாரே?உண்மை நிலை அதுவல்ல. அமெரிக்கப் படைகள் பின்லேடனைப் பிடிக்க உதவிய பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் உள்பட தங்களது வலிமையான ஆயுதங்களைத் தாலிபான்களுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறத் திட்டமிட்டவுடனேயே இவரது ராணுவம் இவர் மீது நம்பிக்கையிழந்து தாலிபான்களை வரவேற்க ஆரம்பித்துவிட்டது. இவர் தப்பிக்க அமெரிக்க ராணுவம் உதவியது. ஆனால் இவர் வெளியேறினாலும் பலர் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டிருப்பது என்பது உண்மை.ஸ்ருதி ராஜன், சென்னை? 2024ல் மோடியை எதிர்க்க எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகுமா?உருவாகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதன் வெற்றி அந்தக் கூட்டணியின் தலைவராக மற்ற கட்சிகளால் ஒப்புக்கொண்டவரைப் பொறுத்தது.