– வசந்தா மாரிமுத்து, சென்னை | ஜானகி ரங்கநாதன், மைலாப்பூர்.பாசிப்பயறு இனிப்பு சுண்டல்தேவையானவை : வேகவைத்த பாசிப் பயறு – 1 கப், பேரீச்சம் பழச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு.செய்முறை : பேரீச்சம் பழச் சாறு, தேங்காய் துருவல் இரண்டையும் மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து வேகவைத்த பாசிப்பயறு சேர்த்து பிரட்டி, உப்பு போட்டு அரைத்த விழுதினை கலந்து இறக்கவும்.கோதுமை சுண்டல்தேவையானவை : முளை கட்டிய கோதுமை – 1 கப், பொடியாக நறுக்கிய தக்காளி – 1, கீறிய பச்சை மிளகாய் – 2, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, இஞ்சி துருவல் – தலா கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை : முளை கட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு தாளித்து, அதில் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேக வைத்த கோதுமை, உப்பு போட்டுக் கிளறி இறக்கவும். தக்காளிக்கு பதில் எலுமிச்சை சாறும் பிழியலாம். .1. கோதுமை சுண்டல் – 2. ஜவ்வரிசி சுண்டல்ஜவ்வரிசி சுண்டல்தேவையானவை : ஜவ்வரிசி – 1 கப், குழையாமல் வேகவைத்த பாசிப் பருப்பு – கால் கப், ஒன்றிரண்டாக அரைத்த வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு, பெருங்காயப் பொடி – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.செய்முறை : ஜவ்வரிசியை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய் தாளித்து ஊற வைத்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறி, வேர்க்கடலைப் பொடி, வறுத்த தேங்காய் துருவல், கறிவேப்பிலை போட்டுக் கலந்து இறக்கவும். விரும்பினால் எலுமிச்சை சாறு பிழியலாம்.அவல் சுண்டல்தேவையானவை : கெட்டி அவல் – 2 கப், முளை கட்டிய பச்சைப் பயறு – அரை கப், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன், இஞ்சி – சிறிது, கொத்தமல்லி – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப. .1. அவல் சுண்டல் – 2. கிரிஸ்பி சுண்டல் – 3. பார்லி சுண்டல்செய்முறை : அவலில் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊற வைத்த அவல், முளைகட்டிய பச்சைப் பயறு, தேங்காய்த் துருவல், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.கிரிஸ்பி சுண்டல்தேவையானவை : முளைகட்டிய கொள்ளு – 1 கப், பொரித்த கார்ன் ஃப்ளார் – 1 கப், ஓமப்பொடி – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.செய்முறை : கொள்ளுடன் உப்பு சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரை வேக வைத்து இறக்கி தண்ணீரை வடிக்கவும். பொரித்த கார்ன்ஃப்ளார், ஓமப்பொடியை கொள்ளுடன் சேர்த்து கலந்து வைக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.பார்லி சுண்டல் .1. ஆப்பிள் – பட்டாணி சுண்டல் – 2. மக்காச் சோள காய்கறி சுண்டல்தேவையானவை : பார்லி, வறுத்த வேர்க்கடலை – தலா 1 கப், பொட்டுக்கடலை – 5 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா – தலா 10, இஞ்சி விழுது, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, நறுக்கிய கொத்துமல்லி – சிறிது.செய்முறை : பார்லியில் இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கும் நீரில் நன்றாக ஊற வைக்கவும். இத்துடன் உப்பு சேர்த்து குக்கர் தட்டில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக விடவும். பார்லி உதிர் உதிராக வெந்துவிடும். ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வறுத்த முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, நறுக்கிய கொத்துமல்லியை சேர்த்துக் கலக்கவும்.– வசந்தா மாரிமுத்துஆப்பிள் – பட்டாணி சுண்டல்தேவையானவை : உலர்ந்த பச்சை பட்டாணி – 1 கப், காய்ந்த மிளகாய் – 5, மீடியம் சைஸ் ஆப்பிள் – 1, இஞ்சி விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம், எண்ணெய் – தேவைக்கேற்ப. .கறுப்பு உளுந்து சுண்டல்செய்முறை : முதல் நாள் பட்டாணியை ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஆப்பிளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காயம், மிளகாய் கிள்ளிப் போடவும். இஞ்சி விழுது, மிளகாய் பொடி சேர்க்கவும். பிறகு வெந்த பட்டாணியை போட்டு ஆப்பிள் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கவும். பச்சை நிற ஆப்பிளாய் இருந்தால் மாங்காய் போட்டது போன்ற சுவை கிடைக்கும்.மக்காச் சோள காய்கறி சுண்டல்தேவையானவை : மக்காச் சோளம் வேக வைத்தது – 1 கப், வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் – பொடியாய் நறுக்கியது, கொத்துமல்லி, உப்பு – தேவையான அளவு.செய்முறை : வேக வைத்த சோளத்தை தண்ணீர் வடிகட்டி, அத்துடன் நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் (option) கொத்துமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். இந்த சுண்டலுக்கு தாளிப்பு தேவையில்லை.கறுப்பு உளுந்து சுண்டல்தேவையானவை : கறுப்பு உளுந்து – 1 கப், கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை : கருப்பு உளுந்தை சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரில் வேக விடவும். வெந்ததும் வடிகட்டி எண்ணெயில் கடுகு, பெருங்காயம், மிளகாய் சேர்த்துத் தாளித்து, தேங்காய் துருவல், உப்பு சேர்க்கவும்.– ஜானகி ரங்கநாதன்
– வசந்தா மாரிமுத்து, சென்னை | ஜானகி ரங்கநாதன், மைலாப்பூர்.பாசிப்பயறு இனிப்பு சுண்டல்தேவையானவை : வேகவைத்த பாசிப் பயறு – 1 கப், பேரீச்சம் பழச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு.செய்முறை : பேரீச்சம் பழச் சாறு, தேங்காய் துருவல் இரண்டையும் மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து வேகவைத்த பாசிப்பயறு சேர்த்து பிரட்டி, உப்பு போட்டு அரைத்த விழுதினை கலந்து இறக்கவும்.கோதுமை சுண்டல்தேவையானவை : முளை கட்டிய கோதுமை – 1 கப், பொடியாக நறுக்கிய தக்காளி – 1, கீறிய பச்சை மிளகாய் – 2, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, இஞ்சி துருவல் – தலா கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை : முளை கட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு தாளித்து, அதில் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேக வைத்த கோதுமை, உப்பு போட்டுக் கிளறி இறக்கவும். தக்காளிக்கு பதில் எலுமிச்சை சாறும் பிழியலாம். .1. கோதுமை சுண்டல் – 2. ஜவ்வரிசி சுண்டல்ஜவ்வரிசி சுண்டல்தேவையானவை : ஜவ்வரிசி – 1 கப், குழையாமல் வேகவைத்த பாசிப் பருப்பு – கால் கப், ஒன்றிரண்டாக அரைத்த வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு, பெருங்காயப் பொடி – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.செய்முறை : ஜவ்வரிசியை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய் தாளித்து ஊற வைத்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறி, வேர்க்கடலைப் பொடி, வறுத்த தேங்காய் துருவல், கறிவேப்பிலை போட்டுக் கலந்து இறக்கவும். விரும்பினால் எலுமிச்சை சாறு பிழியலாம்.அவல் சுண்டல்தேவையானவை : கெட்டி அவல் – 2 கப், முளை கட்டிய பச்சைப் பயறு – அரை கப், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன், இஞ்சி – சிறிது, கொத்தமல்லி – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப. .1. அவல் சுண்டல் – 2. கிரிஸ்பி சுண்டல் – 3. பார்லி சுண்டல்செய்முறை : அவலில் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊற வைத்த அவல், முளைகட்டிய பச்சைப் பயறு, தேங்காய்த் துருவல், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.கிரிஸ்பி சுண்டல்தேவையானவை : முளைகட்டிய கொள்ளு – 1 கப், பொரித்த கார்ன் ஃப்ளார் – 1 கப், ஓமப்பொடி – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.செய்முறை : கொள்ளுடன் உப்பு சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரை வேக வைத்து இறக்கி தண்ணீரை வடிக்கவும். பொரித்த கார்ன்ஃப்ளார், ஓமப்பொடியை கொள்ளுடன் சேர்த்து கலந்து வைக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.பார்லி சுண்டல் .1. ஆப்பிள் – பட்டாணி சுண்டல் – 2. மக்காச் சோள காய்கறி சுண்டல்தேவையானவை : பார்லி, வறுத்த வேர்க்கடலை – தலா 1 கப், பொட்டுக்கடலை – 5 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா – தலா 10, இஞ்சி விழுது, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, நறுக்கிய கொத்துமல்லி – சிறிது.செய்முறை : பார்லியில் இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கும் நீரில் நன்றாக ஊற வைக்கவும். இத்துடன் உப்பு சேர்த்து குக்கர் தட்டில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக விடவும். பார்லி உதிர் உதிராக வெந்துவிடும். ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வறுத்த முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, நறுக்கிய கொத்துமல்லியை சேர்த்துக் கலக்கவும்.– வசந்தா மாரிமுத்துஆப்பிள் – பட்டாணி சுண்டல்தேவையானவை : உலர்ந்த பச்சை பட்டாணி – 1 கப், காய்ந்த மிளகாய் – 5, மீடியம் சைஸ் ஆப்பிள் – 1, இஞ்சி விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம், எண்ணெய் – தேவைக்கேற்ப. .கறுப்பு உளுந்து சுண்டல்செய்முறை : முதல் நாள் பட்டாணியை ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஆப்பிளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காயம், மிளகாய் கிள்ளிப் போடவும். இஞ்சி விழுது, மிளகாய் பொடி சேர்க்கவும். பிறகு வெந்த பட்டாணியை போட்டு ஆப்பிள் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கவும். பச்சை நிற ஆப்பிளாய் இருந்தால் மாங்காய் போட்டது போன்ற சுவை கிடைக்கும்.மக்காச் சோள காய்கறி சுண்டல்தேவையானவை : மக்காச் சோளம் வேக வைத்தது – 1 கப், வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் – பொடியாய் நறுக்கியது, கொத்துமல்லி, உப்பு – தேவையான அளவு.செய்முறை : வேக வைத்த சோளத்தை தண்ணீர் வடிகட்டி, அத்துடன் நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் (option) கொத்துமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். இந்த சுண்டலுக்கு தாளிப்பு தேவையில்லை.கறுப்பு உளுந்து சுண்டல்தேவையானவை : கறுப்பு உளுந்து – 1 கப், கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை : கருப்பு உளுந்தை சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரில் வேக விடவும். வெந்ததும் வடிகட்டி எண்ணெயில் கடுகு, பெருங்காயம், மிளகாய் சேர்த்துத் தாளித்து, தேங்காய் துருவல், உப்பு சேர்க்கவும்.– ஜானகி ரங்கநாதன்