ஒருபக்க கதை.கதை : கீதா சீனிவாசன்ஓவியம் : சுதர்ஸன்.சுந்தரேசனுக்கு அன்று காலையிலிருந்தே ஏகப்பட்ட ஃபோன் கால்! தங்கை சுபத்ரா, "அண்ணே… இங்க ராத்திரி களேபரமாய்டுச்சு. நம்ப புனிதா யாரையோ லவ் பண்றாளாம். அவரு இடிஞ்சு போய் உட்கார்ந்திட்டாரு. குடும்ப மானம் அவ்வளவுதானான்னு புலம்பறாரு. ஏன் இந்த கல்யாணப் பேச்சை எடுத்தோம்னு ஆயிடுச்சு. நீ எதேச்சையா வர்றா மாதிரி வந்து, புனிதாவை கண்டிச்சுப் பாரேன். அப்புறம் முக்கியமா, நான் சொன்னேன்னு காட்டிக்காத!".என்னடா இதுவென்று சுந்தரேசன் கவலைப்பட்டார். பிறகு, பத்து மணி வாக்கில் மகேஷ் பேசினான். "மாமா எனக்கு எதுவுமே புரியலை… அக்கா யாரையோ லவ் பண்ணுதாம். வீட்ல சண்டை. யாரும் சரியா சாப்பிடல. நீங்க வந்து சமாதானப்படுத்துங்க மாமா. நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க. அப்பா பலி போட்டுருவாரு!".சுந்தரேசனின் கவலை இன்னும் அதிகமாயிற்று. அந்தக் காலத்துல பெரியவங்க அறிவுரைக்கு எவ்வளவு மரியாதை இருக்கும்? மாலை போகலாம். சரி… எப்படி ஆரம்பிப்பது? எப்படித் தெரியும் என்றால்…? தங்கையின் கணவர் முன்கோபி ஆச்சே?.மாலைக்குள் புனிதாவே ஃபோன் செய்தாள். "மாமா என்னை மன்னிச்சிடுங்க. நேர்ல தனியா எல்லாத்தையும் சொல்றேன். மனசுல ஒருத்தர வெச்சுக்கிட்டு எப்படி மாமா வேற ஒருத்தரோட குடும்பம் நடத்த முடியும்? அப்பா எரிமலையா இருக்காரு. முடிஞ்சா வீட்டுக்கு வாங்க மாமா. நான் சொன்னேன்னு காட்டிக்காதீங்க!".மாலை… பலத்த யோசனையுடன் சுந்தரேசன் தங்கை வீட்டிற்குள் நுழைந்தார். நடுக்கூடத்தில் சுபத்ராவின் கணவர் கண்கள் சிவக்க, கைகளைப் பிசைந்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார். உள்ளே வந்த சுந்தரேசனை, நக்கீரனை சிவபெருமான் பார்த்ததுபோல் பார்த்தார். இந்த நேரத்தில் இவன் எப்படி? "வா… வா… என்ன விசயம்" தடிப்பான குரலில் கேட்டார். சுந்தரேசனுக்கு ஞாபகம் வந்தது. 'நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க' என்ற வேண்டுகோள். சரி… பிறகு எப்படி ஆரம்பிப்பது? சுற்றுமுற்றும் யாருமில்லை. "ஹி… ஹி… சும்மாதான் வந்தேன். வீட்ல அப்பான்னா உன்னை மாதிரிதான் இருக்கணும். கம்பீரமா! நியாயமா! நமக்கெல்லாம் கௌரவம் ரொம்ப முக்கியம். ஏதோ சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். ஆனா, ஒண்ணு… நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.".விறு விறுவென்று வெளியேறினார் சுந்தரேசன்!
ஒருபக்க கதை.கதை : கீதா சீனிவாசன்ஓவியம் : சுதர்ஸன்.சுந்தரேசனுக்கு அன்று காலையிலிருந்தே ஏகப்பட்ட ஃபோன் கால்! தங்கை சுபத்ரா, "அண்ணே… இங்க ராத்திரி களேபரமாய்டுச்சு. நம்ப புனிதா யாரையோ லவ் பண்றாளாம். அவரு இடிஞ்சு போய் உட்கார்ந்திட்டாரு. குடும்ப மானம் அவ்வளவுதானான்னு புலம்பறாரு. ஏன் இந்த கல்யாணப் பேச்சை எடுத்தோம்னு ஆயிடுச்சு. நீ எதேச்சையா வர்றா மாதிரி வந்து, புனிதாவை கண்டிச்சுப் பாரேன். அப்புறம் முக்கியமா, நான் சொன்னேன்னு காட்டிக்காத!".என்னடா இதுவென்று சுந்தரேசன் கவலைப்பட்டார். பிறகு, பத்து மணி வாக்கில் மகேஷ் பேசினான். "மாமா எனக்கு எதுவுமே புரியலை… அக்கா யாரையோ லவ் பண்ணுதாம். வீட்ல சண்டை. யாரும் சரியா சாப்பிடல. நீங்க வந்து சமாதானப்படுத்துங்க மாமா. நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க. அப்பா பலி போட்டுருவாரு!".சுந்தரேசனின் கவலை இன்னும் அதிகமாயிற்று. அந்தக் காலத்துல பெரியவங்க அறிவுரைக்கு எவ்வளவு மரியாதை இருக்கும்? மாலை போகலாம். சரி… எப்படி ஆரம்பிப்பது? எப்படித் தெரியும் என்றால்…? தங்கையின் கணவர் முன்கோபி ஆச்சே?.மாலைக்குள் புனிதாவே ஃபோன் செய்தாள். "மாமா என்னை மன்னிச்சிடுங்க. நேர்ல தனியா எல்லாத்தையும் சொல்றேன். மனசுல ஒருத்தர வெச்சுக்கிட்டு எப்படி மாமா வேற ஒருத்தரோட குடும்பம் நடத்த முடியும்? அப்பா எரிமலையா இருக்காரு. முடிஞ்சா வீட்டுக்கு வாங்க மாமா. நான் சொன்னேன்னு காட்டிக்காதீங்க!".மாலை… பலத்த யோசனையுடன் சுந்தரேசன் தங்கை வீட்டிற்குள் நுழைந்தார். நடுக்கூடத்தில் சுபத்ராவின் கணவர் கண்கள் சிவக்க, கைகளைப் பிசைந்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார். உள்ளே வந்த சுந்தரேசனை, நக்கீரனை சிவபெருமான் பார்த்ததுபோல் பார்த்தார். இந்த நேரத்தில் இவன் எப்படி? "வா… வா… என்ன விசயம்" தடிப்பான குரலில் கேட்டார். சுந்தரேசனுக்கு ஞாபகம் வந்தது. 'நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க' என்ற வேண்டுகோள். சரி… பிறகு எப்படி ஆரம்பிப்பது? சுற்றுமுற்றும் யாருமில்லை. "ஹி… ஹி… சும்மாதான் வந்தேன். வீட்ல அப்பான்னா உன்னை மாதிரிதான் இருக்கணும். கம்பீரமா! நியாயமா! நமக்கெல்லாம் கௌரவம் ரொம்ப முக்கியம். ஏதோ சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். ஆனா, ஒண்ணு… நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.".விறு விறுவென்று வெளியேறினார் சுந்தரேசன்!