-வாசகர் ஜமாய்க்கிறாங்க.கோன் கொழுக்கட்டை.தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் – 1, தேங்காய் துருவல் – 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப..செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போடவும். பிறகு ஏலத்தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வும். வெல்லம் கரைந்து கொதி வந்தபின், இறக்கி ஆற வைத்து வடிகட்டிக்கொள்ளவும்..ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, செவ்வாழைப் பழத்தைப்போட்டு கையால் நன்றாக மசிக்கவும். அதில் தேங்காய் துருவல்-1 கப் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக வெல்லப்பாகை ஊற்றிப் பிசையவும். மாவு கொழுக்கட்டை பதம் வரும் வரை பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. வெல்லப்பாகு மட்டுமே போதுமானது..பிறகு, வாழை இலையை சிறிது சிறிதாக வெட்டி கடையில் பொட்டலம் கட்டுவதுபோல், மெதுவாகப் பொட்டலம் போட்டு அதில் பிசைந்து வைத்துள்ள கொழுக்கட்டை மாவை நிரப்பி மடித்து, மெதுவாக நூலால் கட்டிவிடவும்..இப்படியே எல்லா மாவையும் கோன்போல் செய்து, இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி, மேல் தட்டில் வாழை இலை கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக விடவும். பத்து அல்லது பதினைந்து நிமிடம் வெந்தபின் இறக்கி ஆறியபின், மெதுவாக வாழை இலையை எடுக்கவும். ஒரு தட்டில் வைத்து மீதமுள்ள தேங்காய் துருவலை தூவவும். இதுவே, வித்தியாசமான கோன் கொழுக்கட்டை. விநாயக சதுர்த்தி அன்று புதுவிதமான கொழுக்கட்டையை வைத்து விநாயகரை பூஜித்து மகிழலாமே!.கேரள காரக் கொழுக்கட்டை.தேவையானவை : வறுத்த பச்சரிசி மாவு-2 கப், உப்பு-தேவையான அளவு, தண்ணீர்-தேவைக்கேற்ப, தேங்காய் துருவல்-4 ஸ்பூன், மிளகாய்த்தூள்-அரை ஸ்பூன், மஞ்சள் தூள்-கால் ஸ்பூன், சிறிய வெங்காயம்-பத்து, கடுகு-1 ஸ்பூன், காய்ந்த மிளகாய்-இரண்டு, கறிவேப்பிலை ஒரு கொத்து, தேங்காய் எண்ணெய்-2 ஸ்பூன், சீரகம்-அரை ஸ்பூன்..செய்முறை : ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவைக் கொட்டி, அதில் உப்பு கலந்து, தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளற வேண்டும். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கையால் நன்றாகப் பிசைந்து, கையால் சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி பானையில் வைத்து, ஆவியில் வேகவிட்டு இறக்கவும்..பிறகு, மிக்ஸியில் தேங்காய்த் துருவல், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி, அதில் வேகவைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு, சிறிது உப்பு தூவி மசாலா எல்லாப் பக்கங்களிலும் படும்படிக் கிளறிவிட்டு இறக்கவும். விநாயகருக்குப் படைக்க சூடான கேரள காரக் கொழுக்கட்டை ரெடி!.மக்காச்சோள ரவைக் கொழுக்கட்டை.தேவையானவை : மக்காச்சோள ரவை-2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு-தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்-சிறிதளவு, தேங்காய்த் துருவல்-1 கப், உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப..செய்முறை : அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கியதும் அதில் ஆறு கப் தண்ணீர் விடவும். (இந்த ரவை வேக அதிக தண்ணீர் எடுத்துக்கொள்ளும்.) இந்தத் தண்ணீரில் பெருங்காயத்தைக் கரைத்து ஊற்றி, உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைப்போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு கொழுக்கட்டைப் பிடிக்கும் பதம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். மாவு ஆறியவுடன் கொழுக்கட்டைகளைப் பிடித்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து இறக்கவும். இதுவே 'மக்காச் சோள ரவைக் கொழுக்கட்டை. இதை விநாயகருக்குப் படைத்து அவருடைய அருளைப் பெற்று நாமும் உண்டு மகிழலாமே!.குறிப்பு : சோளத்தில் புரதம், மாவுச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, பீட்டா கரோடின் போன்ற பல சத்துகள் உள்ளன. இது, ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். வளரும் குழந்தைகளுக்கும் இது நல்லது..தயிர் கொழுக்கட்டை.தேவையானவை : இடியாப்ப அரிசி மாவு-1 கப், தயிர்-1 தம்ளர், பச்சை மிளகாய்-2, தண்ணீர்-2 கப், துருவிய கேரட்-3 ஸ்பூன், தேங்காய் துருவல்- 4 ஸ்பூன், இஞ்சி-சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப..தாளிக்க : எண்ணெய்-2 ஸ்பூன், கடுகு-1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், பெருங்காயத்தூள்-1 சிட்டிகை, கொத்தமல்லி, கறிவேப்பிலை-சிறிதளவு..செய்முறை : ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். சூட்டிலேயே மாவு நன்றாக வெந்துவிடும்..மாவை ஒரு தட்டில் கொட்டி நன்றாகப் பிசைந்து கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடித்து, அதை இட்லி பானையில் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து, பிறகு தட்டில் கொட்டி ஆறவிடவும்..ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து, சிறிதளவு உப்புப் போட்டு கலந்து விடவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு நைஸாக அரைத்து தயிரில் கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து தயிரில் கொட்டவும். வேகவைத்துள்ள சிறிய கொழுக்கட்டைகளை ஆறவைத்து தயிரில் கலந்து விடவும். அதில் கொத்துமல்லி தழை, கறிவேப்பிலையை கிள்ளிப்போடவும். பிறகு துருவிய கேரட் போட்டு அலங்கரிக்கவும். இப்போது சுவையான தயிர் கொழுக்கட்டை தயார். இது விநாயகர் பூஜைக்கும் ஏற்றதாகும்..குறிப்பு : ஐந்து நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்துப் பரிமாறலாம்..– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.கம்பு வெல்ல கொழுக்கட்டை.தேவையானவை : கம்பு மாவு-1 கப், தேங்காய் துருவல்-கால் கப், ஏலத்தூள், சுக்குத்தூள், உப்பு-ஒரு சிட்டிகை..செய்முறை : வெறும் வாணலியில் கம்புமாவை வாசனை வரும்வரை வறுத்து இறக்கவும். அது ஆறிய பிறகு அந்த மாவில் சிறிது உப்பு, நீர் சேர்த்து பிசைந்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்..வெல்லத்தை நீரில் கரைத்து, மண் நீக்கி பாகு காய்ச்சவும். அதோடு, வறுத்து வேகவைத்து ஆறிய கம்பு மாவு, தேங்காய் துருவல், ஏலத்தூள், சுக்குத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பதினைந்து நிமிடம் வேகவைத்து எடுத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யலாம்..– வசந்தா மாரிமுத்து, சென்னை.அருகம்புல் கொழுக்கட்டை.தேவையானவை : கடுகு-அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு-அரை ஸ்பூன், கடலைப்பருப்பு-அரை ஸ்பூன், மிளகு-அரை ஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது), கறிவேப்பிலை-1 ஆர்க்கு, கேரட் (துருவியது) – கால் கப், தேங்காய்த் துருவல்-கால் கப், அரிசி மாவு- ஒன்றரை கப் (கொழுக்கட்டை மாவு), அருகம்புல் சாறு – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப, கொத்துமல்லி தழை – சிறிதளவு, எண்ணெய் – தாளிக்க..செய்முறை : ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை போட்டு, பருப்புகள் சிவந்தவுடன் அதில் துருவிய கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அத்துடன் அரிசிமாவு (கொழுக்கட்டை மாவு), நறுக்கிய கொத்துமல்லி தழை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி, அருகம்புல் சாறு சேர்த்து கலந்து பிசைந்து கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுக்க, சுவையான அருகம்புல் கொழுக்கட்டை தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்..– ஸ்ரீமதி மாயா சேகர், மும்பை.கோவாபிடி கொழுக்கட்டை.தேவையானவை : கொழுக்கட்டை மாவு-1 கப், வறுத்த எள்-1 டீஸ்பூன், நல்லெண்ணெய்-சிறிது, கோவா- அரை கப் (பாலை சுண்டக் காய்ச்சி சர்க்கரை இல்லாமல்), வெல்லத் துருவல்-அரை கப், ஏலப்பொடி-சிறிது, தண்ணீர்-2 கப், உப்பு-ஒரு சிட்டிகை..செய்முறை : இரண்டு கப் நீரில் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, அதில் நல்லெண்ணெய்விட்டு அதில் மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி தட்டாமல் கொழுக்கட்டை பதத்துக்கு மாவை கிளறி, எள், ஏலப்பொடி, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துக்கிளறி இறக்கவும். பிறகு அதில் கோவாவை உதிர்த்துவிட்டுக் கிளறவும்..மாவு ஆறியதும் சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் பதினைந்து நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி, சுவாமிக்கு வைவேத்தியம் செய்யவும்..– எம்.வசந்தா, சிட்லபாக்கம்.தேங்காய்ப்பால் கொழுக்கட்டை.தேவையானவை : கொழுக்கட்டை மாவு – 1 கப், நல்லெண்ணெய் – 1 ஸ்பூன், தேங்காய்ப்பால் – 1 கப், ஏலப்பொடி – சிறிது, வெல்லப்பாகு – அரை கப்..செய்முறை : ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு கப் நீர் விட்டு கொதிக்கவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி கொழுக்கட்டை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கொழுக்கட்டை உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். கடைசியில் வெல்லப்பாகு, ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு பரிமாறலாம்..– எஸ்.சித்ரா, சென்னை
-வாசகர் ஜமாய்க்கிறாங்க.கோன் கொழுக்கட்டை.தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் – 1, தேங்காய் துருவல் – 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப..செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போடவும். பிறகு ஏலத்தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வும். வெல்லம் கரைந்து கொதி வந்தபின், இறக்கி ஆற வைத்து வடிகட்டிக்கொள்ளவும்..ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, செவ்வாழைப் பழத்தைப்போட்டு கையால் நன்றாக மசிக்கவும். அதில் தேங்காய் துருவல்-1 கப் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக வெல்லப்பாகை ஊற்றிப் பிசையவும். மாவு கொழுக்கட்டை பதம் வரும் வரை பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. வெல்லப்பாகு மட்டுமே போதுமானது..பிறகு, வாழை இலையை சிறிது சிறிதாக வெட்டி கடையில் பொட்டலம் கட்டுவதுபோல், மெதுவாகப் பொட்டலம் போட்டு அதில் பிசைந்து வைத்துள்ள கொழுக்கட்டை மாவை நிரப்பி மடித்து, மெதுவாக நூலால் கட்டிவிடவும்..இப்படியே எல்லா மாவையும் கோன்போல் செய்து, இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி, மேல் தட்டில் வாழை இலை கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக விடவும். பத்து அல்லது பதினைந்து நிமிடம் வெந்தபின் இறக்கி ஆறியபின், மெதுவாக வாழை இலையை எடுக்கவும். ஒரு தட்டில் வைத்து மீதமுள்ள தேங்காய் துருவலை தூவவும். இதுவே, வித்தியாசமான கோன் கொழுக்கட்டை. விநாயக சதுர்த்தி அன்று புதுவிதமான கொழுக்கட்டையை வைத்து விநாயகரை பூஜித்து மகிழலாமே!.கேரள காரக் கொழுக்கட்டை.தேவையானவை : வறுத்த பச்சரிசி மாவு-2 கப், உப்பு-தேவையான அளவு, தண்ணீர்-தேவைக்கேற்ப, தேங்காய் துருவல்-4 ஸ்பூன், மிளகாய்த்தூள்-அரை ஸ்பூன், மஞ்சள் தூள்-கால் ஸ்பூன், சிறிய வெங்காயம்-பத்து, கடுகு-1 ஸ்பூன், காய்ந்த மிளகாய்-இரண்டு, கறிவேப்பிலை ஒரு கொத்து, தேங்காய் எண்ணெய்-2 ஸ்பூன், சீரகம்-அரை ஸ்பூன்..செய்முறை : ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவைக் கொட்டி, அதில் உப்பு கலந்து, தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளற வேண்டும். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கையால் நன்றாகப் பிசைந்து, கையால் சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி பானையில் வைத்து, ஆவியில் வேகவிட்டு இறக்கவும்..பிறகு, மிக்ஸியில் தேங்காய்த் துருவல், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி, அதில் வேகவைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு, சிறிது உப்பு தூவி மசாலா எல்லாப் பக்கங்களிலும் படும்படிக் கிளறிவிட்டு இறக்கவும். விநாயகருக்குப் படைக்க சூடான கேரள காரக் கொழுக்கட்டை ரெடி!.மக்காச்சோள ரவைக் கொழுக்கட்டை.தேவையானவை : மக்காச்சோள ரவை-2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு-தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்-சிறிதளவு, தேங்காய்த் துருவல்-1 கப், உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப..செய்முறை : அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கியதும் அதில் ஆறு கப் தண்ணீர் விடவும். (இந்த ரவை வேக அதிக தண்ணீர் எடுத்துக்கொள்ளும்.) இந்தத் தண்ணீரில் பெருங்காயத்தைக் கரைத்து ஊற்றி, உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைப்போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு கொழுக்கட்டைப் பிடிக்கும் பதம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். மாவு ஆறியவுடன் கொழுக்கட்டைகளைப் பிடித்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து இறக்கவும். இதுவே 'மக்காச் சோள ரவைக் கொழுக்கட்டை. இதை விநாயகருக்குப் படைத்து அவருடைய அருளைப் பெற்று நாமும் உண்டு மகிழலாமே!.குறிப்பு : சோளத்தில் புரதம், மாவுச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, பீட்டா கரோடின் போன்ற பல சத்துகள் உள்ளன. இது, ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். வளரும் குழந்தைகளுக்கும் இது நல்லது..தயிர் கொழுக்கட்டை.தேவையானவை : இடியாப்ப அரிசி மாவு-1 கப், தயிர்-1 தம்ளர், பச்சை மிளகாய்-2, தண்ணீர்-2 கப், துருவிய கேரட்-3 ஸ்பூன், தேங்காய் துருவல்- 4 ஸ்பூன், இஞ்சி-சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப..தாளிக்க : எண்ணெய்-2 ஸ்பூன், கடுகு-1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், பெருங்காயத்தூள்-1 சிட்டிகை, கொத்தமல்லி, கறிவேப்பிலை-சிறிதளவு..செய்முறை : ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். சூட்டிலேயே மாவு நன்றாக வெந்துவிடும்..மாவை ஒரு தட்டில் கொட்டி நன்றாகப் பிசைந்து கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடித்து, அதை இட்லி பானையில் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து, பிறகு தட்டில் கொட்டி ஆறவிடவும்..ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து, சிறிதளவு உப்புப் போட்டு கலந்து விடவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு நைஸாக அரைத்து தயிரில் கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து தயிரில் கொட்டவும். வேகவைத்துள்ள சிறிய கொழுக்கட்டைகளை ஆறவைத்து தயிரில் கலந்து விடவும். அதில் கொத்துமல்லி தழை, கறிவேப்பிலையை கிள்ளிப்போடவும். பிறகு துருவிய கேரட் போட்டு அலங்கரிக்கவும். இப்போது சுவையான தயிர் கொழுக்கட்டை தயார். இது விநாயகர் பூஜைக்கும் ஏற்றதாகும்..குறிப்பு : ஐந்து நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்துப் பரிமாறலாம்..– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.கம்பு வெல்ல கொழுக்கட்டை.தேவையானவை : கம்பு மாவு-1 கப், தேங்காய் துருவல்-கால் கப், ஏலத்தூள், சுக்குத்தூள், உப்பு-ஒரு சிட்டிகை..செய்முறை : வெறும் வாணலியில் கம்புமாவை வாசனை வரும்வரை வறுத்து இறக்கவும். அது ஆறிய பிறகு அந்த மாவில் சிறிது உப்பு, நீர் சேர்த்து பிசைந்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்..வெல்லத்தை நீரில் கரைத்து, மண் நீக்கி பாகு காய்ச்சவும். அதோடு, வறுத்து வேகவைத்து ஆறிய கம்பு மாவு, தேங்காய் துருவல், ஏலத்தூள், சுக்குத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பதினைந்து நிமிடம் வேகவைத்து எடுத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யலாம்..– வசந்தா மாரிமுத்து, சென்னை.அருகம்புல் கொழுக்கட்டை.தேவையானவை : கடுகு-அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு-அரை ஸ்பூன், கடலைப்பருப்பு-அரை ஸ்பூன், மிளகு-அரை ஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது), கறிவேப்பிலை-1 ஆர்க்கு, கேரட் (துருவியது) – கால் கப், தேங்காய்த் துருவல்-கால் கப், அரிசி மாவு- ஒன்றரை கப் (கொழுக்கட்டை மாவு), அருகம்புல் சாறு – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப, கொத்துமல்லி தழை – சிறிதளவு, எண்ணெய் – தாளிக்க..செய்முறை : ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை போட்டு, பருப்புகள் சிவந்தவுடன் அதில் துருவிய கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அத்துடன் அரிசிமாவு (கொழுக்கட்டை மாவு), நறுக்கிய கொத்துமல்லி தழை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி, அருகம்புல் சாறு சேர்த்து கலந்து பிசைந்து கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுக்க, சுவையான அருகம்புல் கொழுக்கட்டை தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்..– ஸ்ரீமதி மாயா சேகர், மும்பை.கோவாபிடி கொழுக்கட்டை.தேவையானவை : கொழுக்கட்டை மாவு-1 கப், வறுத்த எள்-1 டீஸ்பூன், நல்லெண்ணெய்-சிறிது, கோவா- அரை கப் (பாலை சுண்டக் காய்ச்சி சர்க்கரை இல்லாமல்), வெல்லத் துருவல்-அரை கப், ஏலப்பொடி-சிறிது, தண்ணீர்-2 கப், உப்பு-ஒரு சிட்டிகை..செய்முறை : இரண்டு கப் நீரில் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, அதில் நல்லெண்ணெய்விட்டு அதில் மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி தட்டாமல் கொழுக்கட்டை பதத்துக்கு மாவை கிளறி, எள், ஏலப்பொடி, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துக்கிளறி இறக்கவும். பிறகு அதில் கோவாவை உதிர்த்துவிட்டுக் கிளறவும்..மாவு ஆறியதும் சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் பதினைந்து நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி, சுவாமிக்கு வைவேத்தியம் செய்யவும்..– எம்.வசந்தா, சிட்லபாக்கம்.தேங்காய்ப்பால் கொழுக்கட்டை.தேவையானவை : கொழுக்கட்டை மாவு – 1 கப், நல்லெண்ணெய் – 1 ஸ்பூன், தேங்காய்ப்பால் – 1 கப், ஏலப்பொடி – சிறிது, வெல்லப்பாகு – அரை கப்..செய்முறை : ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு கப் நீர் விட்டு கொதிக்கவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி கொழுக்கட்டை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கொழுக்கட்டை உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். கடைசியில் வெல்லப்பாகு, ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு பரிமாறலாம்..– எஸ்.சித்ரா, சென்னை