இந்தியாவில் 90-களில் வெளியாகி, குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த ஃபேவரைட் டிவி சீரியல் சக்திமான் ஷோ. இப்போது இந்த சீரியல் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது;
இந்தியாவில் 90-களில் வெளியாகி குழந்தைகளின் ஃபேவரைட் ஷோ வாக இருந்தது சக்திமான் தொடர். இதுபோன்ற சூப்பர் ஹீரோ கதைகளுக்கு உலகெங்கும் எப்போதும் மவுசு உண்டு. ஆகவே இத்தொடரை சினிமாவாக எடுக்கத் தீர்மானித்தோம்.
அந்த வகையில் சக்திமான் மூன்று பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.
-இவ்வாறு சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் ஹாலிவுட் தரத்திலான இந்தியன் சூப்பர் ஹீரோவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.