சென்னை:
தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப் படுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன் தினம் (பிப்ரவரி 19) ஒரேகட்டமாக நடத்தி முடிக்கப் பட்டது. ஆனால் 5 வார்டுகளில் வேட்பாளர்கள் மரணம் நடந்ததையொட்டி, அங்கு வாக்குப் பதிவு தள்ளி வைக்கப்பட்டு, இன்று மறுவாக்குப் பதிவு நடக்கிறது.
அதையடுத்து சென்னை மாநகராட்சியில் புதுவண்ணாரப்பேட்டை, பெசன்ட் நகர் ஓடைக்குப்பம், அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி, மதுரை திருமங்கலம் நகராட்சி, திருவன்ணாமலை ஆகிய ஊர்களில் தலா ஒரு வார்டுகளில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.