Things women over 50 should pay attention to! 
Motivation

50 வயதுக்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தந்திரங்கள்! 

கிரி கணபதி

50 வயதைக் கடந்துவிட்டாலே பலருக்கு பலவிதமான யோசனைகள் வர ஆரம்பிக்கும். இந்த வயது வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனை ஆகும். இதுவரை நாம் அடைந்த வெற்றிகள், தோல்விகள், அனுபவங்கள் என அனைத்தையும் கொண்டு இனிவரும் காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது என்பது குறித்து பலருக்கு குழப்பமாக இருக்கும். இளம் வயதில் நாம் கவலைப்படாத பல விஷயங்கள் இந்த வயதில் முக்கியத்துவம் பெறும். உடல்நலம், குடும்ப உறவுகள், பொழுதுபோக்குகள், ஆன்மிகம் என பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு இந்த கட்டத்தில் வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். 

50 வயதை தாண்டிய பிறகு உடல் நலம்தான் நமது வாழ்க்கையின் முக்கிய அம்சமாக மாறும். தவறான உணவுப் பழக்கங்கள், குறைவான உடற்பயிற்சி, மன அழுத்தம் போன்றவை பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ஆரோக்கியமான உணவுமுறை, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றைக் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். 

குடும்ப உறவுகள் நமக்கு ஆதரவாக இருக்கும் ஒரு பாதுகாப்பான இடம். 50 வயதில் குழந்தைகள் வளர்ந்து தனித்து வாழத் தொடங்கலாம். இதனால், தம்பதியினருக்கு இடையே உறவு மேலும் வலுப்படுவது அவசியம். இதற்கு ஒன்றாக நேரத்தை செலவிடுதல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல், பயணம் செல்லுதல் போன்றவை பெரிதளவில் உதவும். 

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது மூளைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைத்து நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இசைக்கருவி வாசித்தல், ஓவியம் வரைதல், புதிய மொழி கற்பது போன்றவற்றை 50 வயதைக் கடந்தவர்கள் முயற்சிக்கலாம். 

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிற நபர்களுடன் தொடர்பில் இருப்பது, மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக பணியாற்றுவது, புதிய நண்பர்களை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த வயதில் ஆன்மீகத்தை நோக்கி செல்வது மனதுக்கு நிம்மதியைக் கொடுக்கும். ஆன்மீகம் நம் உள் உலகத்தை அறிந்துகொள்ள உதவும். தியானம், யோகா போன்றவை மன அமைதியைத் தந்து வாழ்க்கையை ஒரு புதிய பார்வையில் பார்க்க உதவும். 

50 வயதில் ஓய்வு காலத்திற்காகத் திட்டமிடுவது அவசியம். இதற்காக இளம் வயதிலிருந்தே நிதித் திட்டமிடல் செய்வது மிகவும் முக்கியம். ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை சேமித்து வைப்பதுடன் முதலீடுகளையும் செய்து வைப்பது நல்லது. 

50 வயதுக்கு மேல் வாழ்க்கை என்பது ஒரு புதிய தொடக்கம். இதுவரை அடைந்த அனுபவங்களைக் கொண்டு இனிவரும் காலங்களை மிகவும் அர்த்தமுள்ளதாக வாழ முயற்சிக்க வேண்டும். மேலே, குறிப்பிட்ட விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் 50 வயதைக் கடந்தும் மகிழ்ச்சியாக நிம்மதியுடன் வாழலாம்.‌

சளி பிரச்சினையை அடித்து விரட்டும் செலவு ரசம்! 

Dry Shampoo பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

நூற்றாண்டு கடந்தும் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் திருப்பதி குடையின் விசேஷம் தெரியுமா?

அது என்னது Index Fund? லாபம் மட்டுமே தரும் முதலீடு! 

அழகிய பீங்கான் பாத்திரங்களின் வளமான வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT