Ducks 
கோகுலம் / Gokulam

குவா குவா வாத்துகள்... சுவாரஸ்ய குறிப்புகள்!

வாசுதேவன்

தனி ஸ்டைலில் அழகாக நடந்து செல்லும் வாத்துகள் பற்றிய விவரங்கள்

  • வாத்துகள் நீர்வாழ் கோழி இனத்தை சார்ந்தவை.

  • இறகுகள் இருந்தாலும் அதிக தூரம், அதிக உயரம், அதிக நேரம் பறக்க இயலாது.

  • இவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு அதிக டிமாண்ட் உண்டு.

  • ஆண் வாத்துகள் பெண் வாத்துகளை விட உயரமாகவும், நீண்ட கழுத்துகள் கொண்டும் உள்ளன.

  • இவை அச்ச குணம் கொண்டவை.

  • வாத்துகள் மற்றும் அவைகளின் முட்டைகள் கோழிகளின் எடை அவற்றின் முட்டைகளின் எடை விட கூடுதல் எடை கொண்டவை.

  • வாத்துகள் முட்டைகளை அவை வளரும் இடத்திலேயே இடும்.

  • இவை பெரும்பாலும் விடியற் காலையில் முட்டைகள் இடும்.

  • வருடத்திற்கு 50 முட்டைகளுக்கு மேல் இடக்கூடியவை.

  • இவை நீர் நிலைகள், நிலப் பகுதியில் திரிந்துக் கொண்டு இருக்கும்.

  • நீரில் நீந்தி செல்வதை வாத்துகள் மிகவும் நேசிக்கும்.

  • இவைகளால் பனி மீது நடந்து செல்ல முடியும்.

  • இவற்றின் கழிவுகள் மீன்களுக்கு உணவாகவும், வயல் வெளிகளில் உரமாகவும் பயன் படுகின்றது.

  • நாட்டு வாத்துகளுக்கு தண்ணீர் தேவையில்லை. எந்த வகை சீதோஷ்ன நிலையிலும் வளரும் நாட்டு வாத்துகள்.

  • வாத்துகளின் கால்களில் நரம்புகள் இரத்த நாளங்கள் இல்லை. அதனால் தண்ணீர் குளிச்சியாக இருந்தாலும் உணர முடியாது.

  • இவற்றின் குவாக் குவாக் சப்தம் எதிரொலிக்கும்.

  • வாத்துகள் பயந்த சுபாவம் உள்ளதால் கூட்டமாகவே இருக்கும்.

  • வாத்துகளில் 100 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

  • மாண்டாரின் வகை வாத்துகள் பல நிறங்கள் கொண்டவை.

  • அண்டார்டிக்கா கண்டத்தை தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் வாத்துகளை காணலாம்.

  • காட்டு வாத்துகள் 20 வருடங்கள், வீட்டு அல்லது பண்ணைகளில் வசிக்கும் வாத்துகள் பொதுவாக 12 - 15 வருடங்கள் உயிர் வாழ்கின்றன.

  • இவற்றிற்கு கண்கள் பார்வை மிகவும் நன்றாக உள்ளன. இவைகளுக்கு மூன்று கண் இமைகள் உள்ளன.

  • வாத்துகள் தங்கள் உணவுகளை தண்ணீரில் தேடும். சின்ன சின்ன மீன்கள், மீன்களின் முட்டைகள், தவளைகள், பூச்சிகள், நத்தை, விதைகள், பழங்கள் போன்றவற்றை உண்ணும்.

விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது?

இரவில் மட்டுமே மலரும்; நறுமணம் வீசும்; மனதை மயக்கும் பச்சை நிறப்பூ - அது என்ன பூ?

சண்டிகரை சுற்றிப் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள்!

உலகளாவிய பட்டினிப் பிரச்னையும், வீணாகும் உணவுப் பொருட்களும்!

பசிக்காக 200 யானைகளை கொல்ல தயாராகும் ஜிம்பாப்வே... இது என்ன கொடுமையடா சாமி?

SCROLL FOR NEXT