கிரி கணபதி
பாம்பு என்றாலே படையும் நடுங்கும், அதிலும் 'கண்ணாடி விரியன்' (Russell's Viper) என்றால் மரண பயம் தான். இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த ஆபத்தான பாம்பைப் பற்றி வெளியே தெரியாத பல பகீர் உண்மைகள் உள்ளன. வாங்க, அதைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
1. இந்த பாம்பு கோபமடைந்தால், பிரஷர் குக்கர் விசில் அடிப்பது போல மிக சத்தமாகச் சீறும். இதுவே அது நமக்குத் தரும் முதல் எச்சரிக்கை.
2. பெரும்பாலான பாம்புகள் முட்டை தான் இடும். ஆனால் கண்ணாடி விரியன் ஒரே பிரசவத்தில் 20 முதல் 60 குட்டிகள் வரை அப்படியே நேரடியாக ஈனும்.
3. இதன் விஷம் (Hemotoxic) நேராக ரத்த மண்டலத்தைத் தாக்கி, ரத்தத்தை ஜெல்லி போல உறைய வைத்துவிடும் திறன் கொண்டது.
4. இவை பெரும்பாலும் வயல்வெளிகளில் எலிகளை வேட்டையாடவே வருகின்றன. இதனால் தான் விவசாயிகள் அதிக அளவில் கடிபடுகிறார்கள்.
5. கண்ணாடி விரியன் கடித்தால், உடனடியாக சிகிச்சை எடுக்கவில்லை என்றால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
6. இந்தியாவில் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் 'டாப் 4' கொடிய பாம்புகளில் இதற்குத் தான் முதலிடம்.
7. இதன் உடலில் சங்கிலித் தொடர் போல அல்லது கண் கண்ணாடி போன்ற வட்ட வடிவ டிசைன்கள் இருப்பதால் தான் தமிழில் இதற்கு 'கண்ணாடி விரியன்' என்று பெயர்.
8. இந்தியப் பாம்புகளிலேயே மிக வலுவான மற்றும் நீளமான விஷப்பற்கள் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று.
9. இந்த பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பது இல்லை. யாராவது தவறுதலாக மிதித்துவிட்டாலோ அல்லது ஆபத்தை உணர்ந்தாலோ மட்டுமே தற்காப்பிற்காக மின்னல் வேகத்தில் தாக்கும்.
10. பார்ப்பதற்கு மந்தமாகச் சுருண்டு கிடப்பது போலத் தோன்றும். ஆனால், இரையைத் தாக்கும்போது இதன் வேகம் கண்ணிமைக்கும் நேரத்தை விடக் குறைவு!
கண்ணாடி விரியன் கொடிய விஷமுடையது தான், ஆனால் அதுவும் இயற்கையின் ஒரு முக்கிய அங்கம். அதைக் கண்டால் அடிக்க முயற்சிக்காமல், பாம்பு பிடிப்பவர்களுக்கோ அல்லது வனத்துறைக்கோ தகவல் கொடுப்பதே நமக்கும் அந்த ஜீவனுக்கும் நல்லது.