புவனா நாகராஜன்
முகம் காட்டும் கண்ணாடி போலவே, வாழ்வில் நாம் நமது செயல்பாடுகளால் சிறந்த வாழ்க்கையை வாழலாம். அதற்கு கீழ்க்கண்ட நடைமுறைகள் நமது செயல்பாடுகளில் இருக்கலாமே!
மனதில் வைராக்கியம் இருந்தால் மிதிபட்ட இடத்திலிருந்தே மீளவும் துளிர்விடலாம்.
எதையாவது மறக்க வேண்டும் என நினைத்தால் நட்பு, மற்றும் உறவுகள் செய்த துரோகத்தை மறக்கலாம்.
எதையாவது சாதிக்க வேண்டுமென நாம் நினைத்தால் தன்னம்பிக்கை, சோம்பல், விடாமுயற்சி, இவற்றை கைவிடவேண்டாம்.
நீ நல்லவன் என்பதை நீயே சொல்லிக்கொள்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை, நீ நல்லவன் என அடுத்தவர் சொல்வதே சாலச்சிறந்த ஒன்றாகும் .
உயர்ந்த எண்ணம் கொண்டவர்களிடம் பழகினால் உனக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பே தேடிவரும்.
விரோதி யாா் என ஆராய்ச்சி செய்வதைவிட, துரோகி யாா் என அடையாளம் காண்பதே அறிவாா்ந்த செயலாகும்.
உண்மையாக பழகும் நபர்களிடம் வாழ்வது எளிதோடு கூடிய நல்லது, அதேநேரம் அவர்கள் பழக்கம் பொய்யானது எனத் தொிந்தால் அவர்களை விட்டு விலகுவது அதைவிட நல்லது.
வஞ்சகம், துரோகம், குரோதம், செய்நன்றி மறப்பது இவற்றை விட்டு விலகினால் மனசாட்சி நம்மிடமே இருக்கும்.
நாம் செய்யும் செயல்களில் நமது எண்ணங்களில் தூய்மை, நோ்மை, நம்பிக்கை இருந்தால் நமக்கு கிடைக்கும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இந்த ஒன்பது கட்டளைகளையும் கடைபிடித்து வாழுங்கள் நல்லதே நடக்கும், நன்மையே கிடைக்கும்!