இந்திரா கோபாலன்
நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது. ஆனால் நாளையை உருவாக்க முடியும்.
நீங்கள் பொருளீட்டுவது நலமாக வாழ்வதற்கு, மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல.
நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால் நீங்கள் அன்பாகவும், தன்னை அனைவருடனும் இணைத்துக் கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்.
உங்கள் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்ல விதமாகச் செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.
மகிழ்ச்சியான முகம் தான் எப்போதும் அழகான முகம்.
விதி என்பது நீங்களே உருவாக்கிக் கொள்வது. உங்கள் விதியை நீங்களே உருவாக்கத் தவறும் போது அது தலைவிதியாகிறது.
உங்கள் வாழ்க்கையில் கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருக்கலாம் அதனால் நீங்கள் விவேகமானவராக மாற வேண்டும். காயப்பட்ட வராக அல்ல.
உண்மையான உறவில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கவலைப்படாமல் உங்களால் முடிந்ததை எல்லாம் கொடுப்பீர்கள்.
உள் நிலையில் ஆனந்தம். வெளிநிலையில் வெற்றி என எதுவாக இருந்தாலும் ஊக்கத்துடன் முயற்சி செய்ய வேண்டியது அவசியம். வாழ்வில் நம்பிக்கை ஊக்கம் தரும்.
மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை. உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததால் விளைவாக ஏற்படுகிறது.
வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாக பார்த்தால் எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள். வாழ்க்கையை ஒரு பிரச்னையாகப் பார்த்தால் எங்கும் பிரச்னைகளையே பார்ப்பீர்கள்.
உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்க கூடாது.
சவாலான சூழ்நிலைகள் எழும் போதுதான் மனிதர்கள் தங்கள் சாதாரண நிலையைவிட மேன்மையான நிலைக்கு உயர முடியும்.
நீங்கள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்பது உங்கள் உடலையும் மனதையும் உங்களால் எந்த அளவு சிறப்பாக பயன்படுத்த முடிகிறது என்பதைச் சார்ந்திருக்கிறது.
தனி மனிதர்களிடம் மாற்றம் ஏற்படுத்தாமல் உலகில் மாற்றம் ஏற்படுத்த முடியாது.