எஸ்.மாரிமுத்து
நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என யோசியுங்கள்.
மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல. உறக்க நிலையில் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒரு போதும் நீங்குவதில்லை.
அனைத்து சாஸ்திரங்களும், வேத நூல்களும் மனதை அடக்கும் வழி முறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தீயை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவுதான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்காது. இருந்தாலும் மனம் அந்த ஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய் தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாக கடித்து துன்பத்தை அடையும். அது போல மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல் நீர் அருகில் சென்றதும் மறைவது போல மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.
மூச்சு உள்ளவரை பக்தியுடன் வாழ வேண்டும் என்பதை கடவுளிடம் வேண்டுங்கள்.
தெரிந்தே தீமையை நாடுபவன் கண்ணிருந்தும் பார்வையை இழந்தவனே - நல்ல விஷயங்களை கேட்க விரும்பாதவன் காது இருந்தும் கேட்கும் திறனவற்றவேனே!
விளக்குக்கு மற்றொரு விளக்கின் ஒளி தேவை இல்லை. நீங்களும் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டாம். கருமித் தனத்தால் நற்குணங்கள் அழியும்.
பலன்களை எதிர்பார்க்காது பணிபுரியுங்கள்.
தியானம் செய்யுங்கள்: சாந்தம் மிகுந்த கடவுளின் அம்சம் உங்களிடம் உள்ளது என்று தியானத்தின் மூலம் உணருங்கள்.