நான்சி மலர்
Solo Travel என்பது ஒரு பயணம் மட்டுமல்ல, அது ஒரு அற்புதமான அனுபவம். தனியாகப் பயணம் செய்வதால் கிடைக்கும் 10 முக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தனியாகப் பயணம் செய்யும் போது நீங்கள் யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் விருப்பமே அங்கு சட்டம்.
பயண நினைவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடனே இருக்கும். தெரியாத பல புதிய விஷயங்களை இந்தப் பயணத்தில் கற்றுக்கொள்ள முடியும்.
பயணத்தில் ஏற்படும் சின்னச் சின்ன சிக்கல்களை நாமே தீர்க்க வேண்டியிருக்கும். இது நம்மைச் சிறந்த முடிவெடுப்பவராக மாற்றும்.
தினசரி வேலைப்பளுகளில் இருந்து விலகி இயற்கையோடு அமைதியான சூழலில் நேரத்தைச் செலவிடுவது மனதிற்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.
Solo Travel பயணம் நமக்கு புதிய மொழிகளைக் கற்கவும், Communication skills வளர்க்கவும் உதவும்.
தனியாகப் பயணம் செய்பவருக்கு வாழ்க்கையில் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வரும்.
தனியாகச் செல்லும்போது புதிய மனிதர்களிடம் பேசவும், கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
தனியாகச் செல்லும்போது சிக்கனமாக பணத்தைச் செலவு செய்யவும், சேமிக்கவும் முடியும்.
தனியாகப் பயணம் செய்வது தன்னம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தும்.
நம்முடைய உண்மையான விருப்பங்கள், பலவீனங்கள் என்னவென்று தெரிய வரும். இது நம்மை சிறந்த மனிதராக மாற்ற உதவும்.