பயத்தை விரட்டும் பைரவர்!

பொ.பாலாஜிகணேஷ்

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர்.

அந்தகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, பைரவரை ஈசன் தோற்றுவித்தார் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து சிவாலயங்களிலும் வடகிழக்கு திசையில் இவருக்கு தனியாக சன்னிதி இருக்கும். திரிசூலத்தை கையில் ஏந்திய படியும், நாய் வாகனத்துடனும் காணப்படுபவர்

பைரவர் என்பதற்கு பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தைப் போக்குபவர் என்று பொருள்.

பைரவரை வழிபடுவதற்கு சாலச் சிறந்த தினமாக தேய்பிறை அஷ்டமி திதியாக உள்ளது.

பைரவ வழிபாட்டை முதன் முதலாக தொடங்குபவர்கள், தை மாதம் வரும் ஒரு செவ்வாய்க் கிழமையில் தொடங்க வேண்டும்.

பைரவர் 64 வடிவங்கள் ஆனால் எட்டு வடிவபைரவர்களை மட்டுமே வழிபடும் முறை உள்ளது.

சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.

Thiruvarur Thiyagarajar Temple