நான்சி மலர்
ஆயுர்வேதத்தில் தொப்புளை 'நாபி' என்று கூறுகிறார்கள். நம் உடலில் இருக்கும் 72,000 சக்தி பாதைகளின் மையப்பகுதியாக தொப்புளை சொல்கிறார்கள்.
நல்லெண்ணெய் அரை ஸ்பூன் தொப்புளில் விட்டு நன்றாக சுற்றி தேய்த்தால் உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
தொப்புளில் சிறிதளவு கடுகு எண்ணெய் விட்டு நன்றாக தேய்த்து வரும் போது நரம்பு தளர்ச்சி சரியாகும். மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
விளக்கெண்ணெய்யை தினமும் தொப்புளில் மூன்று சொட்டு விட்டு நன்றாக மசாஜ் செய்துவர முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி குணமாகி உடலில் உள்ள எலும்புகள் வலிமைப் பெறும்.
எலுமிச்சை எண்ணெய் பூஞ்சை காரணமாக வரும் வயிற்றுவலியை குணமாக்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிக்மெண்டேஷனை சரிசெய்ய உதவும்.
தினமும் பாதாம் எண்ணெய்யை தொப்புளில் மூன்று சொட்டுவிட்டு தேய்த்துவர சருமம் பளபளப்பாகும். முகம் இளமையாக மாறி சுருக்கங்கள் மறையும்.
ஆலிவ் ஆயிலை தொப்புளில் தொடர்ந்து தேய்த்துவர முடிவளர்ச்சி அதிகரிக்கும். மாதவிடாய் பிரச்சனை குணமாகும்.
தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் தேய்த்துவர ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கண்களில் உள்ள வலி, எரிச்சல் நீங்கும்.
நெய்யை சில துளிகள் தொப்புளில் விடும் போது அது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. வறண்ட சருமம், வெடித்த உதடுகள் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.
வேப்பெண்ணெய்யை தொப்புளில் விடும் போது சரும நோய்களான சொரியாசிஸ், பூஞ்சை தொற்றுக்களை நீக்கும். இது குடலில் குடற்புழுக்கள் உருவாகாமல் தடுக்கிறது.