தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டது.
இது தொடர்பாக ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
நான் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்.
–இவ்வாறூ முதல்வர் ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 10) தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.