பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமாக சென்று கொண்டிருப்பது, ‘காற்றுக்கென்ன வேலி. இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் கதாநாயகி வெண்ணிலாவின் கல்லூரி நண்பனாக தமிழ் எனும் பாத்திரத்தில் ஹரி என்பவர் நடித்திருப்பார். இவர் கானா பாடல்களை தாமே எழுதி அதை அவரே பாடக் கூடிய திறமை வாய்ந்தவர். இவர், ‘காற்றுக்கென்ன வேலி’ தொடரின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.

நடிகர் ஹரி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது தொலைக்காட்சி பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்தத் தொடரில் இவரோடு சேர்ந்து நடித்த ராகவேந்திரன் புலி, ‘தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. நீயும் என்னை ஏமாற்றி விட்டாய். வில் யு மிஸ் யூ டா’ என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் ஹரியின் மறைவு செய்தி கேட்டு இவரோடு காற்றுக்கென்னவேலி தொடரில் நடித்த நடிகர்களும் சின்னத் திரை நடிகர்கள் பலரும் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com