மீண்டும் ஒபன் நாமினேஷன்! பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் அசீம்!

Dhanlakshmi -Aseem
Dhanlakshmi -Aseem

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரை 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து போட்டியை கடினமாக்கி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாள் என்பதால் தலைவர் பதவிக்கான டாஸ்க்கும் இந்த வாரத்திற்காக நாமினேஷனும் நடைப்பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் தலைவர் பதவிக்கான போட்டியில் அசீம் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார்.

Ayisha
Ayisha

அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்காக நாமினேஷன் நடைபெற்று இருந்தது. கடந்த வாரத்தை போல இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. கடந்தவாரம் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் என்ற போதிலும் பெரும்பாலான போட்டியாளர்கள் உப்பு சப்பு இல்லாத காரணத்தை எல்லாம் சொல்லி நாமினேஷன் செய்திருந்தார்கள் .

வார இறுதி நிகழ்ச்சியில் கூட உலகநாயகன் கமல் இதனை சுட்டிக்காட்டி ஒருவேளை கன்பசன் ரூமில் நாமினேஷன் நடைபெற்று இருந்தால் யாரையெல்லாம் நாமினேட் செய்திருப்பீர்கள் என கேட்டிருந்தார். இதற்கு பல போட்டியாளர்களும் தாங்கள் நாமினேட் செய்திருந்தவர்களை தாண்டி வேறு சில நபர்களின் பெயர்களை சொல்லி இருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் தான் நேற்று நடைபெற்ற இந்த வாரத்திற்கான நாமினேஷனும் ஓபன் நாமினேஷன் ஆகவே இருந்தது. ஆனால், இம்முறை பெரும்பாலான போட்டியாளர்கள் நேர்மையான காரணங்களை கூறி நாமினேட்செய்திருந்தார்கள். அந்த வகையில் நாமினேஷன் இறுதியில் இந்த வாரம் ரட்சிதா, மைனா நந்தினி, ஜனனி, கதிரவன், குயின்சி, தனலட்சுமி ஆகியோர் இந்த வாரம்நாமினேஷனில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள நபர்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்தவர்கள். மேலும் மிச்சர் கன்டஸ்டண்ட் என்ற பெயரையும் எடுத்தவர்கள் தான். இருப்பினும் இந்த லிஸ்டில் வெளியேற அதிகவாய்ப்பு இருப்பது குயின்சி , கதிரவன், மைனா நந்தினி ஆகிய மூவர் தான். இதில் கடந்த சில வாரமாகவே குயின்ஸி தான் ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் சாப்பிடுவது தூங்குவது தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று இவருக்கு சோம்பேறி குயின்ஸி என்று பெயரையே வைத்து விட்டார்கள். எனவே, இந்த வாரம் இவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை வார இறுதியில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com