கல்யாண சுந்தர விரதம்!.சிவபெருமானின் அருள் பெற கடைபிடிக்க வேண்டிய விரதங்களில் ஒன்று கல்யாண சுந்தர விரதம். பங்குனி உத்திர நாளன்று இந்த விரதத்தை மேற்கொண்டால் திருமணத் தடைகள் அகலும்..காமாட்சியம்மன் திருக்கல்யாணம்!.காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காமாட்சியம்மன் – ஏகாம்பரேஸ்வரர் திருமணம் பங்குனி உத்திரத்தன்று விமரிசையாக நடைபெறும். அதே சமயத்தில் பல பக்த ஜோடிகளுக்கும் அச்சமயம் திருமணம் நடைபெறும்..பாத தரிசனம்!.திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் உத்ஸவர் திருமுகத்தை மட்டுமே தினமும் பக்தர்கள் தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தன்று மூலவர் பெருமானின் வலது பாத தரிசனமும், மார்கழி திருவாதிரையன்று இடது பாத தரிசனமும் கிடைக்கும்..பங்குனி உத்திர உலா!.பழனி, ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நடைபெறும் பத்து நாள் உத்ஸவத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் பவனி வந்து அருள்பாலிப்பது வழக்கம்..அம்மனுக்குப் பொங்கல் வழிபாடு!.சிவகங்கை, தாயமங்கலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு பங்குனி மாதம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவது விசேஷம்..ஆண்டாளைப் போலவே அம்பாள்!.கரூரில் அருளும் ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் கோயிலில் அம்பாள் சௌந்தர நாயகியின் ஊரான அப்பிப்பாளையம் என்ற கிராமத்துக்கு பங்குனி மாதம் ஆறாம் நாள் ஈசன் எழுந்தருளும் விழா சிறப்பாக நடைபெறும். காரணம், அம்பாள் சௌந்தர நாயகி, ஆண்டாள் நாச்சியாரைப் போலவே தவமிருந்து இறைவன் பசுபதீஸ்வரரை திருமணம் செய்து கொண்டதுதான்..தெப்பத் திருவிழாவும்; தேர்த்திருவிழாவும்!.திருச்சி, மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் சுவாமி கோயிலில் பங்குனி, சித்திரை மாதங்களில் தெப்பத் திருவிழாவும் தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்..– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
கல்யாண சுந்தர விரதம்!.சிவபெருமானின் அருள் பெற கடைபிடிக்க வேண்டிய விரதங்களில் ஒன்று கல்யாண சுந்தர விரதம். பங்குனி உத்திர நாளன்று இந்த விரதத்தை மேற்கொண்டால் திருமணத் தடைகள் அகலும்..காமாட்சியம்மன் திருக்கல்யாணம்!.காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காமாட்சியம்மன் – ஏகாம்பரேஸ்வரர் திருமணம் பங்குனி உத்திரத்தன்று விமரிசையாக நடைபெறும். அதே சமயத்தில் பல பக்த ஜோடிகளுக்கும் அச்சமயம் திருமணம் நடைபெறும்..பாத தரிசனம்!.திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் உத்ஸவர் திருமுகத்தை மட்டுமே தினமும் பக்தர்கள் தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தன்று மூலவர் பெருமானின் வலது பாத தரிசனமும், மார்கழி திருவாதிரையன்று இடது பாத தரிசனமும் கிடைக்கும்..பங்குனி உத்திர உலா!.பழனி, ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நடைபெறும் பத்து நாள் உத்ஸவத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் பவனி வந்து அருள்பாலிப்பது வழக்கம்..அம்மனுக்குப் பொங்கல் வழிபாடு!.சிவகங்கை, தாயமங்கலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு பங்குனி மாதம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவது விசேஷம்..ஆண்டாளைப் போலவே அம்பாள்!.கரூரில் அருளும் ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் கோயிலில் அம்பாள் சௌந்தர நாயகியின் ஊரான அப்பிப்பாளையம் என்ற கிராமத்துக்கு பங்குனி மாதம் ஆறாம் நாள் ஈசன் எழுந்தருளும் விழா சிறப்பாக நடைபெறும். காரணம், அம்பாள் சௌந்தர நாயகி, ஆண்டாள் நாச்சியாரைப் போலவே தவமிருந்து இறைவன் பசுபதீஸ்வரரை திருமணம் செய்து கொண்டதுதான்..தெப்பத் திருவிழாவும்; தேர்த்திருவிழாவும்!.திருச்சி, மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் சுவாமி கோயிலில் பங்குனி, சித்திரை மாதங்களில் தெப்பத் திருவிழாவும் தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்..– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்