– ஆர்.ராஜலட்சுமி.* ஈசனை வேண்டி வரம் பெற்று, நவநிதிகளுக்கும் குபேரன் அதிபதியானது அட்சய திருதியை நாளன்றுதான்..* தான்ய லட்சுமியும் தனலட்சுமியும் தோன்றிய திருநாட்கள் அட்சய திருதியை தினம்தான்..* வானவாசத்தின்போது, பாண்டவர்களுக்கு சூரியன் அட்சய பாத்திரத்தை வழங்கிய நாள் அட்சய திருதியை தினமாகும். அதை தருமர் திரௌபதியிடம் அளித்தார்..* காசியில் அன்னபூரணி தேவி, ஈசனுக்கு அன்னம் அளித்த நாள் அட்சய திருதியையாகும்..* ஈசன் கையில் ஒட்டிய பிரம்ம கபாலத்தை நிரப்ப மகாலட்சுமி அன்னம் பாலித்த நாள் அட்சய திருதியை நன்னாள் ஆகும்..* அருந்ததி, வசிஷ்டருடன் சப்தரிஷி மண்டலத்தில் இடம் பெற்றது அட்சய திருதியையன்று விரதமிருந்து தானங்கள் செய்த மகிமையால்தான்..* சென்னை அருகேயுள்ள ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயிலில் அட்சய திருதியையன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெறுகின்றன..* காய்கறி, கனிகள், மூலிகைகளோடு சாகம்பரி தேவியாக பராசக்தி ஆவிர்பவித்த நன்னாள் அட்சய திருதியை ஆகும்..* கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருட சேவை, அட்சய திருதியையன்று நடைபெறுவது சிறப்பாகும்..* திருவானைக்காவல் கிழக்கு கோபுரத்தில் உள்ள குபேரலிங்கம் அட்சய திருதியையன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது..* சீர்காழியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் அட்சய திருதியையன்றுஉதய கருட சேவையின்போது, ஸ்ரீனிவாசரையும் ஸ்ரீராமரையும் ஒன்றாக தரிசிக்கலாம்..* கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகேயுள்ள முழையூர் பரசுநாதர் கோயிலில் அட்சய திருதியையன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன..* தஞ்சாவூர் விளாங்குளத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் அட்சய திருதியையன்று தரிசித்தால் அனைத்து வளங்களும் புண்ணியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
– ஆர்.ராஜலட்சுமி.* ஈசனை வேண்டி வரம் பெற்று, நவநிதிகளுக்கும் குபேரன் அதிபதியானது அட்சய திருதியை நாளன்றுதான்..* தான்ய லட்சுமியும் தனலட்சுமியும் தோன்றிய திருநாட்கள் அட்சய திருதியை தினம்தான்..* வானவாசத்தின்போது, பாண்டவர்களுக்கு சூரியன் அட்சய பாத்திரத்தை வழங்கிய நாள் அட்சய திருதியை தினமாகும். அதை தருமர் திரௌபதியிடம் அளித்தார்..* காசியில் அன்னபூரணி தேவி, ஈசனுக்கு அன்னம் அளித்த நாள் அட்சய திருதியையாகும்..* ஈசன் கையில் ஒட்டிய பிரம்ம கபாலத்தை நிரப்ப மகாலட்சுமி அன்னம் பாலித்த நாள் அட்சய திருதியை நன்னாள் ஆகும்..* அருந்ததி, வசிஷ்டருடன் சப்தரிஷி மண்டலத்தில் இடம் பெற்றது அட்சய திருதியையன்று விரதமிருந்து தானங்கள் செய்த மகிமையால்தான்..* சென்னை அருகேயுள்ள ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயிலில் அட்சய திருதியையன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெறுகின்றன..* காய்கறி, கனிகள், மூலிகைகளோடு சாகம்பரி தேவியாக பராசக்தி ஆவிர்பவித்த நன்னாள் அட்சய திருதியை ஆகும்..* கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருட சேவை, அட்சய திருதியையன்று நடைபெறுவது சிறப்பாகும்..* திருவானைக்காவல் கிழக்கு கோபுரத்தில் உள்ள குபேரலிங்கம் அட்சய திருதியையன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது..* சீர்காழியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் அட்சய திருதியையன்றுஉதய கருட சேவையின்போது, ஸ்ரீனிவாசரையும் ஸ்ரீராமரையும் ஒன்றாக தரிசிக்கலாம்..* கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகேயுள்ள முழையூர் பரசுநாதர் கோயிலில் அட்சய திருதியையன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன..* தஞ்சாவூர் விளாங்குளத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் அட்சய திருதியையன்று தரிசித்தால் அனைத்து வளங்களும் புண்ணியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.