– அபர்ணா சுப்ரமணியம்.அள்ள அள்ள குறைவின்றித் தருவது அட்சய திருதியையின் சிறப்பு. அதனால்தான் அன்றைய தினம் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், அன்றைய தினம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பாகும்..கேரள மாநிலம், அடுவாச்சேரி என்ற இடத்தில் வாசுதேவபுரத்தில் உள்ளதுஸ்ரீ மகாவிஷ்ணு கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் அவ்வூர் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்சய திருதியை முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மட்டும் அருள்பாலிக்கிறாள்..ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய இக்கோயில், பல தலைமுறைகளுக்குப் பின்பு கவனிப்பாரற்று இருந்தது. அதனால் அவ்வூர் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தனர். ஒருநாள் அவ்வழியே சென்ற முனிவர் ஒருவர், இந்த ஊர் கோயில் குளத்தில் சாட்சாத் மகாலட்சுமி தாயாரே நீர் எடுத்துச் செல்வதைப் பார்த்துவிட்டு, அதற்கான காரணத்தை தாயாரிடமே கேட்டார். இந்தக் கோயிலில் தினசரி பூஜைகள் எதுவும் நடைபெறாததால், தானே மகாவிஷ்ணுவை தினசரி பூஜித்து வருவதாகவும், அதன் காரணமாக அந்த ஊர் மக்களுக்கு தாங்கள் அனுக்கிரஹம் செய்யவில்லையென்றும் கூறினாள்..இதைக் கேட்ட அந்த முனிவர், வறுமையில் வாடும் அவ்வூர் மக்களுக்கு ஸ்வாமியும் தாயாரும் அருளுபடி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட மகாலட்சுமி. தான் அக்கோயிலில் வருடத்தில் எட்டு நாட்கள் மட்டுமே அருள்பாலிப்பதாகக் கூறினாள். அதன்படி அட்சய திருதியை முதற்கொண்டு அந்த நாட்கள் ஆரம்பிக்கின்றன. இக்காரணத்தால் இக்கோயிலில் அட்சய திருதியை முதல் எட்டு நாட்கள் மட்டுமே ஸ்ரீமகாலட்சுமி தாயாரை மக்கள் தரிசனம் செய்ய முடியும். மற்ற நாட்களில் மகாவிஷ்ணுவை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் மகாலட்சுமி தாயார், பகவான் மகாவிஷ்ணுவுக்கு பணிவிடை செய்வதாக இக்கோயிலின் ஐதீகம் நிலவுகிறது..அதன்படி முதல் நாளான அட்சய திருதியையன்று வீரலட்சுமியாகக் காட்சியளித்து, நம்முடைய பயத்தைப் போக்கி, விரோதிகளின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கிறாள். இரண்டாம் நாள் கஜலட்சுமியாகத் தோன்றி ஆயுள், ஆரோக்கியம், செளபாக்கியம் முதலியவற்றைத் தருகிறாள். மூன்றாம் நாள் சந்தான லட்சுமியாகக் காட்சி தந்து சந்தான பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் அருள்கிறாள். நான்காம் நாள் விஜயலட்சுமியாக இருந்து தேர்வில் வெற்றி, வியாபாரத்தில் லாபம், தொழிலில் அபிவிருத்தி, கலைகளில் தேர்ச்சி முதலியவை கிடைக்கச் செய்கிறாள்..ஐந்தாம் நாள் தான்ய லட்சுமியாக பூமி பாக்கியம், விவசாய அபிவிருத்தி, சொந்த வீடு முதலிய ஆசைகளை நிறைவேற்றுகிறாள். ஆறாம் நாள் ஆதிலட்சுமியாகக் காட்சி தந்து பாவ தோஷ நிவாரணம் தந்து நம்மைக் காக்கிறாள். ஏழாம் நாள் தனலட்சுமியாக வந்து தனபாக்கியம், நிலையான செல்வம் முதலியவற்றைத் தருகிறாள். எட்டம் நாள் மகாலட்சுமியாகக் காட்சி தந்து சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாள்..அட்சய திருதியை தினத்தையொட்டி அடுவாச்சேரி மகாலட்சுமியை வழிபட்டால் அஷ்ட லக்ஷ்மிகளின் கடாட்சமும் கிடைக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். இதற்காக அவள் தரிசனம் தரும் எட்டு நாட்களும், 'தாம்பூல சமர்ப்பணம்' என்ற சடங்கு இக்கோயிலில் நடைபெறுகிறது. இதில் அவரவர் சக்திக்கேற்ப பணம், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை கையில் ஏந்தி, நமது விருப்பத்தை மனதில் வேண்டிக்கொண்டு சுவாமி சன்னிதியின் முன் சமர்ப்பிப்பதே இந்தத் 'தாம்பூல சமர்ப்பண' வழிபாடு ஆகும். இது தவிர, பட்டுத் துணியும், கண்ணாடியும் சன்னிதியில் சமர்ப்பிப்பது என்ற சடங்கும் இங்கு செய்யப்படுகிறது. தேவிக்கு சமர்ப்பித்த பட்டுத் துணியையும், கண்ணாடியையும் நமக்கே திருப்பித் தந்து விடுவார்கள். அதை வீட்டில் வைத்துக்கொண்டால் செல்வம் பெருகும் என்பதால் இக்கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்தச் சடங்கை பக்தியுடன் செய்கின்றனர்..இந்த எட்டு நாட்களும் மஞ்சள், அரிசியை அர்ச்சித்து தேவியை திருப்தி படுத்துகின்றனர். இச்சடங்கை சுமங்கலிப் பெண்கள் மட்டுமே செய்வார்கள். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும் மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாக சங்கல்பம் செய்து, புரோகிதர் சொல்லித் தரும் மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி இச்சடங்கைச் செய்ய வேண்டும்..அமைவிடம் : கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து ஆலவாய் சென்றால், அத்தாணி எனும் இடத்தை அடையலாம். அங்கிருந்து மேற்கே சுமார் 5 கி.மீ. பயணித்தால் அடுவாச்சேரி கிராமத்திலுள்ள வாசுதேவபுரம் ஸ்ரீ மகாவிஷ்ணு கோயிலைச் சென்றடையலாம்.
– அபர்ணா சுப்ரமணியம்.அள்ள அள்ள குறைவின்றித் தருவது அட்சய திருதியையின் சிறப்பு. அதனால்தான் அன்றைய தினம் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், அன்றைய தினம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பாகும்..கேரள மாநிலம், அடுவாச்சேரி என்ற இடத்தில் வாசுதேவபுரத்தில் உள்ளதுஸ்ரீ மகாவிஷ்ணு கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் அவ்வூர் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்சய திருதியை முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மட்டும் அருள்பாலிக்கிறாள்..ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய இக்கோயில், பல தலைமுறைகளுக்குப் பின்பு கவனிப்பாரற்று இருந்தது. அதனால் அவ்வூர் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தனர். ஒருநாள் அவ்வழியே சென்ற முனிவர் ஒருவர், இந்த ஊர் கோயில் குளத்தில் சாட்சாத் மகாலட்சுமி தாயாரே நீர் எடுத்துச் செல்வதைப் பார்த்துவிட்டு, அதற்கான காரணத்தை தாயாரிடமே கேட்டார். இந்தக் கோயிலில் தினசரி பூஜைகள் எதுவும் நடைபெறாததால், தானே மகாவிஷ்ணுவை தினசரி பூஜித்து வருவதாகவும், அதன் காரணமாக அந்த ஊர் மக்களுக்கு தாங்கள் அனுக்கிரஹம் செய்யவில்லையென்றும் கூறினாள்..இதைக் கேட்ட அந்த முனிவர், வறுமையில் வாடும் அவ்வூர் மக்களுக்கு ஸ்வாமியும் தாயாரும் அருளுபடி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட மகாலட்சுமி. தான் அக்கோயிலில் வருடத்தில் எட்டு நாட்கள் மட்டுமே அருள்பாலிப்பதாகக் கூறினாள். அதன்படி அட்சய திருதியை முதற்கொண்டு அந்த நாட்கள் ஆரம்பிக்கின்றன. இக்காரணத்தால் இக்கோயிலில் அட்சய திருதியை முதல் எட்டு நாட்கள் மட்டுமே ஸ்ரீமகாலட்சுமி தாயாரை மக்கள் தரிசனம் செய்ய முடியும். மற்ற நாட்களில் மகாவிஷ்ணுவை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் மகாலட்சுமி தாயார், பகவான் மகாவிஷ்ணுவுக்கு பணிவிடை செய்வதாக இக்கோயிலின் ஐதீகம் நிலவுகிறது..அதன்படி முதல் நாளான அட்சய திருதியையன்று வீரலட்சுமியாகக் காட்சியளித்து, நம்முடைய பயத்தைப் போக்கி, விரோதிகளின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கிறாள். இரண்டாம் நாள் கஜலட்சுமியாகத் தோன்றி ஆயுள், ஆரோக்கியம், செளபாக்கியம் முதலியவற்றைத் தருகிறாள். மூன்றாம் நாள் சந்தான லட்சுமியாகக் காட்சி தந்து சந்தான பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் அருள்கிறாள். நான்காம் நாள் விஜயலட்சுமியாக இருந்து தேர்வில் வெற்றி, வியாபாரத்தில் லாபம், தொழிலில் அபிவிருத்தி, கலைகளில் தேர்ச்சி முதலியவை கிடைக்கச் செய்கிறாள்..ஐந்தாம் நாள் தான்ய லட்சுமியாக பூமி பாக்கியம், விவசாய அபிவிருத்தி, சொந்த வீடு முதலிய ஆசைகளை நிறைவேற்றுகிறாள். ஆறாம் நாள் ஆதிலட்சுமியாகக் காட்சி தந்து பாவ தோஷ நிவாரணம் தந்து நம்மைக் காக்கிறாள். ஏழாம் நாள் தனலட்சுமியாக வந்து தனபாக்கியம், நிலையான செல்வம் முதலியவற்றைத் தருகிறாள். எட்டம் நாள் மகாலட்சுமியாகக் காட்சி தந்து சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாள்..அட்சய திருதியை தினத்தையொட்டி அடுவாச்சேரி மகாலட்சுமியை வழிபட்டால் அஷ்ட லக்ஷ்மிகளின் கடாட்சமும் கிடைக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். இதற்காக அவள் தரிசனம் தரும் எட்டு நாட்களும், 'தாம்பூல சமர்ப்பணம்' என்ற சடங்கு இக்கோயிலில் நடைபெறுகிறது. இதில் அவரவர் சக்திக்கேற்ப பணம், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை கையில் ஏந்தி, நமது விருப்பத்தை மனதில் வேண்டிக்கொண்டு சுவாமி சன்னிதியின் முன் சமர்ப்பிப்பதே இந்தத் 'தாம்பூல சமர்ப்பண' வழிபாடு ஆகும். இது தவிர, பட்டுத் துணியும், கண்ணாடியும் சன்னிதியில் சமர்ப்பிப்பது என்ற சடங்கும் இங்கு செய்யப்படுகிறது. தேவிக்கு சமர்ப்பித்த பட்டுத் துணியையும், கண்ணாடியையும் நமக்கே திருப்பித் தந்து விடுவார்கள். அதை வீட்டில் வைத்துக்கொண்டால் செல்வம் பெருகும் என்பதால் இக்கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்தச் சடங்கை பக்தியுடன் செய்கின்றனர்..இந்த எட்டு நாட்களும் மஞ்சள், அரிசியை அர்ச்சித்து தேவியை திருப்தி படுத்துகின்றனர். இச்சடங்கை சுமங்கலிப் பெண்கள் மட்டுமே செய்வார்கள். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும் மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாக சங்கல்பம் செய்து, புரோகிதர் சொல்லித் தரும் மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி இச்சடங்கைச் செய்ய வேண்டும்..அமைவிடம் : கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து ஆலவாய் சென்றால், அத்தாணி எனும் இடத்தை அடையலாம். அங்கிருந்து மேற்கே சுமார் 5 கி.மீ. பயணித்தால் அடுவாச்சேரி கிராமத்திலுள்ள வாசுதேவபுரம் ஸ்ரீ மகாவிஷ்ணு கோயிலைச் சென்றடையலாம்.