– பழங்காமூர் மோ.கணேஷ்.'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது ஆன்றோர் வாக்கு. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம்ஸ்ரீ ருணஹரேஸ்வரர் திருக்கோயில்..வாழைப்பந்தலில் அன்னை பராசக்தியின் கட்டளைப்படி, ஜவ்வாது மலையை நோக்கி தனது சக்திவேலை வீசினார் கந்தப் பெருமான். அந்த வேலானது, அங்கு தவம் செய்துகொண்டிருந்த போதன், போதவான், புத்திராண்டன், புருகூதன், பாண்டுரங்கன், வாமன் மற்றும் சோமன் ஆகிய ஏழு அந்தணர்களின் தலைகளைக் கொய்தது. இதனால் கொடும் பாபமும், பிரம்மஹத்தி தோஷமும் கந்தனை சூழ்ந்தது. மனம் கலங்கிய கார்த்திகேயன், இந்தக் கொடும்பாவத்தில் இருந்து விடுபட, சேயாற்றின் வடகரையில் ஏழு சிவாலயங்களையும், தென்கரையில் ஏழு சிவாலயங்களையும் ஸ்தாபித்து ஈசனை பூஜித்தார்..அதன் பின்னர் சரக்கொன்றை மரங்களும், வில்வ மரங்களும் சூழ்ந்த இந்தப் பதிக்கு வருகை புரிந்த கந்தபெருமான், தான் தெரியாமல் செய்த இந்த பாவத்திற்காக மனம் வருந்தி, இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்கின்றார். கூடவே, அண்ணன் ஆனைமுகனையும் பூஜித்து சங்கடத்தை தீர்த்தருளும்படி வேண்டுகிறார். இதனால் இத்தலத்தின் கணபதி, 'சங்கடஹர கணபதி' என்றே போற்றப்படுகின்றார். அகத்தியருக்கும், மிருகண்டு மகரிஷிக்கும் இறைவன் உமையுடன் கூடிய தரிசனத்தை இங்கு காட்டியருளியுள்ளார்..முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூர், 'சதுர்வேதிமங்கலம்' என்றும், 'சதுர்வேதிபாக்கம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. தினமும் வேதகோஷம் ஒலிக்கும் வண்ணம் இங்கு பிராமணர்களைக் குடிவைத்தான் குலோத்துங்கச் சோழன். அதற்கு அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். சதுர்வேதிபாக்கம் என்பது நாளடைவில் பிராமணபாக்கம் என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே தற்போது மருவி, பெரணம்பாக்கம் என்று வழங்கப்படுகிறது..பல்லவர் காலத்தில் இந்த ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு, இரண்டு முறை கும்பாபிஷேகம் கண்டுள்ளது. விஜயநகரப் பேரரசனான கந்ததேவ மகாராஜா தனது ஆட்சிக்காலத்தில் தேவதான கிராமங்கள் எனப் பட்டியலிட்டு, அதில் இந்த பிராமணபாக்கத்தையும் இணைத்து, இங்குள்ள ருணஹரேஸ்வரர் ஆலயத்தில் நித்தமும் விளக்கு எரியவும், நித்திய பூஜைகள் முறைப்படி நடந்திடவும் நிலங்களை வழங்கியுள்ளார். சம்புவராயர்கள் ஆட்சிக்காலத்தில் இக்கோயிலின் நிர்வாகப் பணிகளுக்காகவும், தினசரி பூஜைக்காகவும் 50 வேலி புஞ்சை நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்..இத்தலத்தில் ருணஹர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. அதேபோல், வில்வம், சரக்கொன்றை என இரண்டு தல விருட்சங்களைக் கொண்டுள்ளது இக்கோயில். மேலும், முன்வினை கடன், இப்பிறப்புக் கடன் என இரண்டு வினைகளைக் களையக்கூடிய பெருமை மிக்கதாகவும் இத்தலம் விளங்குகிறது..ஊரின் மத்தியில் கிழக்கு நோக்கியபடி அழகுற அமைந்துள்ள இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் வீற்றுள்ளார். சன்னிதிக்கு வெளியே இருபுறமும் கணபதி மற்றும் கந்தன் குடிகண்டருளுகின்றனர். சில படிகள் மேலே ஏறிட, அர்த்த மண்டபமும் அதனையடுத்து கருவறையும் உள்ளன..கருவறையில் வட்ட வடிவமான ஆவுடையாரின் மீது சொரசொரப்பான பாணலிங்க வடிவில் காட்சி தருகிறார் ஸ்ரீ ருணஹரேஸ்வரர். சகலவிதமான பாபங்களையும் போக்குவதால் இப்பெருமான், பாப ருணஹரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். முருகப்பெருமானால் நிறுவப்பட்ட லிங்கம் என்பதால் இத்தலத்தின் பழைமை பளிச்சென தெரிகிறது..மூலவர் பெருமானை வணங்கி வெளியே வந்தால் முன் மண்டபத்தின் வடக்கே தென்திசை நோக்கியபடி அன்னை ஸ்ரீ மங்களாம்பிகை சர்வ மங்கலங்களையும் அளிப்பவளாக அபயமளிக்கின்றாள். ஆலய வலம் வருகையில் கோஷ்ட தெய்வங்களைக் கண்டு வணங்குகின்றோம். சிறிய ஆலயம்தான் எனினும், மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ஊர் பொதுமக்களால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் தினமும் ஒருவேளை பூஜை நடத்தப்படுகின்றது. சிவபெருமானுக்குரிய அனைத்து விசேஷங்களும் இக்கோயிலில் சிறப்புற நடைபெறுகின்றன. ஊர் மக்களின் உதவியுடன் பகல் வேளையில் எப்போது வேண்டுமானாலும் ஆலய தரிசனம் செய்யலாம்..தீராத கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் சிவன்-பார்வதிக்கு தேன் மற்றும் அரிசி மாவினால் அபிஷேகம் செய்து, சிவப்பு நிற ஆடைகளை அணிவித்து, செவ்வரளி மாலை சாத்தி வேண்டிச் செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறி கடன்கள் முழுதும் அடைந்த பிறகு இக்கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்கின்றனர்..கடுமையான நோய் மற்றும் பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடவும் இங்கு சுவாமி, அம்பாளுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். முன்வினையால் ஏற்படும் கடன், தாய், தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடன் மற்றும் பித்ரு கடன் ஆகிய மூவகை கடன்களால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இந்தப் பதி..அமைவிடம் : திருவண்ணாமலை மாவட்டம், போளூர்-தேவிகாபுரம் சாலையில் உள்ள மட்டப்பிறையூரில் இருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரணம்பாக்கம்.
– பழங்காமூர் மோ.கணேஷ்.'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது ஆன்றோர் வாக்கு. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம்ஸ்ரீ ருணஹரேஸ்வரர் திருக்கோயில்..வாழைப்பந்தலில் அன்னை பராசக்தியின் கட்டளைப்படி, ஜவ்வாது மலையை நோக்கி தனது சக்திவேலை வீசினார் கந்தப் பெருமான். அந்த வேலானது, அங்கு தவம் செய்துகொண்டிருந்த போதன், போதவான், புத்திராண்டன், புருகூதன், பாண்டுரங்கன், வாமன் மற்றும் சோமன் ஆகிய ஏழு அந்தணர்களின் தலைகளைக் கொய்தது. இதனால் கொடும் பாபமும், பிரம்மஹத்தி தோஷமும் கந்தனை சூழ்ந்தது. மனம் கலங்கிய கார்த்திகேயன், இந்தக் கொடும்பாவத்தில் இருந்து விடுபட, சேயாற்றின் வடகரையில் ஏழு சிவாலயங்களையும், தென்கரையில் ஏழு சிவாலயங்களையும் ஸ்தாபித்து ஈசனை பூஜித்தார்..அதன் பின்னர் சரக்கொன்றை மரங்களும், வில்வ மரங்களும் சூழ்ந்த இந்தப் பதிக்கு வருகை புரிந்த கந்தபெருமான், தான் தெரியாமல் செய்த இந்த பாவத்திற்காக மனம் வருந்தி, இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்கின்றார். கூடவே, அண்ணன் ஆனைமுகனையும் பூஜித்து சங்கடத்தை தீர்த்தருளும்படி வேண்டுகிறார். இதனால் இத்தலத்தின் கணபதி, 'சங்கடஹர கணபதி' என்றே போற்றப்படுகின்றார். அகத்தியருக்கும், மிருகண்டு மகரிஷிக்கும் இறைவன் உமையுடன் கூடிய தரிசனத்தை இங்கு காட்டியருளியுள்ளார்..முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூர், 'சதுர்வேதிமங்கலம்' என்றும், 'சதுர்வேதிபாக்கம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. தினமும் வேதகோஷம் ஒலிக்கும் வண்ணம் இங்கு பிராமணர்களைக் குடிவைத்தான் குலோத்துங்கச் சோழன். அதற்கு அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். சதுர்வேதிபாக்கம் என்பது நாளடைவில் பிராமணபாக்கம் என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே தற்போது மருவி, பெரணம்பாக்கம் என்று வழங்கப்படுகிறது..பல்லவர் காலத்தில் இந்த ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு, இரண்டு முறை கும்பாபிஷேகம் கண்டுள்ளது. விஜயநகரப் பேரரசனான கந்ததேவ மகாராஜா தனது ஆட்சிக்காலத்தில் தேவதான கிராமங்கள் எனப் பட்டியலிட்டு, அதில் இந்த பிராமணபாக்கத்தையும் இணைத்து, இங்குள்ள ருணஹரேஸ்வரர் ஆலயத்தில் நித்தமும் விளக்கு எரியவும், நித்திய பூஜைகள் முறைப்படி நடந்திடவும் நிலங்களை வழங்கியுள்ளார். சம்புவராயர்கள் ஆட்சிக்காலத்தில் இக்கோயிலின் நிர்வாகப் பணிகளுக்காகவும், தினசரி பூஜைக்காகவும் 50 வேலி புஞ்சை நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்..இத்தலத்தில் ருணஹர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. அதேபோல், வில்வம், சரக்கொன்றை என இரண்டு தல விருட்சங்களைக் கொண்டுள்ளது இக்கோயில். மேலும், முன்வினை கடன், இப்பிறப்புக் கடன் என இரண்டு வினைகளைக் களையக்கூடிய பெருமை மிக்கதாகவும் இத்தலம் விளங்குகிறது..ஊரின் மத்தியில் கிழக்கு நோக்கியபடி அழகுற அமைந்துள்ள இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் வீற்றுள்ளார். சன்னிதிக்கு வெளியே இருபுறமும் கணபதி மற்றும் கந்தன் குடிகண்டருளுகின்றனர். சில படிகள் மேலே ஏறிட, அர்த்த மண்டபமும் அதனையடுத்து கருவறையும் உள்ளன..கருவறையில் வட்ட வடிவமான ஆவுடையாரின் மீது சொரசொரப்பான பாணலிங்க வடிவில் காட்சி தருகிறார் ஸ்ரீ ருணஹரேஸ்வரர். சகலவிதமான பாபங்களையும் போக்குவதால் இப்பெருமான், பாப ருணஹரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். முருகப்பெருமானால் நிறுவப்பட்ட லிங்கம் என்பதால் இத்தலத்தின் பழைமை பளிச்சென தெரிகிறது..மூலவர் பெருமானை வணங்கி வெளியே வந்தால் முன் மண்டபத்தின் வடக்கே தென்திசை நோக்கியபடி அன்னை ஸ்ரீ மங்களாம்பிகை சர்வ மங்கலங்களையும் அளிப்பவளாக அபயமளிக்கின்றாள். ஆலய வலம் வருகையில் கோஷ்ட தெய்வங்களைக் கண்டு வணங்குகின்றோம். சிறிய ஆலயம்தான் எனினும், மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ஊர் பொதுமக்களால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் தினமும் ஒருவேளை பூஜை நடத்தப்படுகின்றது. சிவபெருமானுக்குரிய அனைத்து விசேஷங்களும் இக்கோயிலில் சிறப்புற நடைபெறுகின்றன. ஊர் மக்களின் உதவியுடன் பகல் வேளையில் எப்போது வேண்டுமானாலும் ஆலய தரிசனம் செய்யலாம்..தீராத கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் சிவன்-பார்வதிக்கு தேன் மற்றும் அரிசி மாவினால் அபிஷேகம் செய்து, சிவப்பு நிற ஆடைகளை அணிவித்து, செவ்வரளி மாலை சாத்தி வேண்டிச் செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறி கடன்கள் முழுதும் அடைந்த பிறகு இக்கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்கின்றனர்..கடுமையான நோய் மற்றும் பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடவும் இங்கு சுவாமி, அம்பாளுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். முன்வினையால் ஏற்படும் கடன், தாய், தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடன் மற்றும் பித்ரு கடன் ஆகிய மூவகை கடன்களால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இந்தப் பதி..அமைவிடம் : திருவண்ணாமலை மாவட்டம், போளூர்-தேவிகாபுரம் சாலையில் உள்ள மட்டப்பிறையூரில் இருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரணம்பாக்கம்.