– மாலதி சந்திரசேகரன்.பூலோகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காகஸ்ரீ மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார் என்றாலும், நாம் நன்றாக அறிந்தது 'தசாவதாரம்' என்று கூறப்படும் பத்து அவதாரங்கள்தான். இதில் முதல் அவதாரம் மச்சாவதாரம், இரண்டாவது அவதாரம் கூர்மாவதாரம். ஆனி மாதம், கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதி அன்று, திருமால் கூர்மமாக அவதாரம் செய்தார். இந்த அவதாரத்தின பின்னணியில் இருக்கும் புராணக் கதை ஒன்றைப் பார்ப்போம்..ஒரு முறை தேவலோகப் பெண் ஒருத்தி, மகாலட்சுமி கையால் கொடுக்கப்பட்ட பரமனின் மலர் மாலை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு பிரும்ம லோகம் வழியாக வந்தாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமிருந்த பிரசாத மாலையை முனிவரிடம் கொடுத்தாள். அதை ஆவலுடன் பெற்றுக்கொண்ட முனிவர், ''முற்றும் துறந்த முனிவனான எனக்கு இந்த தெய்வீக மாலை எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. நான் இதை தேவர்களில் ஒருவருக்குப் பிரசாதமாகக் கொடுக்கப்போகிறேன்" என்று கூறி, தேவலோகம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்..அச்சமயம் எதிரே தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதம் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். தேவேந்திரனைக் கண்ட முனிவர், இந்திரனிடம் தனக்கு மாலை கிடைத்த விவரத்தைக் கூறி, அந்த மலர்மாலையை இந்திரனிடம் கொடுத்தார். தேவலோகத்தில் அப்பொழுது இந்திரனாக இருந்தவன், மந்தரத் துருமன் என்பவன். அவனுக்கு தான் தேவலோக அதிபதி என்கிற தலைக்கனம் மிகவும் அதிகமாகவே இருந்தது. அவன் அந்த மாலையை அலட்சியமாக வாங்கி யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானையோ தனது துதிக்கையால் அந்த மாலையை எடுத்து கீழே போட்டு காலால் மிதித்தது..அதைக் கண்டவுடன் கோபத்திற்குப் பெயர்போன துர்வாச முனிவருக்கு கண்கள் சிவந்தன. உதடுகள் படபடக்க, "இந்திரா… என்ன காரியம் செய்தாய்? இதுஸ்ரீ மஹாவிஷ்ணுவின் நிர்மால்ய பிரசாதம். தாயாரின் கைகளால் கிடைக்கப் பெற்றது. இதன் மகத்துவத்தை உணராமல் உதாசீனப்படுத்தி விட்டாய்.நீ மட்டுமல்லாமல்; மூவுலகங்களுமே சோபை இழந்து, லக்ஷ்மி கடாட்சத்தை இழந்து, சகல சௌபாக்கியங்களையும் இழக்க வேண்டும் என்று நான் சாபம் கொடுக்கிறேன்" என்றார்..அதனால் உலகமே வறுமையில் வாட ஆரம்பித்தது. இதை ஒரு சரியான தருணம் என எண்ணிய அசுரர்கள், தேவர்களின் கோட்டைக்குள் நுழைந்து அவர்களை சுலபமாக தாக்கத் தொடங்கினார்கள். இதனால் பல தேவர்களும் அசுரர்களும் மாண்டுபோக நேரிட்டது. இறந்த அசுரர்களை அசுரகுரு சுக்ராச்சாரியார் சஞ்சீவி மந்திரத்தின் மூலம் உயிர்த்தெழ வைத்தார். ஆனால், தேவர்களுக்கு அதுபோன்ற ஒரு பிராப்தம் அமையாததால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. அதை எப்படி ஈடு கட்டுவது என்று புரியாமல் தவித்த தேவேந்திரன், ஸ்ரீ பிரம்மாவின் உதவியை நாடினான்..ஸ்ரீ பிரம்மாவோ, 'ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் உபாயம் கேட்கலாம்' என்று கூறி, தேவேந்திரனை அழைத்துச் சென்றார். பரமன், 'பாற்கடலைக் கடைந்தால் அதிலிருந்து வரும் அமிர்தத்தை தேவர்கள் பருகும்பொழுது, அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க முடியும். அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காத வண்ணம் தாம் பார்த்துக்கொள்வதாகவும், அசுரர்களையும் உதவிக்கு அழைத்து இருவருமாக பாற்கடலைக் கடைய வேண்டும்' என்று உபாயம் கூறினார்.சிவபெருமானும் தனது பங்கிற்கு தானும் உதவுவதாக உறுதி கூறினார்..திருப்பாற்கடலை கடைவது என்று முடிவாயிற்று. அதனால் மந்தார மலையை மத்தாக உபயோகித்து, வாசுகி அரவத்தை நாணாக உபயோகித்துக் கடையலாம் என தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால், யார் மந்தார மலையைத் தூக்கிக்கொண்டு வந்து பாற்கடலில் வைப்பது? இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தபொழுது, அசுரர்களின் தலைவனான விரோசனனின் மகன் பலி (அதாவது மகாபலி சக்கரவர்த்தி) உதவுவதாகக் கூறினான். தேவேந்திரனும் பலியும் மந்தார மலையைத் தூக்கிக் கொண்டு வந்தபொழுது, அதன் பாரம் தாங்க முடியாமல் கீழே வைத்து விட்டார்கள். இதை அறிந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, தனது வாகனமான கருடனின் மீதேற்றி, திருப்பாற்கடலில் கொண்டு வந்து சேர்த்தார்..திருப்பாற்கடலில் மந்தார மலையை ஒரு மத்தைப் போல் வைத்தாகிவிட்டது. வாசுகி அரவத்தை நாணாக வைத்து அரவத்தின் தலைப்பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களுமாக இருந்து பாற்கடலைக் கடைய முற்பட்டார்கள். மலை சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, மலை நீருக்குள் அமிழத் தொடங்கியது. அப்போது, ஸ்ரீ மகாவிஷ்ணு ஒரு கூர்மமாக (ஆமையாக) வடிவெடுத்து நீருக்கடியில் சென்று, தனது முதுகு ஓட்டின் மேல் மலையைத் தாங்கிப் பிடித்தார். ஒருபக்கம் ஐநூறு கைகளையும் மற்றொரு பக்கம் ஐநூறு கைகளையும் கொடுத்து மலையை அசைக்கச் செய்தார். ஆயிரம் கைகளால் அசைக்கப்பட்ட மலையை, தேவர்களும் அசுரர்களும் கடையும்பொழுது பாற்கடலில் இருந்து பல ஐஸ்வர்யங்கள் வெளிப்பட்டன். வலி தாங்க முடியாத வாசுகி, ஆலகால நஞ்சைக் கக்கியது. அதனால் பிற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் சிவபெருமான் அதை தானே விழுங்கினார். அந்த நஞ்சினை இறங்க விடாமல், ஸ்ரீ பார்வதி தேவி ஈசனின் கண்டத்திலேயே நிற்கும்படி இறுக்கிப் பிடித்தாள். (அதனால் நீலநிற கழுத்தைப் பெற்ற சிவபெருமான், 'நீலகண்டன்' என்று அழைக்கப்படுகிறார்.).பல பொக்கிஷங்களுக்கு இடையில் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தஸ்ரீ ஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்கக் கலசத்துடன் வெளிவந்தார். இதைக்கண்ட அசுரர்கள் அந்த அமிர்தக் கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர். அச்சமயம் ஸ்ரீ பகவான், பெண் வடிவில் மோகினியாக அவர்கள் முன் தோன்றினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அவள் சொல்படி அமிர்தத்தைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்கள். தேவர்களை ஒரு புறமும் அசுரர்களை ஒரு புறமும் மோகினி அமர வைத்தாள். அசுரர்களுக்கு அமிர்தம் போகாத வகையில் தேவர்களுக்கே அதை அளித்துக்கொண்டிருந்தாள். இந்த சூழ்ச்சியை அறிந்த ராகு என்னும் அசுரன் தேவர்களின் கூட்டத்தில் சூரிய சந்திரருக்கு இடையில் அமர்ந்து அமிர்தத்தைப் பெற்று உண்டான். இதை அறிந்த ஸ்ரீ மகாவிஷ்ணு ராகுவின் சிரசை தனது சுதர்சன சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார். அமிர்தத்தை உண்ட ராகுவின் உயிர் பிரியவில்லை. அதைக் கண்ட ஸ்ரீ பிரம்மா, துண்டிக்கப்பட்ட தலையில் பாம்பின் உடலையும் தலையில்லாத முண்டத்தில் பாம்பின் தலையையும் பொருத்தினார். அப்படிப் பொருத்தப்பட்ட இரண்டும் ராகு-கேது என்னும் கிரகங்கள் ஆகின..அமிர்தத்தை உண்ட தேவர்கள், அசுரர்களுடன் போரிட்டு அவர்களை பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதுவே ஸ்ரீ மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் புராணக் கதையாகும். இரண்டாவதாக கூர்ம அவதாரத்தை எடுத்துக்கொண்டாலும், அந்த அவதாரத்திலேயே தன்வந்திரியாகவும் மோகினியாகவும் ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரம் செய்தார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..ஆமை அவதாரம் நமக்குக் கூறும் படிப்பினை என்ன? தேவைப்படும் சமயத்தில் எப்படி ஆமையானது அதன் அவயங்களை ஒடுக்கி, ஓட்டுக்குள் வைத்துக் கொள்கிறதோ, அதுபோல் நாமும் அவசியப்படும்போது ஐம்புலன்களையும் அடக்கி மனம் என்னும் ஓட்டிற்குள் வைத்தால், எந்தக் காரியத்தையும் சுலபமாக, நினைத்த வண்ணம் நிறைவேற்றி முடிக்கலாம் என்பதை எடுத்துச் சொல்வது புரிகிறது அல்லவா?.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் 'ஸ்ரீகூர்மம்' என்ற ஊரில் கூர்ம அவதாரத்திற்கான பிரத்யேகக் கோயில் இருக்கிறது. அங்கு, கருவறையில் பகவான் ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் சுவேத மன்னனால் கட்டப்பட்டது. கூர்ம ஜயந்தி நன்னாளில் கூர்ம அவதார மூர்த்தியை,.'ஓம் கச்சபேசாய வித்மஹேமஹாபலாய தீமஹிதன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்'.எனும் கூர்ம காயத்ரி மந்திரம் சொல்லி, தியானம் செய்து, பிரார்த்தித்துக் கொள்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். தீர்க்காயுசு வசப்படும். சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது திண்ணம்.
– மாலதி சந்திரசேகரன்.பூலோகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காகஸ்ரீ மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார் என்றாலும், நாம் நன்றாக அறிந்தது 'தசாவதாரம்' என்று கூறப்படும் பத்து அவதாரங்கள்தான். இதில் முதல் அவதாரம் மச்சாவதாரம், இரண்டாவது அவதாரம் கூர்மாவதாரம். ஆனி மாதம், கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதி அன்று, திருமால் கூர்மமாக அவதாரம் செய்தார். இந்த அவதாரத்தின பின்னணியில் இருக்கும் புராணக் கதை ஒன்றைப் பார்ப்போம்..ஒரு முறை தேவலோகப் பெண் ஒருத்தி, மகாலட்சுமி கையால் கொடுக்கப்பட்ட பரமனின் மலர் மாலை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு பிரும்ம லோகம் வழியாக வந்தாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமிருந்த பிரசாத மாலையை முனிவரிடம் கொடுத்தாள். அதை ஆவலுடன் பெற்றுக்கொண்ட முனிவர், ''முற்றும் துறந்த முனிவனான எனக்கு இந்த தெய்வீக மாலை எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. நான் இதை தேவர்களில் ஒருவருக்குப் பிரசாதமாகக் கொடுக்கப்போகிறேன்" என்று கூறி, தேவலோகம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்..அச்சமயம் எதிரே தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதம் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். தேவேந்திரனைக் கண்ட முனிவர், இந்திரனிடம் தனக்கு மாலை கிடைத்த விவரத்தைக் கூறி, அந்த மலர்மாலையை இந்திரனிடம் கொடுத்தார். தேவலோகத்தில் அப்பொழுது இந்திரனாக இருந்தவன், மந்தரத் துருமன் என்பவன். அவனுக்கு தான் தேவலோக அதிபதி என்கிற தலைக்கனம் மிகவும் அதிகமாகவே இருந்தது. அவன் அந்த மாலையை அலட்சியமாக வாங்கி யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானையோ தனது துதிக்கையால் அந்த மாலையை எடுத்து கீழே போட்டு காலால் மிதித்தது..அதைக் கண்டவுடன் கோபத்திற்குப் பெயர்போன துர்வாச முனிவருக்கு கண்கள் சிவந்தன. உதடுகள் படபடக்க, "இந்திரா… என்ன காரியம் செய்தாய்? இதுஸ்ரீ மஹாவிஷ்ணுவின் நிர்மால்ய பிரசாதம். தாயாரின் கைகளால் கிடைக்கப் பெற்றது. இதன் மகத்துவத்தை உணராமல் உதாசீனப்படுத்தி விட்டாய்.நீ மட்டுமல்லாமல்; மூவுலகங்களுமே சோபை இழந்து, லக்ஷ்மி கடாட்சத்தை இழந்து, சகல சௌபாக்கியங்களையும் இழக்க வேண்டும் என்று நான் சாபம் கொடுக்கிறேன்" என்றார்..அதனால் உலகமே வறுமையில் வாட ஆரம்பித்தது. இதை ஒரு சரியான தருணம் என எண்ணிய அசுரர்கள், தேவர்களின் கோட்டைக்குள் நுழைந்து அவர்களை சுலபமாக தாக்கத் தொடங்கினார்கள். இதனால் பல தேவர்களும் அசுரர்களும் மாண்டுபோக நேரிட்டது. இறந்த அசுரர்களை அசுரகுரு சுக்ராச்சாரியார் சஞ்சீவி மந்திரத்தின் மூலம் உயிர்த்தெழ வைத்தார். ஆனால், தேவர்களுக்கு அதுபோன்ற ஒரு பிராப்தம் அமையாததால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. அதை எப்படி ஈடு கட்டுவது என்று புரியாமல் தவித்த தேவேந்திரன், ஸ்ரீ பிரம்மாவின் உதவியை நாடினான்..ஸ்ரீ பிரம்மாவோ, 'ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் உபாயம் கேட்கலாம்' என்று கூறி, தேவேந்திரனை அழைத்துச் சென்றார். பரமன், 'பாற்கடலைக் கடைந்தால் அதிலிருந்து வரும் அமிர்தத்தை தேவர்கள் பருகும்பொழுது, அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க முடியும். அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காத வண்ணம் தாம் பார்த்துக்கொள்வதாகவும், அசுரர்களையும் உதவிக்கு அழைத்து இருவருமாக பாற்கடலைக் கடைய வேண்டும்' என்று உபாயம் கூறினார்.சிவபெருமானும் தனது பங்கிற்கு தானும் உதவுவதாக உறுதி கூறினார்..திருப்பாற்கடலை கடைவது என்று முடிவாயிற்று. அதனால் மந்தார மலையை மத்தாக உபயோகித்து, வாசுகி அரவத்தை நாணாக உபயோகித்துக் கடையலாம் என தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால், யார் மந்தார மலையைத் தூக்கிக்கொண்டு வந்து பாற்கடலில் வைப்பது? இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தபொழுது, அசுரர்களின் தலைவனான விரோசனனின் மகன் பலி (அதாவது மகாபலி சக்கரவர்த்தி) உதவுவதாகக் கூறினான். தேவேந்திரனும் பலியும் மந்தார மலையைத் தூக்கிக் கொண்டு வந்தபொழுது, அதன் பாரம் தாங்க முடியாமல் கீழே வைத்து விட்டார்கள். இதை அறிந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, தனது வாகனமான கருடனின் மீதேற்றி, திருப்பாற்கடலில் கொண்டு வந்து சேர்த்தார்..திருப்பாற்கடலில் மந்தார மலையை ஒரு மத்தைப் போல் வைத்தாகிவிட்டது. வாசுகி அரவத்தை நாணாக வைத்து அரவத்தின் தலைப்பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களுமாக இருந்து பாற்கடலைக் கடைய முற்பட்டார்கள். மலை சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, மலை நீருக்குள் அமிழத் தொடங்கியது. அப்போது, ஸ்ரீ மகாவிஷ்ணு ஒரு கூர்மமாக (ஆமையாக) வடிவெடுத்து நீருக்கடியில் சென்று, தனது முதுகு ஓட்டின் மேல் மலையைத் தாங்கிப் பிடித்தார். ஒருபக்கம் ஐநூறு கைகளையும் மற்றொரு பக்கம் ஐநூறு கைகளையும் கொடுத்து மலையை அசைக்கச் செய்தார். ஆயிரம் கைகளால் அசைக்கப்பட்ட மலையை, தேவர்களும் அசுரர்களும் கடையும்பொழுது பாற்கடலில் இருந்து பல ஐஸ்வர்யங்கள் வெளிப்பட்டன். வலி தாங்க முடியாத வாசுகி, ஆலகால நஞ்சைக் கக்கியது. அதனால் பிற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் சிவபெருமான் அதை தானே விழுங்கினார். அந்த நஞ்சினை இறங்க விடாமல், ஸ்ரீ பார்வதி தேவி ஈசனின் கண்டத்திலேயே நிற்கும்படி இறுக்கிப் பிடித்தாள். (அதனால் நீலநிற கழுத்தைப் பெற்ற சிவபெருமான், 'நீலகண்டன்' என்று அழைக்கப்படுகிறார்.).பல பொக்கிஷங்களுக்கு இடையில் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தஸ்ரீ ஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்கக் கலசத்துடன் வெளிவந்தார். இதைக்கண்ட அசுரர்கள் அந்த அமிர்தக் கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர். அச்சமயம் ஸ்ரீ பகவான், பெண் வடிவில் மோகினியாக அவர்கள் முன் தோன்றினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அவள் சொல்படி அமிர்தத்தைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்கள். தேவர்களை ஒரு புறமும் அசுரர்களை ஒரு புறமும் மோகினி அமர வைத்தாள். அசுரர்களுக்கு அமிர்தம் போகாத வகையில் தேவர்களுக்கே அதை அளித்துக்கொண்டிருந்தாள். இந்த சூழ்ச்சியை அறிந்த ராகு என்னும் அசுரன் தேவர்களின் கூட்டத்தில் சூரிய சந்திரருக்கு இடையில் அமர்ந்து அமிர்தத்தைப் பெற்று உண்டான். இதை அறிந்த ஸ்ரீ மகாவிஷ்ணு ராகுவின் சிரசை தனது சுதர்சன சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார். அமிர்தத்தை உண்ட ராகுவின் உயிர் பிரியவில்லை. அதைக் கண்ட ஸ்ரீ பிரம்மா, துண்டிக்கப்பட்ட தலையில் பாம்பின் உடலையும் தலையில்லாத முண்டத்தில் பாம்பின் தலையையும் பொருத்தினார். அப்படிப் பொருத்தப்பட்ட இரண்டும் ராகு-கேது என்னும் கிரகங்கள் ஆகின..அமிர்தத்தை உண்ட தேவர்கள், அசுரர்களுடன் போரிட்டு அவர்களை பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதுவே ஸ்ரீ மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் புராணக் கதையாகும். இரண்டாவதாக கூர்ம அவதாரத்தை எடுத்துக்கொண்டாலும், அந்த அவதாரத்திலேயே தன்வந்திரியாகவும் மோகினியாகவும் ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரம் செய்தார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..ஆமை அவதாரம் நமக்குக் கூறும் படிப்பினை என்ன? தேவைப்படும் சமயத்தில் எப்படி ஆமையானது அதன் அவயங்களை ஒடுக்கி, ஓட்டுக்குள் வைத்துக் கொள்கிறதோ, அதுபோல் நாமும் அவசியப்படும்போது ஐம்புலன்களையும் அடக்கி மனம் என்னும் ஓட்டிற்குள் வைத்தால், எந்தக் காரியத்தையும் சுலபமாக, நினைத்த வண்ணம் நிறைவேற்றி முடிக்கலாம் என்பதை எடுத்துச் சொல்வது புரிகிறது அல்லவா?.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் 'ஸ்ரீகூர்மம்' என்ற ஊரில் கூர்ம அவதாரத்திற்கான பிரத்யேகக் கோயில் இருக்கிறது. அங்கு, கருவறையில் பகவான் ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் சுவேத மன்னனால் கட்டப்பட்டது. கூர்ம ஜயந்தி நன்னாளில் கூர்ம அவதார மூர்த்தியை,.'ஓம் கச்சபேசாய வித்மஹேமஹாபலாய தீமஹிதன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்'.எனும் கூர்ம காயத்ரி மந்திரம் சொல்லி, தியானம் செய்து, பிரார்த்தித்துக் கொள்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். தீர்க்காயுசு வசப்படும். சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது திண்ணம்.