– ஆர்.வி.ஆர்..சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் போல, ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வக் கோலம் சம்மோஹன கிருஷ்ணர் திருவுருவம். நாமக்கல் மாவட்டம், மோஹனூரில் ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தில் சம்மோஹன கிருஷ்ணர் அருளும் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் அமைந்துள்ளது. பூரண அலங்காரத்தோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு அருள் பொழியும் சம்மோஹன கிருஷ்ணரை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். இக்கோயில் மகா மண்டபத்தின் வலதுபுறத்தில் தனிச்சன்னிதியில் இந்த சம்மோஹன கிருஷ்ணர் அருள்பாலித்து வருகின்றார்..ஒருசமயம் இப்பகுதியில் வசித்து வந்த திருமால் பக்தர் ஒருவர் திருப்பதி வேங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். அடிக்கடி திருமலை சென்று பெருமாளை சேவிப்பது அவரது வழக்கம். திடீரென அவருக்கு வாத நோய் ஏற்பட்டதால், அவரால் திருப்பதிக்குச் செல்ல முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்து, காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த புற்றிலிருந்து நாகம் ஒன்று வெளிப்பட்டது. அதனால் அவர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் தாம் சிலை வடிவில் இருப்பதாகக் கூறினார். மறுநாள் அந்த பக்தர் புற்றை நீக்கிப் பார்த்தபோது, உள்ளே ஸ்வாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்வாமிக்கு, 'கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்' எனப் பெயர் சூட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் ஸ்வாமி சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதுதவிர, பத்மாவதி தாயாருக்கும் தனிச்சன்னிதி உருவாக்கப்பட்டது..கருவறையில் மூலவராக கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் அருள்பாலிக்கிறார். வலதுபுறம் ஸ்ரீதேவியும், இடதுபுறம் பூதேவியும் விளங்க, நாடிவரும் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் வேதஸ்ருங்க விமானத்தின் கீழ் காட்சி அளிக்கின்றனர். திருப்பதி வேங்கடாஜலபதியின் அருளால் இக்கோயில் உருவானதால், நவராத்திரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும், 'திருப்பதியில் ஓர் நாள்' என்னும் உத்ஸவம் இத்தலத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடைபெறுவதுபோலவே செய்யப்படுவது விசேஷம். பொதுவாக, பெருமாள் உத்ஸவ மூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள உத்ஸவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் காணப்படுகிறது..காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் அருகே, காவிரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலத்தில் காவிரியில் நீராடி சுவாமியை வழிபடுவது விசேஷம். இந்தக் கோயிலில் காவிரியம்மனுக்குத் தனிச்சன்னிதி உள்ளது. அதேபோல், சன்னிதியின் மேல் விதானத்தில் நவக்கிரக மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு..செல்வ வளம் பெருகவும், சகல சௌபாக்கியங்கள் சேரவும் சம்மோஹன கிருஷ்ணரை கீழ்க்கண்ட ஸ்துதி மற்றும் கோபால சுந்தரி காயத்ரியைக் கூறி பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்..சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி:.'ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததாசங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகைஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!'.பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்..கோபால சுந்தரி காயத்ரி:.'ஓம் லலிதாயை வித்மஹேகோபாலாயை தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத்!'.ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தின்போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். பூஜை முடிந்ததும் அந்தத் தேங்காயை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட, ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதேபோல், கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது. பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மாணவர்கள் ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து வணங்கி, சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தியும் வழிபடுகின்றனர்.
– ஆர்.வி.ஆர்..சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் போல, ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வக் கோலம் சம்மோஹன கிருஷ்ணர் திருவுருவம். நாமக்கல் மாவட்டம், மோஹனூரில் ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தில் சம்மோஹன கிருஷ்ணர் அருளும் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் அமைந்துள்ளது. பூரண அலங்காரத்தோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு அருள் பொழியும் சம்மோஹன கிருஷ்ணரை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். இக்கோயில் மகா மண்டபத்தின் வலதுபுறத்தில் தனிச்சன்னிதியில் இந்த சம்மோஹன கிருஷ்ணர் அருள்பாலித்து வருகின்றார்..ஒருசமயம் இப்பகுதியில் வசித்து வந்த திருமால் பக்தர் ஒருவர் திருப்பதி வேங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். அடிக்கடி திருமலை சென்று பெருமாளை சேவிப்பது அவரது வழக்கம். திடீரென அவருக்கு வாத நோய் ஏற்பட்டதால், அவரால் திருப்பதிக்குச் செல்ல முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்து, காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த புற்றிலிருந்து நாகம் ஒன்று வெளிப்பட்டது. அதனால் அவர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் தாம் சிலை வடிவில் இருப்பதாகக் கூறினார். மறுநாள் அந்த பக்தர் புற்றை நீக்கிப் பார்த்தபோது, உள்ளே ஸ்வாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்வாமிக்கு, 'கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்' எனப் பெயர் சூட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் ஸ்வாமி சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதுதவிர, பத்மாவதி தாயாருக்கும் தனிச்சன்னிதி உருவாக்கப்பட்டது..கருவறையில் மூலவராக கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் அருள்பாலிக்கிறார். வலதுபுறம் ஸ்ரீதேவியும், இடதுபுறம் பூதேவியும் விளங்க, நாடிவரும் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் வேதஸ்ருங்க விமானத்தின் கீழ் காட்சி அளிக்கின்றனர். திருப்பதி வேங்கடாஜலபதியின் அருளால் இக்கோயில் உருவானதால், நவராத்திரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும், 'திருப்பதியில் ஓர் நாள்' என்னும் உத்ஸவம் இத்தலத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடைபெறுவதுபோலவே செய்யப்படுவது விசேஷம். பொதுவாக, பெருமாள் உத்ஸவ மூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள உத்ஸவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் காணப்படுகிறது..காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் அருகே, காவிரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலத்தில் காவிரியில் நீராடி சுவாமியை வழிபடுவது விசேஷம். இந்தக் கோயிலில் காவிரியம்மனுக்குத் தனிச்சன்னிதி உள்ளது. அதேபோல், சன்னிதியின் மேல் விதானத்தில் நவக்கிரக மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு..செல்வ வளம் பெருகவும், சகல சௌபாக்கியங்கள் சேரவும் சம்மோஹன கிருஷ்ணரை கீழ்க்கண்ட ஸ்துதி மற்றும் கோபால சுந்தரி காயத்ரியைக் கூறி பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்..சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி:.'ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததாசங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகைஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!'.பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்..கோபால சுந்தரி காயத்ரி:.'ஓம் லலிதாயை வித்மஹேகோபாலாயை தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத்!'.ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தின்போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். பூஜை முடிந்ததும் அந்தத் தேங்காயை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட, ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதேபோல், கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது. பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மாணவர்கள் ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து வணங்கி, சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தியும் வழிபடுகின்றனர்.