அருகம்புல்லில் பல வகை இருக்கிறதாமே? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?.– க.பரமேஸ்வரி, சின்னசேலம்.விநாயகருக்கு மிகவும் உகந்த மூலிகை என்று புகழ்ந்து சொல்லப்படும் அருகம்புல்லை வடநூலில், 'தூர்வா' எனக் கூறுவர். இதில், நீரில் மற்றும் நிலத்தில் வளர்வது என இரண்டு வகை இருக்கிறது. வெளிர் நீலம், பச்சை நிறங்களில் இவை காணப்படும். அருகம்புல் பொதுவாக துவர்ப்பு சுவையும், இனிப்பைத் துணை சுவையாகவும் கொண்டு உஷ்ண வீர்யம் உடையது. நாவறட்சி, சுவை இல்லாமை, மூர்ச்சை, எரிச்சல், வாந்தி, பூத கிரஹ தோஷங்களை நீக்கவும், சோர்வை நீக்கி புத்துணர்வைத் தருவதிலும் இவை பெரும் பங்காற்றுகிறது. இவற்றை நான்கு வகையாகக் கூறலாம்..நீல நிறமுள்ள அருகு சுவை கொடுப்பது. அதிசாரம், காய்ச்சல் நோய்களை நீக்குவதற்கு இது மிகவும் பயன்படுகிறது.ச்வேத தூர்வா அல்லது வெண் அருகம்புல் என்றும் சொல்லப்படும் இது, நாவிற்குச் சுவை கொடுப்பது. உடலுக்கு குளிர்ச்சி ஊட்டவும், வாந்தி, அதிசாரம், இருமல் நோய்களைத் தீர்ப்பதிலும் இதன் பங்கு பெரிது.கண்ட தூர்வா எனப்படும் அருகு, தோஷங்களை அகற்றி, உடலுக்கு ஒவ்வாத அலர்ஜி நிலையைப் போக்குவது. தலைச் சுற்றலையும் இது குணப்படுத்துகிறது.மாலா தூர்வா என அழைக்கப்படும் அருகு, இனிப்பு, கசப்புச் சுவை சேர்ந்தே உள்ள தெய்வப்புல் ஆகும். கபம், வாந்தி, நாவறட்சியை அகற்றுவதில் இது பெரும் பங்காற்றுகிறது. இதன் ஆன்மிகச் சிறப்பை, 'கணபதி உபநிடதம்' தெளிவாக விளக்குகிறது..'உடல் தூய்மை செய்துகொண்டு மந்திரங்களை ஜபிக்க வேண்டும்' என சாஸ்திரம் கூறுகிறது. உடலை எப்படித் தூய்மை செய்து கொள்வது?.– என்.பாலசுப்ரமணி, நெய்வேலி.'சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு' என்கிறது தேவாரப் பதிகம். உலகியல் சின்றின்பங்களை நாடிச் செல்வது உடல். இறையருளால் உலக நிலையினின்று நீங்கி ஆண்டவனது அருளைப் பெற வேண்டும்..இடத் தூய்மை: இறைவனை வழிபாடு செய்வதற்கு வழிபடுபவர்கள் தாம் அமர்ந்துள்ள இடத்தை மந்திர நீர் தெளித்து தூய்மை செய்தல் வேண்டும்..பொருள் தூய்மை: இறை வழிபாடு செய்யப் பயன்படுத்தும் பொருட்களின் மீது மந்திர நீர் தெளித்துத் தூய்மை செய்தல் முறையாகிறது..மந்திரத் தூய்மை: இறை வழிபாடு செய்பவரது பேச்சுக்கள் எல்லாம் உலகியல் சார்ந்ததாகவே அமைந்து விடுகிறது. ஜபம் செய்கிறபோது இறை மந்திரங்களை மட்டுமே உள்வாங்க உறுதி பூண்டு சம்ஹிதா மந்திரங்களை உச்சரிப்பதுவே மந்திர சுத்தி எனப்படுகிறது..அங்க நியாசம், கர நியாசம் என்னும் உடல், கை தொடும் முறையைச் செய்துவிட்டு மந்திர ஜபம் தொடங்க வேண்டும். கரம் – கை நியாசம் பதித்தல், அங்கம் – உடலுறுப்புகளில் நியாசம் பதித்தல். இறையாற்றலைத் தம் உடலுறுப்புகளில் பதிக்கும் செயல் ஆகிறது..நவக்கிரஹங்களைச் சுற்றி வரும்போது சொல்ல வேண்டிய எளிய பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன்?.– ப.நீலவேணி, மன்னார்குடி.'உலகெலாம் உவக்கும் ஞாயிறும் மதியும்உயர்நில மகனும் நற்புதனும்இலகு நற் பொன்னும் வெள்ளியும் சனியும்இராகுவும் கேதுவும் என்னும்அலகறு புகழ்சால் கோள்களே! நீயிர்அனைவரும் இங்கெழுந்து அருளிகுலவிடு பொருளும் இன்பமும் அறமும்கொடுத்திட வணங்கி வாழ்த்துவமே!'.'ஓம் ஆதித்தன் சோமன் அங்காரகன் புந்தியண்டர் குரு போதித்த வெள்ளி சனி ராகு கேது பேருரைத்தால்வாதித்த சூனியம் வல்பிணிச் சண்டை வருமிடியும்ஏதித்தலத்திலிராதே மிகச் செல்வ மேவிடுமே.'.'சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரிச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானாத்வத் தாச தாச சரமாவதி தாச தாசாஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!'.இத்துதிகளின் ஒன்றை நவக்கிரஹங்களைச் சுற்றி வரும்போது சொல்லி வர, தோஷங்கள் அகன்று நலம் உண்டாகும்..வீடு கட்ட வாங்கிய கடன் தீர்ந்தபாடில்லை. இதற்கு ஒரு பரிகார பூஜை கூற வேண்டுகிறேன்?.– எம்.பிரதீபா, திருச்சி.தன் வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள், கோயில் சன்னிதிகளை அசுத்தப்படுத்தி விட்டுச் செல்கின்றனர். கோயில்களில் அவர்கள் போடும் குப்பைகளே அடைக்க முடியாத கடனாக அவர்களுக்குப் பெருகி நிற்கிறது. இனியாவது கோயிலுக்குச் சென்றால் குப்பைகளைப் போடாமல் சுத்தமாக்கிவிட்டு, கடன் தீர வீட்டில் ஸ்வர்ண தீபம் ஏற்றிவிட்டு, ஆலயத்திலும் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். ஸ்வஸ்திக் கோலமிட்டு மண் அகலில் நல்லெண்ணெயுடன் சிறிது நெய் கலந்து தீபமேற்றி அதில் ஒரே மாதிரியான 11 காசுகளை இட வேண்டும். இதற்கு மந்திரமாகக் கூற வேண்டியது:.'ருண ரோக சாந்தீனாம் மித்ர கால யோஜன:கலெள ஜென்ம பாபானாம் ருணம் சத்ரு ருபிணம்தோரண கணேச தெய்வானாம் சக்தி மேகல வாசினம்ஸ்வர்ண தீப ஸ்மரணானாம் சகல ருண ரோக நிவாரணம்!'.ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு தீபம் ஏற்றி வழிபட, உங்கள் கடன் விரைவில் காணாமல் போய் நிம்மதி ஏற்படும்.
அருகம்புல்லில் பல வகை இருக்கிறதாமே? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?.– க.பரமேஸ்வரி, சின்னசேலம்.விநாயகருக்கு மிகவும் உகந்த மூலிகை என்று புகழ்ந்து சொல்லப்படும் அருகம்புல்லை வடநூலில், 'தூர்வா' எனக் கூறுவர். இதில், நீரில் மற்றும் நிலத்தில் வளர்வது என இரண்டு வகை இருக்கிறது. வெளிர் நீலம், பச்சை நிறங்களில் இவை காணப்படும். அருகம்புல் பொதுவாக துவர்ப்பு சுவையும், இனிப்பைத் துணை சுவையாகவும் கொண்டு உஷ்ண வீர்யம் உடையது. நாவறட்சி, சுவை இல்லாமை, மூர்ச்சை, எரிச்சல், வாந்தி, பூத கிரஹ தோஷங்களை நீக்கவும், சோர்வை நீக்கி புத்துணர்வைத் தருவதிலும் இவை பெரும் பங்காற்றுகிறது. இவற்றை நான்கு வகையாகக் கூறலாம்..நீல நிறமுள்ள அருகு சுவை கொடுப்பது. அதிசாரம், காய்ச்சல் நோய்களை நீக்குவதற்கு இது மிகவும் பயன்படுகிறது.ச்வேத தூர்வா அல்லது வெண் அருகம்புல் என்றும் சொல்லப்படும் இது, நாவிற்குச் சுவை கொடுப்பது. உடலுக்கு குளிர்ச்சி ஊட்டவும், வாந்தி, அதிசாரம், இருமல் நோய்களைத் தீர்ப்பதிலும் இதன் பங்கு பெரிது.கண்ட தூர்வா எனப்படும் அருகு, தோஷங்களை அகற்றி, உடலுக்கு ஒவ்வாத அலர்ஜி நிலையைப் போக்குவது. தலைச் சுற்றலையும் இது குணப்படுத்துகிறது.மாலா தூர்வா என அழைக்கப்படும் அருகு, இனிப்பு, கசப்புச் சுவை சேர்ந்தே உள்ள தெய்வப்புல் ஆகும். கபம், வாந்தி, நாவறட்சியை அகற்றுவதில் இது பெரும் பங்காற்றுகிறது. இதன் ஆன்மிகச் சிறப்பை, 'கணபதி உபநிடதம்' தெளிவாக விளக்குகிறது..'உடல் தூய்மை செய்துகொண்டு மந்திரங்களை ஜபிக்க வேண்டும்' என சாஸ்திரம் கூறுகிறது. உடலை எப்படித் தூய்மை செய்து கொள்வது?.– என்.பாலசுப்ரமணி, நெய்வேலி.'சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு' என்கிறது தேவாரப் பதிகம். உலகியல் சின்றின்பங்களை நாடிச் செல்வது உடல். இறையருளால் உலக நிலையினின்று நீங்கி ஆண்டவனது அருளைப் பெற வேண்டும்..இடத் தூய்மை: இறைவனை வழிபாடு செய்வதற்கு வழிபடுபவர்கள் தாம் அமர்ந்துள்ள இடத்தை மந்திர நீர் தெளித்து தூய்மை செய்தல் வேண்டும்..பொருள் தூய்மை: இறை வழிபாடு செய்யப் பயன்படுத்தும் பொருட்களின் மீது மந்திர நீர் தெளித்துத் தூய்மை செய்தல் முறையாகிறது..மந்திரத் தூய்மை: இறை வழிபாடு செய்பவரது பேச்சுக்கள் எல்லாம் உலகியல் சார்ந்ததாகவே அமைந்து விடுகிறது. ஜபம் செய்கிறபோது இறை மந்திரங்களை மட்டுமே உள்வாங்க உறுதி பூண்டு சம்ஹிதா மந்திரங்களை உச்சரிப்பதுவே மந்திர சுத்தி எனப்படுகிறது..அங்க நியாசம், கர நியாசம் என்னும் உடல், கை தொடும் முறையைச் செய்துவிட்டு மந்திர ஜபம் தொடங்க வேண்டும். கரம் – கை நியாசம் பதித்தல், அங்கம் – உடலுறுப்புகளில் நியாசம் பதித்தல். இறையாற்றலைத் தம் உடலுறுப்புகளில் பதிக்கும் செயல் ஆகிறது..நவக்கிரஹங்களைச் சுற்றி வரும்போது சொல்ல வேண்டிய எளிய பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன்?.– ப.நீலவேணி, மன்னார்குடி.'உலகெலாம் உவக்கும் ஞாயிறும் மதியும்உயர்நில மகனும் நற்புதனும்இலகு நற் பொன்னும் வெள்ளியும் சனியும்இராகுவும் கேதுவும் என்னும்அலகறு புகழ்சால் கோள்களே! நீயிர்அனைவரும் இங்கெழுந்து அருளிகுலவிடு பொருளும் இன்பமும் அறமும்கொடுத்திட வணங்கி வாழ்த்துவமே!'.'ஓம் ஆதித்தன் சோமன் அங்காரகன் புந்தியண்டர் குரு போதித்த வெள்ளி சனி ராகு கேது பேருரைத்தால்வாதித்த சூனியம் வல்பிணிச் சண்டை வருமிடியும்ஏதித்தலத்திலிராதே மிகச் செல்வ மேவிடுமே.'.'சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரிச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானாத்வத் தாச தாச சரமாவதி தாச தாசாஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!'.இத்துதிகளின் ஒன்றை நவக்கிரஹங்களைச் சுற்றி வரும்போது சொல்லி வர, தோஷங்கள் அகன்று நலம் உண்டாகும்..வீடு கட்ட வாங்கிய கடன் தீர்ந்தபாடில்லை. இதற்கு ஒரு பரிகார பூஜை கூற வேண்டுகிறேன்?.– எம்.பிரதீபா, திருச்சி.தன் வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள், கோயில் சன்னிதிகளை அசுத்தப்படுத்தி விட்டுச் செல்கின்றனர். கோயில்களில் அவர்கள் போடும் குப்பைகளே அடைக்க முடியாத கடனாக அவர்களுக்குப் பெருகி நிற்கிறது. இனியாவது கோயிலுக்குச் சென்றால் குப்பைகளைப் போடாமல் சுத்தமாக்கிவிட்டு, கடன் தீர வீட்டில் ஸ்வர்ண தீபம் ஏற்றிவிட்டு, ஆலயத்திலும் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். ஸ்வஸ்திக் கோலமிட்டு மண் அகலில் நல்லெண்ணெயுடன் சிறிது நெய் கலந்து தீபமேற்றி அதில் ஒரே மாதிரியான 11 காசுகளை இட வேண்டும். இதற்கு மந்திரமாகக் கூற வேண்டியது:.'ருண ரோக சாந்தீனாம் மித்ர கால யோஜன:கலெள ஜென்ம பாபானாம் ருணம் சத்ரு ருபிணம்தோரண கணேச தெய்வானாம் சக்தி மேகல வாசினம்ஸ்வர்ண தீப ஸ்மரணானாம் சகல ருண ரோக நிவாரணம்!'.ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு தீபம் ஏற்றி வழிபட, உங்கள் கடன் விரைவில் காணாமல் போய் நிம்மதி ஏற்படும்.