– இரா.சுரேஷ்.நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில். தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் அருள்மிகு ஶ்ரீ வீரநரசிம்ம சுவாமி ஆலயம், நீலமேகப் பெருமாள் ஆலயம் மற்றும் மணிக்குன்ற பெருமாள் ஆலயம் ஆகிய மூன்று கோயில்களும் சேர்ந்ததுதான் இந்த திவ்யதேசத் திருக்கோயில்..பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு, அதன் கரையில் ஆசிரமம் அமைத்துத் தவம் செய்து வந்தார். அப்போது சிவபெருமானிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று அசுரர்கள் பராசரரையும், அவருடன் தவம் செய்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களின் தொல்லையில் இருந்து தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினார்..முனிவரின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் காளி தேவியை அனுப்பி, அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தைப் பருகி மீண்டும் மீண்டும் உயிர் பெற்று முனிவர்களைக் கொடுமைப்படுத்தினர். இதனால் கலக்கமடைந்த பராசரர், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்கச் சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை வீழ்த்தி, வதைப்பதற்காக தனது மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், "எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும். அதோடு, எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்" எனக் கேட்டான். அப்படியே பெருமாளும் அருள்புரிந்தார். அவனது பெயராலேயே இத்தலம், 'தஞ்சமாபுரி'எனப்பட்டது..தஞ்சகனின் அழிவைக் கண்ட தண்டகன், பூமியைப் பிளந்துகொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை வதைத்தார். அதன்பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். அசுரர்கள் மூவரும் வதைக்கப்பட்ட பிறகு, பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக மகாவிஷ்ணு காட்சி தந்தார். இந்தத் திருக்கோயிலில் பெருமாள், ஶ்ரீ வீரநரசிம்ம சுவாமி, நீலமேகப் பெருமாள் மற்றும் மணிக்குன்ற பெருமாள் என மூன்று திருநாமங்கள் தாங்கி, தனித்தனி கோயில்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது..திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். நீலமேகப்பெருமாள் உத்ஸவராக கையில் செங்கோல் ஏந்தியும், உத்ஸவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கியக் கோலத்தில் காட்சி தருகிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு அருள்பாலிக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய் விளக்கேற்றி, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை..முதலாவதாக, தஞ்சை மாமணிக் கோயிலில் ஸ்ரீ நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். உத்ஸவர் ஸ்ரீமத் நாராயணன், தாயார் செங்கமலவல்லி. பராசர முனிவருக்கு நேரில் காட்சி கொடுத்த இடம். இரண்டாவதாக, மணிக்குன்றப் பெருமாள் கோயிலில் மூலவர் மணிக்குன்றப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம். உத்ஸவர் ஸ்ரீமத் நாராயணன், தாயார் அம்புஜவல்லி. மார்கண்டேய முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்தத் தலம். மூன்றாவதாக, தஞ்சையாளி நகர் கோயில் என்ற மேலசிங்க பெருமாள் திருக்கோயில். இங்கு மூலவர் நரசிம்மர்ஸ்ரீதேவி பூதேவியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் மெய்சிலிர்க்க வைக்கும். உத்ஸவர் ஸ்ரீமத் நாராயணன் தாயார் தஞ்சை நாயகி. மார்கண்டேய முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்த தலம். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது..இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் வீர நரசிம்மர், முன்மண்டபத்தில் அருளும் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிராகாரத்தில் அருளும் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் காட்சி தரும் அபய வரத நரசிம்மர், தாயார் சன்னிதி தூணில் காட்சி தரும் கம்பத்தடி யோக நரசிம்மர் ஆகிய பஞ்ச நரசிம்ம மூர்த்திகளை ஒருசேர தரிசனம் செய்ய, பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் வீர நரசிம்மரை தரிசனம் செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம். சுவாதி நட்சத்திரத்தில் வீர நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. ஆண்டு தோறும் இக்கோயிலில் நடைபெறும் வைகாசி கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்..வீர நரசிம்மர் கோயிலில் உள்ள சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக அருள்பாலிக்கிறார். இவர் தனது வலப்புறத்தில் உள்ள யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி விளங்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்குவது போல சிலை அமைப்பு உள்ளது. இது, யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் மனம் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாகும். மனதில் தீய எண்ணங்கள் கொண்டவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்புப் பெறலாம். இவருக்குப் பின்புறத்தில் காட்சி தரும் நரசிம்மர் யோகப்பட்டையுடன் அமர்ந்த கோலத்தில் அருளுகிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் உள்ளனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாள் தரிசனம் மிகவும் விசேஷமாகும்..வீர நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தாயார், நீலமேகப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் பெருமாளுக்கு வலப்புறத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரை, 'வலவந்தை நரசிம்மர்'என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மரின் இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருந்தது. கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லையாதலால் அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்ததாக ஐதீகம். கோப குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. அதிகக் கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன அமைதி பெறலாம். நீலமேகர், மணிக்குன்ற பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கலும், நரசிம்மருக்கு பானகம் படைத்து, வஸ்திரம் சாத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்..தரிசன நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8.30 மணி வரை.
– இரா.சுரேஷ்.நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில். தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் அருள்மிகு ஶ்ரீ வீரநரசிம்ம சுவாமி ஆலயம், நீலமேகப் பெருமாள் ஆலயம் மற்றும் மணிக்குன்ற பெருமாள் ஆலயம் ஆகிய மூன்று கோயில்களும் சேர்ந்ததுதான் இந்த திவ்யதேசத் திருக்கோயில்..பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு, அதன் கரையில் ஆசிரமம் அமைத்துத் தவம் செய்து வந்தார். அப்போது சிவபெருமானிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று அசுரர்கள் பராசரரையும், அவருடன் தவம் செய்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களின் தொல்லையில் இருந்து தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினார்..முனிவரின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் காளி தேவியை அனுப்பி, அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தைப் பருகி மீண்டும் மீண்டும் உயிர் பெற்று முனிவர்களைக் கொடுமைப்படுத்தினர். இதனால் கலக்கமடைந்த பராசரர், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்கச் சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை வீழ்த்தி, வதைப்பதற்காக தனது மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், "எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும். அதோடு, எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்" எனக் கேட்டான். அப்படியே பெருமாளும் அருள்புரிந்தார். அவனது பெயராலேயே இத்தலம், 'தஞ்சமாபுரி'எனப்பட்டது..தஞ்சகனின் அழிவைக் கண்ட தண்டகன், பூமியைப் பிளந்துகொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை வதைத்தார். அதன்பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். அசுரர்கள் மூவரும் வதைக்கப்பட்ட பிறகு, பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக மகாவிஷ்ணு காட்சி தந்தார். இந்தத் திருக்கோயிலில் பெருமாள், ஶ்ரீ வீரநரசிம்ம சுவாமி, நீலமேகப் பெருமாள் மற்றும் மணிக்குன்ற பெருமாள் என மூன்று திருநாமங்கள் தாங்கி, தனித்தனி கோயில்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது..திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். நீலமேகப்பெருமாள் உத்ஸவராக கையில் செங்கோல் ஏந்தியும், உத்ஸவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கியக் கோலத்தில் காட்சி தருகிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு அருள்பாலிக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய் விளக்கேற்றி, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை..முதலாவதாக, தஞ்சை மாமணிக் கோயிலில் ஸ்ரீ நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். உத்ஸவர் ஸ்ரீமத் நாராயணன், தாயார் செங்கமலவல்லி. பராசர முனிவருக்கு நேரில் காட்சி கொடுத்த இடம். இரண்டாவதாக, மணிக்குன்றப் பெருமாள் கோயிலில் மூலவர் மணிக்குன்றப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம். உத்ஸவர் ஸ்ரீமத் நாராயணன், தாயார் அம்புஜவல்லி. மார்கண்டேய முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்தத் தலம். மூன்றாவதாக, தஞ்சையாளி நகர் கோயில் என்ற மேலசிங்க பெருமாள் திருக்கோயில். இங்கு மூலவர் நரசிம்மர்ஸ்ரீதேவி பூதேவியுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் மெய்சிலிர்க்க வைக்கும். உத்ஸவர் ஸ்ரீமத் நாராயணன் தாயார் தஞ்சை நாயகி. மார்கண்டேய முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்த தலம். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது..இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் வீர நரசிம்மர், முன்மண்டபத்தில் அருளும் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிராகாரத்தில் அருளும் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் காட்சி தரும் அபய வரத நரசிம்மர், தாயார் சன்னிதி தூணில் காட்சி தரும் கம்பத்தடி யோக நரசிம்மர் ஆகிய பஞ்ச நரசிம்ம மூர்த்திகளை ஒருசேர தரிசனம் செய்ய, பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் வீர நரசிம்மரை தரிசனம் செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம். சுவாதி நட்சத்திரத்தில் வீர நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. ஆண்டு தோறும் இக்கோயிலில் நடைபெறும் வைகாசி கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்..வீர நரசிம்மர் கோயிலில் உள்ள சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக அருள்பாலிக்கிறார். இவர் தனது வலப்புறத்தில் உள்ள யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி விளங்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்குவது போல சிலை அமைப்பு உள்ளது. இது, யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் மனம் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாகும். மனதில் தீய எண்ணங்கள் கொண்டவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்புப் பெறலாம். இவருக்குப் பின்புறத்தில் காட்சி தரும் நரசிம்மர் யோகப்பட்டையுடன் அமர்ந்த கோலத்தில் அருளுகிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் உள்ளனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாள் தரிசனம் மிகவும் விசேஷமாகும்..வீர நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தாயார், நீலமேகப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் பெருமாளுக்கு வலப்புறத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரை, 'வலவந்தை நரசிம்மர்'என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மரின் இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருந்தது. கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லையாதலால் அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்ததாக ஐதீகம். கோப குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. அதிகக் கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன அமைதி பெறலாம். நீலமேகர், மணிக்குன்ற பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கலும், நரசிம்மருக்கு பானகம் படைத்து, வஸ்திரம் சாத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்..தரிசன நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8.30 மணி வரை.