– அபர்ணா சுப்ரமணியம்.புண்ணியம் தழைக்கச் செய்யும் கங்கை நதி, தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் பாய்கிறது. 'த்ரிபதகா' எனப் போற்றப்படும் கங்கை, பூமிக்கு வந்த நாளைக் கொண்டாடும் திருவிழா, 'கங்கா தசரா' எனப்படுகிறது. கங்கையை பகீரதன் வரவழைத்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் ஆகும். கங்கை நீரால் பகீரதன் தனது முன்னோர்களின் பாவங்களைப் போக்கிய இந்நாள், 'பாபஹர தசமி' எனப்படுகிறது..பரமேசுவரனை சேதுக்கரையில் லிங்கமாக பிரதிஷ்டை செய்து ஸ்ரீராமபிரான் வழிபட்ட தினம் ஜ்யேஷ்ட மாதம், சுக்லபட்ச தசமி திதியாகும். இந்த தசமி திதியில் ஹஸ்த நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள், 'தசஹரா' என்ற புண்ணிய காலமாகும். பத்து வித பாவங்களைப் போக்கும் புண்ணிய காலமான இன்று (9.6.2022) சேது தரிசனம் செய்வது அளவற்ற புண்ணியத்தைத் தரவல்லதாகும்..வாக்கினால் செய்கின்ற பாவங்கள் நான்காகும். அவை: கடுஞ்சொல், உண்மையில்லாத சொல், அவதூறு, அறிவுக்குப் பொருந்தாத பேச்சு. நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாமாகவே எடுத்துக்கொள்வது, அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது, பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது இவை மூன்றும் சரீரத்தால் செய்யப்படும் பாவங்கள் ஆகும். மற்றவர் பொருளுக்கு ஏங்குதல், மனதில் கெட்ட எண்ணங்களை வளர விடுதல், பொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான பற்று கொள்ளுதல் இவை மூன்றும் மனத்தால் இழைக்கப்படும் பாவங்கள் ஆகும். இந்த பத்து வித பாவங்களே, 'தசஹரா' எனப்படுவதாகும்..சேதுவில் நீராடியவருக்கு மேற்சொன்ன பத்து வித பாவங்களும் தீரும் என்கிறது, 'ராஜமார்த்தாண்டம்' என்னும் அறநூல். ஒவ்வொரு வருடமும் சேதுவுக்குப் போக இயலாது என்பதால் இந்தப் புண்ணிய காலத்தில் நம்முடைய ஊரிலுள்ள நீர்நிலைகள் மற்றும் வீட்டுக் குளியலறைகளில் கூட ஸங்கல்பம் செய்துகொண்டு,. 'விஷ்ணு பாதார்க்ய ஸம்பூதே கங்கே த்ரிபத காமினிதர்மத்ர வேதி விக்க்யாதே பாபம் மே ஹர ஜாஹீனவிச்ரத்தயா பக்தி ஸம்பன்னே ஸ்ரீமாதா தேவி ஜாஹ்னவிஅம்ருதேனாம்பனா தேவி பாகீரதி புனாஹிமாம்'.என்று பிரார்த்தனை செய்து நீராடினால் இதுவரை வாழ்நாளில் செய்த பத்து வகை பாபங்களும் கரைந்துவிடும். இதில் முக்கியம் என்னவெனில், 'இனி இதுபோன்ற பாவங்களைச் செய்ய மாட்டேன்' என உறுதி பூண வேண்டும்..இந்தத் திருநாளையொட்டி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களிலெல்லாம் கங்கையின் அவதார நிகழ்வை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். காசி, அஹமதாபாத்தில் இது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் உலகெங்கிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நாளில் கங்கையில் நீராடி இறைவனை வணங்கினால் செய்த பாபங்கள் அனைத்தும் தொலையும். அதோடு, பித்ருக்களின் ஆசியும் கிட்டுமென்பது ஐதீகம்..கங்கை நதிக்கரைக்குச் சென்று, 'கங்கைத் தாயே' என வணங்கி, அதைக் கைகளால் தொட்டு தலையில் தெளித்துக்கொண்டு, அதில் மூழ்கி பக்தர்கள் நீராடுகின்றனர். பிறகு நீரினடியிலுள்ள மண்ணையெடுத்து வணங்குகின்றனர். மாலை வேளையில் கங்கை நதியோரம் முழுவதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு தீபாராதனைக் காட்டி கங்கையை பூஜிக்கின்றனர். பக்தர்கள் நதியோரக் கடைகளில் விற்கப்படும் இலையால் செய்த சிறு படகில் வைக்கப்பட்டுள்ள விளக்கை வாங்கி அதை ஆற்றில் மிதக்க விட்டு இறைவனை பூஜிக்கின்றனர்..நதி நீரில் முதலையின் முதுகில் வெண்தாமரை மலர் மீது, வெண்ணிற ஆடையுடுத்திய கங்கா தேவி கையில் தாமரை, நீர்க்குடம் ஏந்தி இரு கைகள், அபய வரத ஹஸ்தத்துடன் புன்னகை தவழ அமர்ந்து காட்சியளிக்கின்றாள். கிரீடத்தில் பிறைச்சந்திரனை தரித்துள்ளாள். கங்கை நதிக்கரைக்குச் செல்ல இயலாதவர்கள் மேற்சொன்ன கங்கையின் திருவுருவை மனதில் எண்ணி, கங்கையின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம், ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதை கங்கா ஜலமாக பாவித்து வணங்கலாம். அப்படிச் செய்தாலும் கங்கை நதிக்கரையில் பூஜித்த பலன் கிட்டும்..கங்கை வழிபட்ட தலங்களில் திருச்சி காசி விஸ்வநாதர் ஆலயமும் ஒன்று. இவ்வாலயத்தில் மூலவர் காசி விஸ்வநாதர் சன்னிதி வாயிலின் வலப்பக்கம் வினாயகரும், இடப்பக்கம் கங்கா தேவி விக்ரகமும் உள்ளன. தினமும் இந்த கங்கா தேவி காவிரி தீர்த்தத்தால் அபிஷேகிக்கப்படுகிறாள். இப்படி கங்கைக்கு காவிரி நீரால் அபிஷேகம் நடைபெறும் அபூர்வ வழிபாட்டை இங்கு மட்டுமே காண முடியும். இவ்வாலயத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர், தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் என ஐந்து ஈசனாரையும் தரிசிக்கலாம். பாவங்கள், நோய் உள்ளிட்ட தீவினைகள் அகன்று, நன்மைகள் பல பெற்று வாழ இவ்வாலயம் சென்று வழிபடலாம்..அமைவிடம்: திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் காவிரி நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
– அபர்ணா சுப்ரமணியம்.புண்ணியம் தழைக்கச் செய்யும் கங்கை நதி, தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் பாய்கிறது. 'த்ரிபதகா' எனப் போற்றப்படும் கங்கை, பூமிக்கு வந்த நாளைக் கொண்டாடும் திருவிழா, 'கங்கா தசரா' எனப்படுகிறது. கங்கையை பகீரதன் வரவழைத்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் ஆகும். கங்கை நீரால் பகீரதன் தனது முன்னோர்களின் பாவங்களைப் போக்கிய இந்நாள், 'பாபஹர தசமி' எனப்படுகிறது..பரமேசுவரனை சேதுக்கரையில் லிங்கமாக பிரதிஷ்டை செய்து ஸ்ரீராமபிரான் வழிபட்ட தினம் ஜ்யேஷ்ட மாதம், சுக்லபட்ச தசமி திதியாகும். இந்த தசமி திதியில் ஹஸ்த நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள், 'தசஹரா' என்ற புண்ணிய காலமாகும். பத்து வித பாவங்களைப் போக்கும் புண்ணிய காலமான இன்று (9.6.2022) சேது தரிசனம் செய்வது அளவற்ற புண்ணியத்தைத் தரவல்லதாகும்..வாக்கினால் செய்கின்ற பாவங்கள் நான்காகும். அவை: கடுஞ்சொல், உண்மையில்லாத சொல், அவதூறு, அறிவுக்குப் பொருந்தாத பேச்சு. நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாமாகவே எடுத்துக்கொள்வது, அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது, பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது இவை மூன்றும் சரீரத்தால் செய்யப்படும் பாவங்கள் ஆகும். மற்றவர் பொருளுக்கு ஏங்குதல், மனதில் கெட்ட எண்ணங்களை வளர விடுதல், பொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான பற்று கொள்ளுதல் இவை மூன்றும் மனத்தால் இழைக்கப்படும் பாவங்கள் ஆகும். இந்த பத்து வித பாவங்களே, 'தசஹரா' எனப்படுவதாகும்..சேதுவில் நீராடியவருக்கு மேற்சொன்ன பத்து வித பாவங்களும் தீரும் என்கிறது, 'ராஜமார்த்தாண்டம்' என்னும் அறநூல். ஒவ்வொரு வருடமும் சேதுவுக்குப் போக இயலாது என்பதால் இந்தப் புண்ணிய காலத்தில் நம்முடைய ஊரிலுள்ள நீர்நிலைகள் மற்றும் வீட்டுக் குளியலறைகளில் கூட ஸங்கல்பம் செய்துகொண்டு,. 'விஷ்ணு பாதார்க்ய ஸம்பூதே கங்கே த்ரிபத காமினிதர்மத்ர வேதி விக்க்யாதே பாபம் மே ஹர ஜாஹீனவிச்ரத்தயா பக்தி ஸம்பன்னே ஸ்ரீமாதா தேவி ஜாஹ்னவிஅம்ருதேனாம்பனா தேவி பாகீரதி புனாஹிமாம்'.என்று பிரார்த்தனை செய்து நீராடினால் இதுவரை வாழ்நாளில் செய்த பத்து வகை பாபங்களும் கரைந்துவிடும். இதில் முக்கியம் என்னவெனில், 'இனி இதுபோன்ற பாவங்களைச் செய்ய மாட்டேன்' என உறுதி பூண வேண்டும்..இந்தத் திருநாளையொட்டி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களிலெல்லாம் கங்கையின் அவதார நிகழ்வை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். காசி, அஹமதாபாத்தில் இது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் உலகெங்கிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நாளில் கங்கையில் நீராடி இறைவனை வணங்கினால் செய்த பாபங்கள் அனைத்தும் தொலையும். அதோடு, பித்ருக்களின் ஆசியும் கிட்டுமென்பது ஐதீகம்..கங்கை நதிக்கரைக்குச் சென்று, 'கங்கைத் தாயே' என வணங்கி, அதைக் கைகளால் தொட்டு தலையில் தெளித்துக்கொண்டு, அதில் மூழ்கி பக்தர்கள் நீராடுகின்றனர். பிறகு நீரினடியிலுள்ள மண்ணையெடுத்து வணங்குகின்றனர். மாலை வேளையில் கங்கை நதியோரம் முழுவதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு தீபாராதனைக் காட்டி கங்கையை பூஜிக்கின்றனர். பக்தர்கள் நதியோரக் கடைகளில் விற்கப்படும் இலையால் செய்த சிறு படகில் வைக்கப்பட்டுள்ள விளக்கை வாங்கி அதை ஆற்றில் மிதக்க விட்டு இறைவனை பூஜிக்கின்றனர்..நதி நீரில் முதலையின் முதுகில் வெண்தாமரை மலர் மீது, வெண்ணிற ஆடையுடுத்திய கங்கா தேவி கையில் தாமரை, நீர்க்குடம் ஏந்தி இரு கைகள், அபய வரத ஹஸ்தத்துடன் புன்னகை தவழ அமர்ந்து காட்சியளிக்கின்றாள். கிரீடத்தில் பிறைச்சந்திரனை தரித்துள்ளாள். கங்கை நதிக்கரைக்குச் செல்ல இயலாதவர்கள் மேற்சொன்ன கங்கையின் திருவுருவை மனதில் எண்ணி, கங்கையின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம், ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதை கங்கா ஜலமாக பாவித்து வணங்கலாம். அப்படிச் செய்தாலும் கங்கை நதிக்கரையில் பூஜித்த பலன் கிட்டும்..கங்கை வழிபட்ட தலங்களில் திருச்சி காசி விஸ்வநாதர் ஆலயமும் ஒன்று. இவ்வாலயத்தில் மூலவர் காசி விஸ்வநாதர் சன்னிதி வாயிலின் வலப்பக்கம் வினாயகரும், இடப்பக்கம் கங்கா தேவி விக்ரகமும் உள்ளன. தினமும் இந்த கங்கா தேவி காவிரி தீர்த்தத்தால் அபிஷேகிக்கப்படுகிறாள். இப்படி கங்கைக்கு காவிரி நீரால் அபிஷேகம் நடைபெறும் அபூர்வ வழிபாட்டை இங்கு மட்டுமே காண முடியும். இவ்வாலயத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர், தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் என ஐந்து ஈசனாரையும் தரிசிக்கலாம். பாவங்கள், நோய் உள்ளிட்ட தீவினைகள் அகன்று, நன்மைகள் பல பெற்று வாழ இவ்வாலயம் சென்று வழிபடலாம்..அமைவிடம்: திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் காவிரி நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.