– ரேவதி பாலு.தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்தத் திருநாள் வைகாசி விசாகம். அநேகமாக வைகாசி மாத பௌர்ணமியன்று விசாக நட்சத்திரம் வரும். இந்த தெய்வீகத் திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால், 'வைகாசி விசாகம்' என்று சிறப்பித்துக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக மக்களுக்கு அளவிலா துன்பங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சூரபத்மன் என்னும் அசுரனை அழிப்பதற்காக வந்ததே முருகக்கடவுளின் அவதாரம்..தேவர்கள் சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஈசனிடம் சென்று முறையிட, சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றின. அந்தப் பொறிகளை அக்னி தேவரும், வாயு தேவரும் தாங்கிச் சென்று கங்கையில் சமர்ப்பிக்க, கங்கா தேவி அவற்றை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களை ஆலிங்கனம் செய்ய, அங்கே ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் அருமையான குணங்களுடன் ஆறு அழகான குழந்தைகளாக உருவாக, அந்த ஆறு முருகனை கார்த்திகைப் பெண்டிர் அறுவர் வளர்க்கின்றனர். பார்வதி தேவி அங்கே வந்து, அந்த ஆறு குழந்தைகளையும் பாசத்துடன் ஆரத் தழுவ, ஓருடல், ஆறு முகங்கள், பன்னிரு விழிகள், பன்னிரு கரங்களுடன் அங்கே முருகன் உருவாகிறார். இந்த வைபவம் வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெற்றதால், இதுவே முருகனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது..கங்கையால் கொண்டு செல்லப்பட்டதால், 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் பொறிகள் தெறித்து விழுந்ததால், 'சரவணன்' என்றும், கார்த்திகைப் பெண்டிர் வளர்த்ததால், 'கார்த்திகேயன்' என்றும், வைகாசி நட்சத்திரத்தில் அவதரித்ததால், 'விசாகன்' என்றும், எக்காலத்திலும் இளமைத் தோற்றத்தோடு இருப்பதால், 'குமரன்' என்றும் ஆறு முகங்களையுடையதால், ஆறுமுகம், சண்முகம் என்றும் பல்வேறு பெயர்களில் முருகப்பெருமான் துதிக்கப்படுகிறார். தைரியம், செல்வம் மற்றும் ஞானத்திற்கு அதிபதி முருகக் கடவுள்..'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் நமக்குக் கிடைக்கக் காரணமானவர் முருகப்பெருமான். அவர் சிறு பிள்ளையாக இருந்தபோது சிவபெருமான் அவரை படைக்கும் கடவுள் பிரம்மனிடம் கல்வி கற்க அனுப்பி வைக்கிறார். அவ்வாறே பிரம்மனிடம் சென்ற முருகபெருமான், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் உரைக்கும்படி அவரிடம் கேட்கிறார். அவரோ, ''நீ இப்போதுதான் கல்வியின் ஆரம்ப நிலையில் இருக்கிறாய். முதலில் எழுத்துக்களை, மொழியை கற்றுக்கொள். பிறகு மிக உயர்ந்த பிரணவ மந்திரத்திற்கு வரலாம்" என்கிறார். முருகனோ பிடிவாதமாக,''எனக்கு முதலில் பிரணவ மந்திரத்திலிருந்துதான் கல்வி ஆரம்பிக்க வேண்டும்" என்கிறார். வேறு வழி தெரியாத பிரம்மன், ''தனக்கு, 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாது என ஒப்புக்கொள்கிறார். அத்தோடு நிற்காமல், சிவபெருமானிடம் சென்று, ''தங்கள் மகனுக்கு என்னால் கல்வி கற்பிக்க இயலவில்லை. அவரை என்னால் சமாளிக்க முடியவில்லை" என்று முறையிடுகிறார். பிரம்மன் தனக்குப் பிரணவத்தின் பொருளைக் கற்பிக்காததால் முருகன் அவரை சிறையிலிட்டு விட்டு தனது தந்தை சிவபெருமானிடம் திரும்பி வருகிறார். படைக்கும் கடவுள் பிரம்மன் சிறையில் அடைபட்டதால் படைப்புத் தொழில் நின்று விடுகிறது..முருகனிடம், ''பிரம்மனை விடுதலை செய்யும்படி கூறுகிறார் சிவபெருமான்.''தாங்கள் பிரணவத்திற்குப் பொருள் கூறினால் நான் அவரை விடுவித்து விடுகிறேன்" என்று முருகன் சொல்ல, சிவனும் தனக்குப் பிரணவத்திற்கு பொருள் தெரியாது என்று ஒப்புக்கொள்ள நேரிடுகிறது. உடனே தானே குருவாக இருந்து முருகன் தகப்பனுக்கு பிரணவத்தின் பொருளை உபதேசிக்கிறார். இதனால் முருகப்பெருமான், 'சுவாமிநாதன்' என்னும் பெயர் பெறுகிறார்..'ஓம்' எனும் பிரணவத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அடங்கியிருப்பதாகக் கூறுகிறார் முருகப்பெருமான். அதில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் அடக்கம் என்கிறார். எந்த ஒரு மந்திரத்தை ஜபிக்கும் முன்பும், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை சேர்த்து ஜபிக்கும் பழக்கம் நமக்கு உண்டு. இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்களில், துதிகளில் 'ஓம்' சேர்த்து 'ஓம் நமசிவாய', 'ஓம் முருகா போற்றி', 'ஓம் விநாயகா பொற்றி' என்று இப்படி ஓம் இல்லாமல் மந்திரங்களை உரைப்பதில்லை. 'ஓம்' என்பது இந்த உலக இயங்கத்தின் மூல சக்தியாக விளங்குகிறது. அனைத்து மந்திரங்களுக்கும் இதுவே உயிர் நாடியாகத் திகழ்கிறது. இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே உலகம் எங்கும் பரவி வியாபித்து இருந்த ஓர் சக்தியாக இருந்தது 'ஓம்.' 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்திற்கு நிறைய பொருள்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'ஓம்' என்றால் அனைத்து சக்திகளும் அதில் அடக்கம் என்று கொள்ளலாம்..'ஓம்' எனும் மந்திரம் அ, ஓ, ம் ஆகிய மூன்று ஓசைகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான மந்திரம். அதாவது, ஓம் எனும் மந்திரத்தை நாம் உச்சரிக்கும்போது, 'அ' என்று ஆரம்பித்து, 'ஓ' என்று தொடர்ந்து, 'ம்' என்று முடிக்க வேண்டும். இந்த மந்திரத்தில் உள்ள அ, ஓ, ம் என்ற மூன்றையும் இதே வரிசையில் நாம் உச்சரிக்கும்போது உடலில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. 'அ' என்ற ஓசை உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து எழுந்து வயிற்றுப் பகுதி வரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்ற ஓசை உச்சரிக்கும் தருவாயில் மார்புப் பகுதியின் இயக்கத்தை சீராக்குகிறது. 'ம்' என்று முடிக்கும்போது நமது மூளை பகுதியும் நம் முகமும் சீரான இயக்கம் பெறுகின்றன..ஒருவரது மனதை ஒருமைப்படுத்தி அவரது எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி தியான நிலைக்கு இட்டுச்செல்லும் அற்புத சக்தி, 'ஓம்' எனும் மந்திரத்திற்கு உள்ளது. இதை உச்சரிக்க, உச்சரிக்க நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிந்து,நேர்மறை ஆற்றல் பெருகுகிறது. தினமும் காலையில் 20 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து, 'ஓம்' என்ற மந்திரத்தை மட்டும் உச்சரித்தாலே போதும். அந்த நாள் முழுக்க நாம் சிறப்பாகச் செயல்பட அந்த மந்திரம் பல அற்புத ஆற்றல்களை நமது உடலுக்குத் தருகிறது. நமது உடலில் எண்டார்பின் ஹார்மோன் சுரந்து நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள, 'ஓம்' எனும் மந்திரம் உதவுகிறது..வைகாசி விசாக வைபவம் அனைத்து முருகன் திருத்தலங்களிலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை, சுவாமிமலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் பத்து நாட்கள் திருவிழாவாகக் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளன்று பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை பக்திபூர்வமாக மக்கள் வழிபடுகின்றனர். முருகன் மட்டும் அல்லாது சிவன் மற்றும் அம்பிகை வழிபாடுகளும் இந்தத் திருநாளில் மேற்கொள்ளப்படுகிறது..திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானையுடன் உத்ஸவர் சன்னிதியிலிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, அங்கேயுள்ள நீர்நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத்தன்று, ஒவ்வொரு வருடமும் பழனியிலும் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் திருவிழா பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது..திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயில் கருவறையில் தண்ணீர் நிற்கும்படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உத்ஸவம் என்னும் வெப்பம் தணிக்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். இத்திருநாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், நீர் மோர், அப்பம் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. வைகாசி விசாக வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமான் இன்று ஜயந்தி நாதராக தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையெல்லாம் நடைபெறும். அதன் பிறகு ஜயந்திநாதர் வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வருவார். அந்த நேரத்தில் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத் தமிழ் ஆகியன இசைக்கப்படும்..இந்த வருட வைகாசி விசாகத் திருநாள் ஜூன் மாதம் 12ஆம் தேதி வருகிறது. இந்தத் திருநாள் நம் நாட்டில் மட்டுமல்லாமல்; மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாமும் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தன்று கோயில்களுக்குச் சென்று வழிபட்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெறுவோம்.
– ரேவதி பாலு.தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்தத் திருநாள் வைகாசி விசாகம். அநேகமாக வைகாசி மாத பௌர்ணமியன்று விசாக நட்சத்திரம் வரும். இந்த தெய்வீகத் திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால், 'வைகாசி விசாகம்' என்று சிறப்பித்துக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக மக்களுக்கு அளவிலா துன்பங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சூரபத்மன் என்னும் அசுரனை அழிப்பதற்காக வந்ததே முருகக்கடவுளின் அவதாரம்..தேவர்கள் சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஈசனிடம் சென்று முறையிட, சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றின. அந்தப் பொறிகளை அக்னி தேவரும், வாயு தேவரும் தாங்கிச் சென்று கங்கையில் சமர்ப்பிக்க, கங்கா தேவி அவற்றை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களை ஆலிங்கனம் செய்ய, அங்கே ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் அருமையான குணங்களுடன் ஆறு அழகான குழந்தைகளாக உருவாக, அந்த ஆறு முருகனை கார்த்திகைப் பெண்டிர் அறுவர் வளர்க்கின்றனர். பார்வதி தேவி அங்கே வந்து, அந்த ஆறு குழந்தைகளையும் பாசத்துடன் ஆரத் தழுவ, ஓருடல், ஆறு முகங்கள், பன்னிரு விழிகள், பன்னிரு கரங்களுடன் அங்கே முருகன் உருவாகிறார். இந்த வைபவம் வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெற்றதால், இதுவே முருகனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது..கங்கையால் கொண்டு செல்லப்பட்டதால், 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் பொறிகள் தெறித்து விழுந்ததால், 'சரவணன்' என்றும், கார்த்திகைப் பெண்டிர் வளர்த்ததால், 'கார்த்திகேயன்' என்றும், வைகாசி நட்சத்திரத்தில் அவதரித்ததால், 'விசாகன்' என்றும், எக்காலத்திலும் இளமைத் தோற்றத்தோடு இருப்பதால், 'குமரன்' என்றும் ஆறு முகங்களையுடையதால், ஆறுமுகம், சண்முகம் என்றும் பல்வேறு பெயர்களில் முருகப்பெருமான் துதிக்கப்படுகிறார். தைரியம், செல்வம் மற்றும் ஞானத்திற்கு அதிபதி முருகக் கடவுள்..'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் நமக்குக் கிடைக்கக் காரணமானவர் முருகப்பெருமான். அவர் சிறு பிள்ளையாக இருந்தபோது சிவபெருமான் அவரை படைக்கும் கடவுள் பிரம்மனிடம் கல்வி கற்க அனுப்பி வைக்கிறார். அவ்வாறே பிரம்மனிடம் சென்ற முருகபெருமான், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் உரைக்கும்படி அவரிடம் கேட்கிறார். அவரோ, ''நீ இப்போதுதான் கல்வியின் ஆரம்ப நிலையில் இருக்கிறாய். முதலில் எழுத்துக்களை, மொழியை கற்றுக்கொள். பிறகு மிக உயர்ந்த பிரணவ மந்திரத்திற்கு வரலாம்" என்கிறார். முருகனோ பிடிவாதமாக,''எனக்கு முதலில் பிரணவ மந்திரத்திலிருந்துதான் கல்வி ஆரம்பிக்க வேண்டும்" என்கிறார். வேறு வழி தெரியாத பிரம்மன், ''தனக்கு, 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாது என ஒப்புக்கொள்கிறார். அத்தோடு நிற்காமல், சிவபெருமானிடம் சென்று, ''தங்கள் மகனுக்கு என்னால் கல்வி கற்பிக்க இயலவில்லை. அவரை என்னால் சமாளிக்க முடியவில்லை" என்று முறையிடுகிறார். பிரம்மன் தனக்குப் பிரணவத்தின் பொருளைக் கற்பிக்காததால் முருகன் அவரை சிறையிலிட்டு விட்டு தனது தந்தை சிவபெருமானிடம் திரும்பி வருகிறார். படைக்கும் கடவுள் பிரம்மன் சிறையில் அடைபட்டதால் படைப்புத் தொழில் நின்று விடுகிறது..முருகனிடம், ''பிரம்மனை விடுதலை செய்யும்படி கூறுகிறார் சிவபெருமான்.''தாங்கள் பிரணவத்திற்குப் பொருள் கூறினால் நான் அவரை விடுவித்து விடுகிறேன்" என்று முருகன் சொல்ல, சிவனும் தனக்குப் பிரணவத்திற்கு பொருள் தெரியாது என்று ஒப்புக்கொள்ள நேரிடுகிறது. உடனே தானே குருவாக இருந்து முருகன் தகப்பனுக்கு பிரணவத்தின் பொருளை உபதேசிக்கிறார். இதனால் முருகப்பெருமான், 'சுவாமிநாதன்' என்னும் பெயர் பெறுகிறார்..'ஓம்' எனும் பிரணவத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அடங்கியிருப்பதாகக் கூறுகிறார் முருகப்பெருமான். அதில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் அடக்கம் என்கிறார். எந்த ஒரு மந்திரத்தை ஜபிக்கும் முன்பும், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை சேர்த்து ஜபிக்கும் பழக்கம் நமக்கு உண்டு. இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்களில், துதிகளில் 'ஓம்' சேர்த்து 'ஓம் நமசிவாய', 'ஓம் முருகா போற்றி', 'ஓம் விநாயகா பொற்றி' என்று இப்படி ஓம் இல்லாமல் மந்திரங்களை உரைப்பதில்லை. 'ஓம்' என்பது இந்த உலக இயங்கத்தின் மூல சக்தியாக விளங்குகிறது. அனைத்து மந்திரங்களுக்கும் இதுவே உயிர் நாடியாகத் திகழ்கிறது. இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே உலகம் எங்கும் பரவி வியாபித்து இருந்த ஓர் சக்தியாக இருந்தது 'ஓம்.' 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்திற்கு நிறைய பொருள்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'ஓம்' என்றால் அனைத்து சக்திகளும் அதில் அடக்கம் என்று கொள்ளலாம்..'ஓம்' எனும் மந்திரம் அ, ஓ, ம் ஆகிய மூன்று ஓசைகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான மந்திரம். அதாவது, ஓம் எனும் மந்திரத்தை நாம் உச்சரிக்கும்போது, 'அ' என்று ஆரம்பித்து, 'ஓ' என்று தொடர்ந்து, 'ம்' என்று முடிக்க வேண்டும். இந்த மந்திரத்தில் உள்ள அ, ஓ, ம் என்ற மூன்றையும் இதே வரிசையில் நாம் உச்சரிக்கும்போது உடலில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. 'அ' என்ற ஓசை உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து எழுந்து வயிற்றுப் பகுதி வரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்ற ஓசை உச்சரிக்கும் தருவாயில் மார்புப் பகுதியின் இயக்கத்தை சீராக்குகிறது. 'ம்' என்று முடிக்கும்போது நமது மூளை பகுதியும் நம் முகமும் சீரான இயக்கம் பெறுகின்றன..ஒருவரது மனதை ஒருமைப்படுத்தி அவரது எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி தியான நிலைக்கு இட்டுச்செல்லும் அற்புத சக்தி, 'ஓம்' எனும் மந்திரத்திற்கு உள்ளது. இதை உச்சரிக்க, உச்சரிக்க நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிந்து,நேர்மறை ஆற்றல் பெருகுகிறது. தினமும் காலையில் 20 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து, 'ஓம்' என்ற மந்திரத்தை மட்டும் உச்சரித்தாலே போதும். அந்த நாள் முழுக்க நாம் சிறப்பாகச் செயல்பட அந்த மந்திரம் பல அற்புத ஆற்றல்களை நமது உடலுக்குத் தருகிறது. நமது உடலில் எண்டார்பின் ஹார்மோன் சுரந்து நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள, 'ஓம்' எனும் மந்திரம் உதவுகிறது..வைகாசி விசாக வைபவம் அனைத்து முருகன் திருத்தலங்களிலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை, சுவாமிமலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் பத்து நாட்கள் திருவிழாவாகக் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளன்று பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை பக்திபூர்வமாக மக்கள் வழிபடுகின்றனர். முருகன் மட்டும் அல்லாது சிவன் மற்றும் அம்பிகை வழிபாடுகளும் இந்தத் திருநாளில் மேற்கொள்ளப்படுகிறது..திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானையுடன் உத்ஸவர் சன்னிதியிலிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, அங்கேயுள்ள நீர்நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத்தன்று, ஒவ்வொரு வருடமும் பழனியிலும் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் திருவிழா பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது..திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயில் கருவறையில் தண்ணீர் நிற்கும்படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உத்ஸவம் என்னும் வெப்பம் தணிக்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். இத்திருநாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், நீர் மோர், அப்பம் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. வைகாசி விசாக வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமான் இன்று ஜயந்தி நாதராக தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையெல்லாம் நடைபெறும். அதன் பிறகு ஜயந்திநாதர் வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வருவார். அந்த நேரத்தில் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத் தமிழ் ஆகியன இசைக்கப்படும்..இந்த வருட வைகாசி விசாகத் திருநாள் ஜூன் மாதம் 12ஆம் தேதி வருகிறது. இந்தத் திருநாள் நம் நாட்டில் மட்டுமல்லாமல்; மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாமும் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தன்று கோயில்களுக்குச் சென்று வழிபட்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெறுவோம்.