– ஆர்.ஜெயலெட்சுமி.நெல்லையப்பர் தேரோட்டம்!.திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி பெருந்திருவிழா மிகச் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படும். நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மைக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறும். 450 டன் எடையுள்ளதும் 28 அடி அகலம், 28 அடி நீளம், 35 அடி உயரமுள்ள பெரிய தேரில் இறைவன் திருவீதிகளில் பவனி வருவார்..விசுவநாதருக்கு சங்காபிஷேகம்!.தென்காசி, காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆனி மாத அனுஷ நட்சத்திர தினத்தில் வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது. இவ்விழா பராக்கிரம பாண்டியன் இக்கோயிலை எடுப்பித்து முதல் குடமுழுக்கு செய்த நாளைக் குறிக்கும் விழாவாக இருக்கலாம்! அன்று 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பெற்று சங்காபிஷேகம் நடைபெறும்..முப்பழ பூஜை!.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி ஊஞ்சல் விழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் முப்பழ பூஜை நிகழும். ஆனி உத்திர நாளில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகமும், பஞ்ச சபை நடராஜ மூர்த்திகள் புறப்பாடும், வீதி வலமும் நடைபெறும்..நடராஜ மூர்த்திக்கு ஆனி திருமஞ்சனம்!.ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் ஸ்ரீ நடராஜ தரிசன வைபவத்தினை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர். இத்திருநாளில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மற்றும் திருவாரூர் தியாகேசர் கோயில்களில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், மகா தரிசனம் நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கு கொள்வர். சிதம்பரத்தில் மட்டும் நடராஜப் பெருமான் ஆண்டுக்கு இரண்டு முறை (ஆனி, மார்கழி மாதங்களில்) தேரில் திருவீதி உலா வருகிறார். சிவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயில்களில் அன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்..பூப்பல்லக்கு வீதியுலா!.மயிலை கபாலீசுவரர் கோயிலில் மாணிக்கவாசகருடைய நட்சத்திரமான மகம் அன்று இரவில் பூப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகின்றது. நடராஜரிடம், மாணிக்கவாசகர் ஐக்கியம் ஆகும் ஐதீகமும் நடைபெறுகின்றது. உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனமான பிரதோஷ கால அபிஷேகம் நடைபெறுகின்றன. ஆனி சதயத்தில் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது..ஜம்புகேசுவரர் உத்திர நட்சத்திர புறப்பாடு!.திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். மறுநாள் நடராஜர் புறப்பட்டு உலா வருவார். ஆனி முழு நிலவு நாளன்று முப்பழ வழிபாடு நடைபெறுகின்றது..ஆனி கேட்டை திருமஞ்சனம்!.ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம் நடைபெறும். கோயிலின் தென்பகுதியிலிருந்து தீர்த்தத்துடன் கூடிய தங்கக் குடங்களை யானை மீது கொண்டு வந்து ஸ்ரீ ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்வர்..வெக்காளி அம்மனுக்கு மாம்பழ அபிஷேகம்!.ஆனி பெளர்ணமி அன்று சில கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருச்சி உறையூரில் மேல் கூரை இல்லாமல் திறந்தவெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பெளர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர்..வாழைத் தார் வழிபாடு!.திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பெளர்ணமியன்று சுவாமிக்கு வாழைப் பழத் தார்களை சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ பிரார்த்தனை செய்வர்..மாங்கனித் திருவிழா!.காரைக்காலில் ஆனி மாத பெளர்ணமியையொட்டி, 'மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பெளர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடை கூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்து கொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள்..ஆனி பெளர்ணமி தெப்பத் திருவிழா!.ஆனி பெளர்ணமியில் மன்னார்குடியில் அருள்புரியும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலின் தீர்த்தக் குளமான ஹரித்ரா நதி குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
– ஆர்.ஜெயலெட்சுமி.நெல்லையப்பர் தேரோட்டம்!.திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி பெருந்திருவிழா மிகச் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படும். நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மைக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறும். 450 டன் எடையுள்ளதும் 28 அடி அகலம், 28 அடி நீளம், 35 அடி உயரமுள்ள பெரிய தேரில் இறைவன் திருவீதிகளில் பவனி வருவார்..விசுவநாதருக்கு சங்காபிஷேகம்!.தென்காசி, காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆனி மாத அனுஷ நட்சத்திர தினத்தில் வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது. இவ்விழா பராக்கிரம பாண்டியன் இக்கோயிலை எடுப்பித்து முதல் குடமுழுக்கு செய்த நாளைக் குறிக்கும் விழாவாக இருக்கலாம்! அன்று 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பெற்று சங்காபிஷேகம் நடைபெறும்..முப்பழ பூஜை!.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி ஊஞ்சல் விழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் முப்பழ பூஜை நிகழும். ஆனி உத்திர நாளில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகமும், பஞ்ச சபை நடராஜ மூர்த்திகள் புறப்பாடும், வீதி வலமும் நடைபெறும்..நடராஜ மூர்த்திக்கு ஆனி திருமஞ்சனம்!.ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் ஸ்ரீ நடராஜ தரிசன வைபவத்தினை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர். இத்திருநாளில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மற்றும் திருவாரூர் தியாகேசர் கோயில்களில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், மகா தரிசனம் நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கு கொள்வர். சிதம்பரத்தில் மட்டும் நடராஜப் பெருமான் ஆண்டுக்கு இரண்டு முறை (ஆனி, மார்கழி மாதங்களில்) தேரில் திருவீதி உலா வருகிறார். சிவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயில்களில் அன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்..பூப்பல்லக்கு வீதியுலா!.மயிலை கபாலீசுவரர் கோயிலில் மாணிக்கவாசகருடைய நட்சத்திரமான மகம் அன்று இரவில் பூப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகின்றது. நடராஜரிடம், மாணிக்கவாசகர் ஐக்கியம் ஆகும் ஐதீகமும் நடைபெறுகின்றது. உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனமான பிரதோஷ கால அபிஷேகம் நடைபெறுகின்றன. ஆனி சதயத்தில் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது..ஜம்புகேசுவரர் உத்திர நட்சத்திர புறப்பாடு!.திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். மறுநாள் நடராஜர் புறப்பட்டு உலா வருவார். ஆனி முழு நிலவு நாளன்று முப்பழ வழிபாடு நடைபெறுகின்றது..ஆனி கேட்டை திருமஞ்சனம்!.ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம் நடைபெறும். கோயிலின் தென்பகுதியிலிருந்து தீர்த்தத்துடன் கூடிய தங்கக் குடங்களை யானை மீது கொண்டு வந்து ஸ்ரீ ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்வர்..வெக்காளி அம்மனுக்கு மாம்பழ அபிஷேகம்!.ஆனி பெளர்ணமி அன்று சில கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருச்சி உறையூரில் மேல் கூரை இல்லாமல் திறந்தவெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பெளர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர்..வாழைத் தார் வழிபாடு!.திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பெளர்ணமியன்று சுவாமிக்கு வாழைப் பழத் தார்களை சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ பிரார்த்தனை செய்வர்..மாங்கனித் திருவிழா!.காரைக்காலில் ஆனி மாத பெளர்ணமியையொட்டி, 'மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பெளர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடை கூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்து கொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள்..ஆனி பெளர்ணமி தெப்பத் திருவிழா!.ஆனி பெளர்ணமியில் மன்னார்குடியில் அருள்புரியும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலின் தீர்த்தக் குளமான ஹரித்ரா நதி குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.