– எம்.ராஜதிலகா.'கல் அடி பட்டாலும் படலாம்; கண் திருஷ்டி படவே கூடாது' என்று பெரியோர்கள் சொல்வார்கள். கணவன், மனைவி சந்தோஷமாக வெளியே சென்று வருவோம். சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வோம். மனைவி, குழந்தைகளின் சந்தோஷத்தின் பொருட்டு சிறு சிறு கொண்டாட்டங்களை அனுசரிப்போம். இவை அனைத்தும் மற்றவர் கண்களை உறுத்தும். அதுவே திருஷ்டி தோஷமாக மாறி, நமது வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைக் கொடுக்கும்..அப்படிப்பட்ட கண் திருஷ்டி உங்களை வாழ விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறதா? ஒரு சிறிய தாந்த்ரீக முறையில் பரிகாரம் செய்வதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து விடலாம்..காலையில் நீராடி, பூஜை அறையை சுத்தமாக்கி அமர்ந்து, முதலில் வலது உள்ளங்கையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொண்டு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறைச் சொல்லி, உங்கள் குடும்பத்தை கண் திருஷ்டியில் இருந்தும், கெட்ட ஆற்றலிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்தக் கல் உப்பை சிறிய மண் குடுவை ஒன்றில் போட வேண்டும். அதன் பின்பு எலுமிச்சம் பழத்தை வலது உள்ளங்கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பாக அந்த எலுமிச்சம் பழம் இருக்க வேண்டும் என்றும், அந்த எலுமிச்சம்பழத்தில் உங்கள் குலதெய்வமே வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து, முடிந்தால் வாயாரச் சொல்லி அதையும் அந்தக் குடுவையில் போட வேண்டும்..அதன் பிறகு அந்தக் குடுவைக்கு மேலே ஒரு வெள்ளை காட்டன் துணியை வைத்து ஒரு நூலால் கட்டி, அதை அப்படியே எடுத்து வரவேற்பறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான். இந்தக் கல் உப்பும், எலுமிச்சம்பழமும் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியில் இருந்து உங்கள் குடும்பத்தையும் உங்கள் வீட்டையும் நிச்சயம் பாதுகாக்கும்..மாதத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கும் எலுமிச்சம்பழத்தை கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு கீழ் பக்கமாகப் போட்டுவிடுங்கள். கல் உப்பை தண்ணீரில் கரைத்து சிங்க்கில் ஊற்றி விடுங்கள். மீண்டும் அந்தக் குடுவையில் இதேபோல வேண்டுதலை வைத்து கல் உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் யாருடைய பொறாமைக் கண்ணும் உங்களை எதுவும் செய்யாது. அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தைத் தாக்காது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள்; நிச்சயம் கைமேல் பலனைப் பெறலாம்.
– எம்.ராஜதிலகா.'கல் அடி பட்டாலும் படலாம்; கண் திருஷ்டி படவே கூடாது' என்று பெரியோர்கள் சொல்வார்கள். கணவன், மனைவி சந்தோஷமாக வெளியே சென்று வருவோம். சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வோம். மனைவி, குழந்தைகளின் சந்தோஷத்தின் பொருட்டு சிறு சிறு கொண்டாட்டங்களை அனுசரிப்போம். இவை அனைத்தும் மற்றவர் கண்களை உறுத்தும். அதுவே திருஷ்டி தோஷமாக மாறி, நமது வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைக் கொடுக்கும்..அப்படிப்பட்ட கண் திருஷ்டி உங்களை வாழ விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறதா? ஒரு சிறிய தாந்த்ரீக முறையில் பரிகாரம் செய்வதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து விடலாம்..காலையில் நீராடி, பூஜை அறையை சுத்தமாக்கி அமர்ந்து, முதலில் வலது உள்ளங்கையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொண்டு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறைச் சொல்லி, உங்கள் குடும்பத்தை கண் திருஷ்டியில் இருந்தும், கெட்ட ஆற்றலிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்தக் கல் உப்பை சிறிய மண் குடுவை ஒன்றில் போட வேண்டும். அதன் பின்பு எலுமிச்சம் பழத்தை வலது உள்ளங்கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பாக அந்த எலுமிச்சம் பழம் இருக்க வேண்டும் என்றும், அந்த எலுமிச்சம்பழத்தில் உங்கள் குலதெய்வமே வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து, முடிந்தால் வாயாரச் சொல்லி அதையும் அந்தக் குடுவையில் போட வேண்டும்..அதன் பிறகு அந்தக் குடுவைக்கு மேலே ஒரு வெள்ளை காட்டன் துணியை வைத்து ஒரு நூலால் கட்டி, அதை அப்படியே எடுத்து வரவேற்பறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான். இந்தக் கல் உப்பும், எலுமிச்சம்பழமும் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியில் இருந்து உங்கள் குடும்பத்தையும் உங்கள் வீட்டையும் நிச்சயம் பாதுகாக்கும்..மாதத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கும் எலுமிச்சம்பழத்தை கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு கீழ் பக்கமாகப் போட்டுவிடுங்கள். கல் உப்பை தண்ணீரில் கரைத்து சிங்க்கில் ஊற்றி விடுங்கள். மீண்டும் அந்தக் குடுவையில் இதேபோல வேண்டுதலை வைத்து கல் உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் யாருடைய பொறாமைக் கண்ணும் உங்களை எதுவும் செய்யாது. அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தைத் தாக்காது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள்; நிச்சயம் கைமேல் பலனைப் பெறலாம்.