– மங்களகெளரி பெருமாள்.மலேசியாவைப் பொறுத்தமட்டில் பொதுவிடுமுறையைத்தான் பயணத்துக்கான காலமாகப் பலரும் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அவ்வகையில் அண்மையில் அமைந்த மூன்று நாட்கள் பொது விடுமுறையை ஒட்டி, மலேசிய இந்து சங்கம், பூச்சோங் 14வது கல் கிளை நிர்வாகத்தினர் தென் மாநில திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பெரும்பாலும், கோலாலம்பூர்வாசிகள் தங்களுக்குத் தெற்கே இருக்கும் ஜொகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்வது அரிது. அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் மூன்று நாட்களில் தென் மாநிலங்களில் காணக்கிடைக்கும் பத்துத் திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அதில் ஒன்றுதான் ஜொகூர் மாநிலத்தில் அமைந்த அருள்மிகு சித்தி வினாயகர் திருக்கோயில்..மலேசியாவின் புகழ் பெற்ற திருத்தலங்களான பத்துமலை, கோலாலம்பூர் மகாமாரியம்மன், பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ பாலதண்டாயுதபாணி ஆலயம் போன்றவை தவிர்த்து, மற்ற ஆலயங்களின் வரலாற்றைப் புரட்டினால், அவை தோட்டப்புறக் கோயில்களாகவே இருக்கும். அந்நாட்களில் தோட்டப்புறங்களில் வேலை செய்வதற்காக வந்தேறிகளாக வந்த தென்தமிழ் மக்கள், தங்களின் நம்பிக்கைக்கு உரிய இஷ்ட தெய்வங்களுக்கும் குலதெய்வங்களுக்கும் கோயில் கட்டி வழிபாடு செய்திருப்பதைக் காண முடியும். அவ்வகையில் பெருவாரியாகக் கட்டப்பட்டவை அனைத்தும் மாரியம்மன், திரெளபதை அம்மன், முனியாண்டி, முனீஸ்வரன் போன்ற தெய்வத் தலங்களே. அப்படியிருக்க, ஜொகூர் சித்தி வினாயகப்பெருமான் எப்படி இங்கே கோயில் கொண்டார்?.ஜொகூர் ஜெயா எனும் பகுதி, ஜொகூர் பாருவிலிருந்து கோத்தாதிங்கி நோக்கிச் செல்லும் சாலை வழியில் 15வது கல்லில் அமைந்துள்ளது. முன்பு, 'கிம்யோர்க்' ரப்பர் தோட்டமாக இருந்த இந்தப் பகுதி 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அசுர வளர்ச்சியினால் மேம்பாட்டுப் பணிக்கு உள்ளானது..புதிய குடியிருப்புகளில் மக்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கான இடம் ஒதுக்கும் போக்கு இங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் அப்போது எழுப்பப்பட்ட ஆலயமே இந்த வினாயகர் திருக்கோயில். இருப்பினும், 2003ஆம் ஆண்டில் ஆலயத் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்த வேளையில், தமிழ் நாட்டிலிருந்து வந்த அடையாளம் தெரியாத ஒருவர் கூறியதாகக் கூறப்படும் தகவல் அனைவரையும் திகைக்க வைக்கிறது..கடல் வழியாகத் தங்கள் படைகளோடு வந்த சோழ மன்னர்கள் தற்போது கோயில் அமைந்திருக்கும் அந்நாளைய காடும் மலையும் சூழ்ந்த இடத்தில் மிகப் பெரிய கணபதி யாகம் ஒன்றைச் செய்ததாகவும், அவர்கள் கணபதியாக பாவித்துத் தொழுத அந்தக் கல் விக்ரகம் பூமியில் தற்போது புதையுண்டிருந்ததாகவும், அதனால் அங்கே கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள்..கோயில் பணிகள் முழுமையடையும் தருவாயில் சித்தர் ஒருவர் அங்கே தோன்றுவார் என்றும், அவரை அடையாளம் கண்டு நன்முறையில் நடத்த வேண்டும் என்றும் ஐதீகம் ஒன்று அங்கே நிலவுகிறது. அதேபோல், கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்த வேளையில், அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலிருந்து கோயில் தலைவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அங்கு சென்றபோது, நீண்ட தாடியோடு அழுக்கு ஆடைகள் அணிந்த ஒரு முதியவரைப் பார்த்திருக்கிறார் அவர். கண்களில் மட்டும் தெய்வீக ஒளி. மற்றபடி வாய் வார்த்தை இல்லை. காவல்துறை அதிகாரி, "யார் என விசாரியுங்கள். சரியான தகவல் இல்லையெனில் சமூக நல இல்லத்துக்கு அனுப்பி விடலாம்" என்றிருக்கிறார். ஏற்கெனவே நிலவும் நம்பிக்கை நினைவுக்கு வர, அந்தப் பெரியவரைக் கோயிலுக்கு அழைத்து வந்து, அவருக்குத் தேவையானவற்றை செய்துக் கொடுத்திருக்கிறார்கள்..பெரியவர் குளித்து முடித்து புத்தாடை அணிந்து, உணவுக்குப் பின்னர் மூலஸ்தானத்தைப் பார்த்தபடி வந்து அமர்ந்திருக்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தை, "இது நான் கட்டிய கோயில்!" சுற்றியிருந்தவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஆனால், அப்படி ஒருவர் வருவார் என்பது முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் பலருக்கும் மேனி சிலிர்த்துப்போனது. அன்றிரவு அந்தப் பெரியவரை அங்கேயே தங்கச் சொல்லி விட்டு, மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, அவர் போன இடம் யாருக்கும் தெரியவில்லை..இப்படி ஒரு தல வரலாற்றைக் கொண்டிருக்கும் இக்கோயில் பற்றி சிறிது காண்போமா?.'பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார். ஆற்றங்கரை மேட்டிலே, ஆலமரத்தடியிலே…' என்று சிறுவயதில் பாடியிருப்போம். அதுபோல, கோயிலைச் சுற்றி எங்கும் பிள்ளையார், அனைத்தும் பிள்ளையார் ரூபங்கள். வேறு யாருக்கும் இடமில்லை. மூலவரைக் கண் கொட்டாமல் கண்டுகளித்து, பக்திப் பனுவல்கள் பாடி, பட்டு வஸ்திரம், பூமாலை, பூஜை பொருட்கள், தட்சணை எனச் சீரெடுத்து எங்களால் இயன்றவரை பக்திப் பரவசத்தில் திளைத்தோம். 'கேட்டதைக் கொடுக்கும் கணபதி இவர்' என்று நிர்வாகத்தினர் எங்களிடம் சிலாகித்துக் கூறினர்..இந்தக் கோயில் சுவாமி வழிபாட்டுக்கு மட்டுமின்றி, சமூக நற்காரியங்களுக்கான இடமாகவும் அமைய வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில், வாசகசாலை, மகளிர் மேம்பாடு, குழந்தைகளுக்கான செவ்விய பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றையும் இங்கே ஒருங்கிணைத்துள்ளனர்..விஸ்தாரமான கோயில் வளாகத்தில் பொதுச் சேவைகளுக்கென்றே ஒரு மண்டபமும், சமையற்கட்டுடன் கூடிய உணவுச் சாலையும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிவறைகளும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருவது இக்கோயிலின் கூடுதல் சிறப்பு..குறிப்பு: கோயில் அமைந்திருக்கும் பகுதிக்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் கோத்தாதிங்கி எனப்படும் இடம், சோழ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததற்கான அத்தனை அடையாளங்களையும் கொண்டிருப்பதைத் தொல்லியல் இலாக்காவினர் கண்டுபிடித்துள்ளனர். அவ்விடம் தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– மங்களகெளரி பெருமாள்.மலேசியாவைப் பொறுத்தமட்டில் பொதுவிடுமுறையைத்தான் பயணத்துக்கான காலமாகப் பலரும் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அவ்வகையில் அண்மையில் அமைந்த மூன்று நாட்கள் பொது விடுமுறையை ஒட்டி, மலேசிய இந்து சங்கம், பூச்சோங் 14வது கல் கிளை நிர்வாகத்தினர் தென் மாநில திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பெரும்பாலும், கோலாலம்பூர்வாசிகள் தங்களுக்குத் தெற்கே இருக்கும் ஜொகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்வது அரிது. அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் மூன்று நாட்களில் தென் மாநிலங்களில் காணக்கிடைக்கும் பத்துத் திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அதில் ஒன்றுதான் ஜொகூர் மாநிலத்தில் அமைந்த அருள்மிகு சித்தி வினாயகர் திருக்கோயில்..மலேசியாவின் புகழ் பெற்ற திருத்தலங்களான பத்துமலை, கோலாலம்பூர் மகாமாரியம்மன், பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ பாலதண்டாயுதபாணி ஆலயம் போன்றவை தவிர்த்து, மற்ற ஆலயங்களின் வரலாற்றைப் புரட்டினால், அவை தோட்டப்புறக் கோயில்களாகவே இருக்கும். அந்நாட்களில் தோட்டப்புறங்களில் வேலை செய்வதற்காக வந்தேறிகளாக வந்த தென்தமிழ் மக்கள், தங்களின் நம்பிக்கைக்கு உரிய இஷ்ட தெய்வங்களுக்கும் குலதெய்வங்களுக்கும் கோயில் கட்டி வழிபாடு செய்திருப்பதைக் காண முடியும். அவ்வகையில் பெருவாரியாகக் கட்டப்பட்டவை அனைத்தும் மாரியம்மன், திரெளபதை அம்மன், முனியாண்டி, முனீஸ்வரன் போன்ற தெய்வத் தலங்களே. அப்படியிருக்க, ஜொகூர் சித்தி வினாயகப்பெருமான் எப்படி இங்கே கோயில் கொண்டார்?.ஜொகூர் ஜெயா எனும் பகுதி, ஜொகூர் பாருவிலிருந்து கோத்தாதிங்கி நோக்கிச் செல்லும் சாலை வழியில் 15வது கல்லில் அமைந்துள்ளது. முன்பு, 'கிம்யோர்க்' ரப்பர் தோட்டமாக இருந்த இந்தப் பகுதி 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அசுர வளர்ச்சியினால் மேம்பாட்டுப் பணிக்கு உள்ளானது..புதிய குடியிருப்புகளில் மக்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கான இடம் ஒதுக்கும் போக்கு இங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் அப்போது எழுப்பப்பட்ட ஆலயமே இந்த வினாயகர் திருக்கோயில். இருப்பினும், 2003ஆம் ஆண்டில் ஆலயத் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்த வேளையில், தமிழ் நாட்டிலிருந்து வந்த அடையாளம் தெரியாத ஒருவர் கூறியதாகக் கூறப்படும் தகவல் அனைவரையும் திகைக்க வைக்கிறது..கடல் வழியாகத் தங்கள் படைகளோடு வந்த சோழ மன்னர்கள் தற்போது கோயில் அமைந்திருக்கும் அந்நாளைய காடும் மலையும் சூழ்ந்த இடத்தில் மிகப் பெரிய கணபதி யாகம் ஒன்றைச் செய்ததாகவும், அவர்கள் கணபதியாக பாவித்துத் தொழுத அந்தக் கல் விக்ரகம் பூமியில் தற்போது புதையுண்டிருந்ததாகவும், அதனால் அங்கே கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள்..கோயில் பணிகள் முழுமையடையும் தருவாயில் சித்தர் ஒருவர் அங்கே தோன்றுவார் என்றும், அவரை அடையாளம் கண்டு நன்முறையில் நடத்த வேண்டும் என்றும் ஐதீகம் ஒன்று அங்கே நிலவுகிறது. அதேபோல், கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்த வேளையில், அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலிருந்து கோயில் தலைவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அங்கு சென்றபோது, நீண்ட தாடியோடு அழுக்கு ஆடைகள் அணிந்த ஒரு முதியவரைப் பார்த்திருக்கிறார் அவர். கண்களில் மட்டும் தெய்வீக ஒளி. மற்றபடி வாய் வார்த்தை இல்லை. காவல்துறை அதிகாரி, "யார் என விசாரியுங்கள். சரியான தகவல் இல்லையெனில் சமூக நல இல்லத்துக்கு அனுப்பி விடலாம்" என்றிருக்கிறார். ஏற்கெனவே நிலவும் நம்பிக்கை நினைவுக்கு வர, அந்தப் பெரியவரைக் கோயிலுக்கு அழைத்து வந்து, அவருக்குத் தேவையானவற்றை செய்துக் கொடுத்திருக்கிறார்கள்..பெரியவர் குளித்து முடித்து புத்தாடை அணிந்து, உணவுக்குப் பின்னர் மூலஸ்தானத்தைப் பார்த்தபடி வந்து அமர்ந்திருக்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தை, "இது நான் கட்டிய கோயில்!" சுற்றியிருந்தவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஆனால், அப்படி ஒருவர் வருவார் என்பது முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் பலருக்கும் மேனி சிலிர்த்துப்போனது. அன்றிரவு அந்தப் பெரியவரை அங்கேயே தங்கச் சொல்லி விட்டு, மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, அவர் போன இடம் யாருக்கும் தெரியவில்லை..இப்படி ஒரு தல வரலாற்றைக் கொண்டிருக்கும் இக்கோயில் பற்றி சிறிது காண்போமா?.'பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார். ஆற்றங்கரை மேட்டிலே, ஆலமரத்தடியிலே…' என்று சிறுவயதில் பாடியிருப்போம். அதுபோல, கோயிலைச் சுற்றி எங்கும் பிள்ளையார், அனைத்தும் பிள்ளையார் ரூபங்கள். வேறு யாருக்கும் இடமில்லை. மூலவரைக் கண் கொட்டாமல் கண்டுகளித்து, பக்திப் பனுவல்கள் பாடி, பட்டு வஸ்திரம், பூமாலை, பூஜை பொருட்கள், தட்சணை எனச் சீரெடுத்து எங்களால் இயன்றவரை பக்திப் பரவசத்தில் திளைத்தோம். 'கேட்டதைக் கொடுக்கும் கணபதி இவர்' என்று நிர்வாகத்தினர் எங்களிடம் சிலாகித்துக் கூறினர்..இந்தக் கோயில் சுவாமி வழிபாட்டுக்கு மட்டுமின்றி, சமூக நற்காரியங்களுக்கான இடமாகவும் அமைய வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில், வாசகசாலை, மகளிர் மேம்பாடு, குழந்தைகளுக்கான செவ்விய பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றையும் இங்கே ஒருங்கிணைத்துள்ளனர்..விஸ்தாரமான கோயில் வளாகத்தில் பொதுச் சேவைகளுக்கென்றே ஒரு மண்டபமும், சமையற்கட்டுடன் கூடிய உணவுச் சாலையும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிவறைகளும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருவது இக்கோயிலின் கூடுதல் சிறப்பு..குறிப்பு: கோயில் அமைந்திருக்கும் பகுதிக்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் கோத்தாதிங்கி எனப்படும் இடம், சோழ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததற்கான அத்தனை அடையாளங்களையும் கொண்டிருப்பதைத் தொல்லியல் இலாக்காவினர் கண்டுபிடித்துள்ளனர். அவ்விடம் தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.