– மாலதி சந்திரசேகரன்.துவாரகாதீசனான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு. உகந்த துவாரகை ஸ்தலங்கள் ஒன்பது ஆகும். 'மோட்சபுரி' என்று கூறப்படும் துவாரகா, பேட் துவாரகா, டாக்கூர் துவாரகா, ஸ்ரீநாத் துவாரகா, காங்கரோலி துவாரகா, ருக்மணி துவாரகா, கோமதி துவாரகா, சுதாமா துவாரகா, மூல் துவாரகா ஆகியவை ஆகும். இவற்றோடு, பிரபாச தீர்த்தம் மற்றும் முக்தி துவாரகாவையும் சிலர் சேர்க்கின்றனர். இவற்றில், ஸ்ரீநாத் துவாரகாவில், ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு வயது பாலகனாக, இடது கையைத் தூக்கி, கோவர்தன மலையைத் தாங்கிப் பிடித்த பாவனையில் சேவை செய்கிறார். எதனால் அப்படி? இதில் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது..ஸ்ரீ கிருஷ்ண பகவான், தேவகி வயிற்றில் பிறந்து, யசோதையிடம் வளர்ந்து வந்தது, அவர் அரக்கர், அரக்கியரை அழித்தது, கோவர்தன மலையை குடை போன்று உயர்த்திப் பிடித்து மழையில் இருந்து தம் மக்களை காப்பாற்றியது போன்ற பல சம்பவங்களையும் நாரதர், கம்சனிடம் கூறினார். இதைக் கேட்டு வெகுண்டு எழுந்த கம்சன், முஷ்டிகன், சாணூரன் ஆகியவர்களை அழைத்து, பகவானை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினான். ஆலோசனையின் முடிவில் ஒரு முடிவிற்கு வந்தான். அதன்படி விருஷ்ணி குல நண்பனான அக்ரூரரை அழைத்தான். ஸ்ரீ கிருஷ்ணரையும், ஸ்ரீ பலராமரையும் எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கூறி, அவர்களை அழிக்க, தான் தீட்டி இருக்கும் திட்டம் பற்றியும் விவரித்தான். கோகுலம் சென்று, மதுரா நகரில் நடத்த உள்ள தனுர் யாகத்திற்கு, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலராமர், ஸ்ரீ நந்தகோபரை அழைத்து வரும்படியும், அவர்களை உடனே கொல்ல வேண்டும் என அறிவித்து தேரையும் கொடுத்து அவரை அனுப்பினான்..அக்ரூரர் ஸ்ரீ கிருஷ்ண சரணங்களைக் கண்டு வணங்கிச் செல்வதற்கான வாய்ப்பாகக் கருதி உடனே புறப்பட்டார். கம்சன் தன்னைக் காத்துக்கொள்ள செய்வதனைத்தையும் அறிந்த அக்ரூரர், இம்முயற்சியில் கம்சன் தோல்வி அடையப் போவதையும் அறிந்திருந்தார். அக்ரூரர் வழிநெடுக கிருஷ்ண தியானமாகவே இருந்து கோகுலத்தை அடைந்து, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலராமர் இருவரும் இருந்த இடத்திற்குச் சென்றார். சென்றவர், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி தாம் வந்த காரணத்தையும், கம்சன் ஏற்பாடுகளையும் விளக்கினார்..அதைத்தானே பகவானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதை ஒரு நல்ல தருணமாகக் கருதி, புறப்பட ஆயத்தமானார். ஆனால், பதினொரு வயது வரை தன்னோடு இருந்த ஸ்ரீ கண்ணன், தன்னை விட்டுப் பிரிவதை யசோதா தாயாரின் மனம் ஏற்கவில்லை.."கண்ணா… எங்கள் இருவரையும் விட்டுவிட்டு போகப் போகிறாயா? உனக்கு எப்படி மனம் வருகிறது?"."கவலைப்படாதீர்கள் தாயே. நான் அங்கும் இருப்பேன். உங்களோடு இங்கும் இருப்பேன்."."அது எப்படி சாத்தியம் கண்ணா?"."சாத்தியம்தான் தாயே. நான் உங்களோடு நிச்சயம் இருப்பேன். ஆமாம்… என்னை எந்த ரூபத்தில் இருக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?"."கோபத்தில் இந்திரன், மழை பொழிய வைத்து ஊரையே வெள்ளக்காடாக ஆக்கிய பொழுது, நீ கோவர்தன கிரியைக் குடையாகப் பிடித்துக்கொண்டு நின்றாயே, அந்த ரூபத்தில்தான் எனக்கு நீ வேண்டும் போல் தோன்றுகிறது. பதினொரு வயதான நீ எப்படி மீண்டும் ஏழு வயது பாலகனாக மாற முடியும்?".பகவான் சிரித்துக் கொண்டார். அவரால் இயலாத காரியம் என்பது கூட ஒன்று உண்டா என்ன? திடீரென்று ஒரு ஒளிப் பிழம்பு பகவான் திருமேனியிலிருந்து கிளம்பியது. அடுத்த க்ஷணம், யசோதா மாதா விரும்பிய அதே ஏழு வயது பாலகிருஷ்ணன் கோவர்தன மலையைத் தூக்கியபடி இருந்த பாவனையில், மற்றொரு மூர்த்தி வெளிப்பட்டது.."தாயே, நீங்கள் விரும்பிய ரூபத்தில் இதோ உங்களுக்காக நான் ஒரு மூர்த்தியை தந்திருக்கிறேன். இந்த மூர்த்தியை நானாக பாவித்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்!"."கண்ணா, இது என்ன என் செல்லமே! உன்னுடன் நான் பேசுவேன்; விளையாடுவேன்; அன்னம் ஊட்டுவேன். இவற்றையெல்லாம் இந்த மூர்த்தியுடன் நான் செய்ய முடியுமா? நீ இங்கிருக்கும் திருப்தியை அது தருமா கூறு."."கவலைப்படாதீர்கள் தாயே. நான் செய்யும் அத்தனை காரியங்களையும் இந்த மூர்த்தி செய்யும். வேண்டுமானால் அவனுடன் பேசிப் பாருங்களேன்" என்றுஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறவும், அந்த மூர்த்தி பேசியது.."தாயே எனக்குப் பசிக்கிறது. சாப்பாடு கொடு.".அவ்வளவுதான், யசோதா மாதாவிற்கு பதினொரு வயது பாலகனான கண்ணன் ரூபம் மறந்து போய்விட்டது. எதிரில் இருக்கும் ஏழு வயது கோவர்த்தன கிரிதாரி மட்டுமே அவள் கண்களுக்குப் புலப்பட்டார்.."இதோ… நொடியில் ஆகாரம் தயாரித்து விடுகிறேன்" என்று உள்ளே ஓடினார், யசோதா மாதா..பெற்றோரிடம், தான் மதுரா செல்வதைக் கூறிவிட்டு, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலராமர் இருவரும் அக்ரூரருடன் கிளம்பினார்கள்..வருடங்கள் கழிந்தன. ஸ்ரீ யசோதா மாதாவும், ஸ்ரீ நந்தகோபரும் முதுமை அடைந்தார்கள். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் ஏழு வயது பால ரூபம் மட்டும் மாறவே இல்லை. ஒரு நாள் ஸ்ரீ யசோதா மாதா, ஸ்ரீ கோவர்தன கிரிதாரியிடம், "கண்ணா, எங்களுக்கு வயதாகிவிட்டது. உன்னை இனிமேல் யார் பார்த்துக் கொள்வார்கள். யாரை நம்பி உன்னை ஒப்படைப்பேன்?" என்று கூறி வருத்தப்படலானார்.."தாயே, இதற்காகவா வருத்தப்படுகிறீர்கள்? என்னை கோவர்தனம் தாய் பாசத்துடன் கவனித்துக் கொள்ளும். அந்த கோவர்த்தன கிரியில் இருக்கும் குகைகள்தான் என்னுடைய வீடு. அங்கு நான் இருந்திருக்கிறேன். கோவர்த்தனத்தில் நிறைய பழங்கள், பால் போன்றவற்றை நான் சாப்பிட்டிருக்கிறேன். என்னை அங்கே விட்டு விடுங்கள். நான் சந்தோஷமாக இருப்பேன். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்" என்று கூறியதைக் கேட்ட பெற்றோர், 'நந்தகாவ்' என்னும் இடத்தில் இருந்து, கோவர்தன மலையை அடைந்து, அங்கு இருந்த குகையில் ஸ்ரீ கிருஷ்ணரை விட்டு விட்டுத் திரும்பினார்கள். அண்ட சராசரத்தையே பாதுகாக்கும் புருஷோத்தமனுக்கு தன்னைப் பார்த்துக்கொள்வதா ஒரு பெரிய சிரமம்?.இப்படியாக துவாபர யுகமும் முடிந்தது. கலியுகம் பிறந்தது. மத்வாச்சாரியார் பரம்பரையில் வந்த ஸ்ரீ மாதவேந்திரபுரி என்னும் கிருஷ்ண பக்தரால், பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஒரு நாக பஞ்சமி தினத்தன்று, கலியுகத்தில் மீண்டும் கோவர்தன கிரிதாரி, வணங்குவதற்குரிய தெய்வமானார். எப்படித் தெரியுமா? குகையில் இருந்து தூக்கிய இடது கை மட்டும் வெளியில் தெரிய, அவ்வூர் பிரஜைகள், "ஏற்கெனவே ஸ்ரீ கண்ணனின் கதை கேட்டு அறிந்திருக்கிறோம். இது அவருடைய கோவர்தன மலையை தூக்கிய கரம்தான். இதையே நாங்கள் வழிபடுகிறோம்" என்று கூறி வழிபடலானார்கள். அம்மகான், தீட்சை அளித்தவரில் ஒருவர், கிரிதாரிக்கு பூஜை செய்யும் பாக்கியத்தைப் பெற்று செய்து வரலானார்..அவர்களுடைய காலமும் முடிந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில், சாந்திர மாத கணக்குப்படி, வைகாசி தேய்பிறை ஏகாதசியன்று, புஷ்டி மார்க்க சம்பிரதாய மார்கத்தைத் தழுவிய, ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் அவதாரம் நிகழ்ந்தது. அன்றுதான் கோவர்தன மலையில், இடக்கையை மட்டும் உயர்த்திப் பிடித்திருந்த கோவர்தன கிரிதாரியின் முக ரூப லாவண்யம் வெளியே தெரிந்தது..ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் கனவில் வந்த கோவர்தனகிரிதாரி, தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி கூறியதாகவும், அதன்படி கோவர்தன மலையில்,ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் திருமகன் ஸ்ரீ விட்டல்நாத், கோவர்தனகிரிதாரிக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அச்சமயம் முகலாயர்களின் படையெடுப்பின் காரணமாக அந்த அர்ச்சாவதார மூர்த்தியை பாதுகாப்பதற்காக வேண்டி, அச்சிலை மீண்டும் உதய்பூருக்கு மாற்றப்பட்டு, மேவார் மகாராணா பீம் சிங்கால் பாதுகாக்கப்பட்டது..ஸ்ரீநாத்ஜியின் பிரதான கோயில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரிலிருந்து நாற்பத்தெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயில் நகரமான நாத்வாராவில் அமைந்துள்ளது. ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் மகன் ஸ்ரீ விட்டல் நாத்ஜி, இக்கோயிலில் ஸ்ரீநாத்ஜி வழிபாட்டை நிறுவியவர். தெய்வத்தின் மகத்தான புகழ், எல்லா இடங்களிலும் பரவியது. இந்தக் கோயிலில், கருப்பு நிற பளிங்கு கல் ரூபமாக அருள்பாலிக்கும் அர்ச்சாவதார மூர்த்திக்கு தினமும் மங்கள ஆரத்தி, ஷ்ருங்கர் ஆரத்தி, குவால் ஆரத்தி, உத்தபன் ஆரத்தி, சந்தியா ஆரத்தி, சயன ஆரத்தி போன்ற எட்டு வேளை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன..ராஜஸ்தான் மாநிலம் செல்பவர்கள் அவசியம் இக்கோயிலில் உள்ள ஸ்ரீநாத்ஜியை வணங்கி வரத் தவறாதீர்கள். வலக்கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, இடக்கையை உயர்த்தியபடி, ஏழு வயது பாலக ரூபனாய் அருள்பாலிக்கும் பகவான், வேண்டிய வரங்களை அளிக்கவல்ல அர்ச்சாவதர மூர்த்தி ஆவார்.
– மாலதி சந்திரசேகரன்.துவாரகாதீசனான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு. உகந்த துவாரகை ஸ்தலங்கள் ஒன்பது ஆகும். 'மோட்சபுரி' என்று கூறப்படும் துவாரகா, பேட் துவாரகா, டாக்கூர் துவாரகா, ஸ்ரீநாத் துவாரகா, காங்கரோலி துவாரகா, ருக்மணி துவாரகா, கோமதி துவாரகா, சுதாமா துவாரகா, மூல் துவாரகா ஆகியவை ஆகும். இவற்றோடு, பிரபாச தீர்த்தம் மற்றும் முக்தி துவாரகாவையும் சிலர் சேர்க்கின்றனர். இவற்றில், ஸ்ரீநாத் துவாரகாவில், ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு வயது பாலகனாக, இடது கையைத் தூக்கி, கோவர்தன மலையைத் தாங்கிப் பிடித்த பாவனையில் சேவை செய்கிறார். எதனால் அப்படி? இதில் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது..ஸ்ரீ கிருஷ்ண பகவான், தேவகி வயிற்றில் பிறந்து, யசோதையிடம் வளர்ந்து வந்தது, அவர் அரக்கர், அரக்கியரை அழித்தது, கோவர்தன மலையை குடை போன்று உயர்த்திப் பிடித்து மழையில் இருந்து தம் மக்களை காப்பாற்றியது போன்ற பல சம்பவங்களையும் நாரதர், கம்சனிடம் கூறினார். இதைக் கேட்டு வெகுண்டு எழுந்த கம்சன், முஷ்டிகன், சாணூரன் ஆகியவர்களை அழைத்து, பகவானை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினான். ஆலோசனையின் முடிவில் ஒரு முடிவிற்கு வந்தான். அதன்படி விருஷ்ணி குல நண்பனான அக்ரூரரை அழைத்தான். ஸ்ரீ கிருஷ்ணரையும், ஸ்ரீ பலராமரையும் எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கூறி, அவர்களை அழிக்க, தான் தீட்டி இருக்கும் திட்டம் பற்றியும் விவரித்தான். கோகுலம் சென்று, மதுரா நகரில் நடத்த உள்ள தனுர் யாகத்திற்கு, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலராமர், ஸ்ரீ நந்தகோபரை அழைத்து வரும்படியும், அவர்களை உடனே கொல்ல வேண்டும் என அறிவித்து தேரையும் கொடுத்து அவரை அனுப்பினான்..அக்ரூரர் ஸ்ரீ கிருஷ்ண சரணங்களைக் கண்டு வணங்கிச் செல்வதற்கான வாய்ப்பாகக் கருதி உடனே புறப்பட்டார். கம்சன் தன்னைக் காத்துக்கொள்ள செய்வதனைத்தையும் அறிந்த அக்ரூரர், இம்முயற்சியில் கம்சன் தோல்வி அடையப் போவதையும் அறிந்திருந்தார். அக்ரூரர் வழிநெடுக கிருஷ்ண தியானமாகவே இருந்து கோகுலத்தை அடைந்து, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலராமர் இருவரும் இருந்த இடத்திற்குச் சென்றார். சென்றவர், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி தாம் வந்த காரணத்தையும், கம்சன் ஏற்பாடுகளையும் விளக்கினார்..அதைத்தானே பகவானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதை ஒரு நல்ல தருணமாகக் கருதி, புறப்பட ஆயத்தமானார். ஆனால், பதினொரு வயது வரை தன்னோடு இருந்த ஸ்ரீ கண்ணன், தன்னை விட்டுப் பிரிவதை யசோதா தாயாரின் மனம் ஏற்கவில்லை.."கண்ணா… எங்கள் இருவரையும் விட்டுவிட்டு போகப் போகிறாயா? உனக்கு எப்படி மனம் வருகிறது?"."கவலைப்படாதீர்கள் தாயே. நான் அங்கும் இருப்பேன். உங்களோடு இங்கும் இருப்பேன்."."அது எப்படி சாத்தியம் கண்ணா?"."சாத்தியம்தான் தாயே. நான் உங்களோடு நிச்சயம் இருப்பேன். ஆமாம்… என்னை எந்த ரூபத்தில் இருக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?"."கோபத்தில் இந்திரன், மழை பொழிய வைத்து ஊரையே வெள்ளக்காடாக ஆக்கிய பொழுது, நீ கோவர்தன கிரியைக் குடையாகப் பிடித்துக்கொண்டு நின்றாயே, அந்த ரூபத்தில்தான் எனக்கு நீ வேண்டும் போல் தோன்றுகிறது. பதினொரு வயதான நீ எப்படி மீண்டும் ஏழு வயது பாலகனாக மாற முடியும்?".பகவான் சிரித்துக் கொண்டார். அவரால் இயலாத காரியம் என்பது கூட ஒன்று உண்டா என்ன? திடீரென்று ஒரு ஒளிப் பிழம்பு பகவான் திருமேனியிலிருந்து கிளம்பியது. அடுத்த க்ஷணம், யசோதா மாதா விரும்பிய அதே ஏழு வயது பாலகிருஷ்ணன் கோவர்தன மலையைத் தூக்கியபடி இருந்த பாவனையில், மற்றொரு மூர்த்தி வெளிப்பட்டது.."தாயே, நீங்கள் விரும்பிய ரூபத்தில் இதோ உங்களுக்காக நான் ஒரு மூர்த்தியை தந்திருக்கிறேன். இந்த மூர்த்தியை நானாக பாவித்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்!"."கண்ணா, இது என்ன என் செல்லமே! உன்னுடன் நான் பேசுவேன்; விளையாடுவேன்; அன்னம் ஊட்டுவேன். இவற்றையெல்லாம் இந்த மூர்த்தியுடன் நான் செய்ய முடியுமா? நீ இங்கிருக்கும் திருப்தியை அது தருமா கூறு."."கவலைப்படாதீர்கள் தாயே. நான் செய்யும் அத்தனை காரியங்களையும் இந்த மூர்த்தி செய்யும். வேண்டுமானால் அவனுடன் பேசிப் பாருங்களேன்" என்றுஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறவும், அந்த மூர்த்தி பேசியது.."தாயே எனக்குப் பசிக்கிறது. சாப்பாடு கொடு.".அவ்வளவுதான், யசோதா மாதாவிற்கு பதினொரு வயது பாலகனான கண்ணன் ரூபம் மறந்து போய்விட்டது. எதிரில் இருக்கும் ஏழு வயது கோவர்த்தன கிரிதாரி மட்டுமே அவள் கண்களுக்குப் புலப்பட்டார்.."இதோ… நொடியில் ஆகாரம் தயாரித்து விடுகிறேன்" என்று உள்ளே ஓடினார், யசோதா மாதா..பெற்றோரிடம், தான் மதுரா செல்வதைக் கூறிவிட்டு, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலராமர் இருவரும் அக்ரூரருடன் கிளம்பினார்கள்..வருடங்கள் கழிந்தன. ஸ்ரீ யசோதா மாதாவும், ஸ்ரீ நந்தகோபரும் முதுமை அடைந்தார்கள். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் ஏழு வயது பால ரூபம் மட்டும் மாறவே இல்லை. ஒரு நாள் ஸ்ரீ யசோதா மாதா, ஸ்ரீ கோவர்தன கிரிதாரியிடம், "கண்ணா, எங்களுக்கு வயதாகிவிட்டது. உன்னை இனிமேல் யார் பார்த்துக் கொள்வார்கள். யாரை நம்பி உன்னை ஒப்படைப்பேன்?" என்று கூறி வருத்தப்படலானார்.."தாயே, இதற்காகவா வருத்தப்படுகிறீர்கள்? என்னை கோவர்தனம் தாய் பாசத்துடன் கவனித்துக் கொள்ளும். அந்த கோவர்த்தன கிரியில் இருக்கும் குகைகள்தான் என்னுடைய வீடு. அங்கு நான் இருந்திருக்கிறேன். கோவர்த்தனத்தில் நிறைய பழங்கள், பால் போன்றவற்றை நான் சாப்பிட்டிருக்கிறேன். என்னை அங்கே விட்டு விடுங்கள். நான் சந்தோஷமாக இருப்பேன். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்" என்று கூறியதைக் கேட்ட பெற்றோர், 'நந்தகாவ்' என்னும் இடத்தில் இருந்து, கோவர்தன மலையை அடைந்து, அங்கு இருந்த குகையில் ஸ்ரீ கிருஷ்ணரை விட்டு விட்டுத் திரும்பினார்கள். அண்ட சராசரத்தையே பாதுகாக்கும் புருஷோத்தமனுக்கு தன்னைப் பார்த்துக்கொள்வதா ஒரு பெரிய சிரமம்?.இப்படியாக துவாபர யுகமும் முடிந்தது. கலியுகம் பிறந்தது. மத்வாச்சாரியார் பரம்பரையில் வந்த ஸ்ரீ மாதவேந்திரபுரி என்னும் கிருஷ்ண பக்தரால், பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஒரு நாக பஞ்சமி தினத்தன்று, கலியுகத்தில் மீண்டும் கோவர்தன கிரிதாரி, வணங்குவதற்குரிய தெய்வமானார். எப்படித் தெரியுமா? குகையில் இருந்து தூக்கிய இடது கை மட்டும் வெளியில் தெரிய, அவ்வூர் பிரஜைகள், "ஏற்கெனவே ஸ்ரீ கண்ணனின் கதை கேட்டு அறிந்திருக்கிறோம். இது அவருடைய கோவர்தன மலையை தூக்கிய கரம்தான். இதையே நாங்கள் வழிபடுகிறோம்" என்று கூறி வழிபடலானார்கள். அம்மகான், தீட்சை அளித்தவரில் ஒருவர், கிரிதாரிக்கு பூஜை செய்யும் பாக்கியத்தைப் பெற்று செய்து வரலானார்..அவர்களுடைய காலமும் முடிந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில், சாந்திர மாத கணக்குப்படி, வைகாசி தேய்பிறை ஏகாதசியன்று, புஷ்டி மார்க்க சம்பிரதாய மார்கத்தைத் தழுவிய, ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் அவதாரம் நிகழ்ந்தது. அன்றுதான் கோவர்தன மலையில், இடக்கையை மட்டும் உயர்த்திப் பிடித்திருந்த கோவர்தன கிரிதாரியின் முக ரூப லாவண்யம் வெளியே தெரிந்தது..ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் கனவில் வந்த கோவர்தனகிரிதாரி, தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி கூறியதாகவும், அதன்படி கோவர்தன மலையில்,ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் திருமகன் ஸ்ரீ விட்டல்நாத், கோவர்தனகிரிதாரிக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அச்சமயம் முகலாயர்களின் படையெடுப்பின் காரணமாக அந்த அர்ச்சாவதார மூர்த்தியை பாதுகாப்பதற்காக வேண்டி, அச்சிலை மீண்டும் உதய்பூருக்கு மாற்றப்பட்டு, மேவார் மகாராணா பீம் சிங்கால் பாதுகாக்கப்பட்டது..ஸ்ரீநாத்ஜியின் பிரதான கோயில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரிலிருந்து நாற்பத்தெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயில் நகரமான நாத்வாராவில் அமைந்துள்ளது. ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் மகன் ஸ்ரீ விட்டல் நாத்ஜி, இக்கோயிலில் ஸ்ரீநாத்ஜி வழிபாட்டை நிறுவியவர். தெய்வத்தின் மகத்தான புகழ், எல்லா இடங்களிலும் பரவியது. இந்தக் கோயிலில், கருப்பு நிற பளிங்கு கல் ரூபமாக அருள்பாலிக்கும் அர்ச்சாவதார மூர்த்திக்கு தினமும் மங்கள ஆரத்தி, ஷ்ருங்கர் ஆரத்தி, குவால் ஆரத்தி, உத்தபன் ஆரத்தி, சந்தியா ஆரத்தி, சயன ஆரத்தி போன்ற எட்டு வேளை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன..ராஜஸ்தான் மாநிலம் செல்பவர்கள் அவசியம் இக்கோயிலில் உள்ள ஸ்ரீநாத்ஜியை வணங்கி வரத் தவறாதீர்கள். வலக்கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, இடக்கையை உயர்த்தியபடி, ஏழு வயது பாலக ரூபனாய் அருள்பாலிக்கும் பகவான், வேண்டிய வரங்களை அளிக்கவல்ல அர்ச்சாவதர மூர்த்தி ஆவார்.