குலதெய்வ சாபம் தீரணுமா? இதைச் செய்யுங்க!

குலதெய்வம்
குலதெய்வம்

ரு கஷ்டம் வருகின்றபோது மட்டுமே பெரும்பாலானோர் தெய்வத்திடம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தங்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை, திருமணம் போன்றவை அமையாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு தங்கள் குலதெய்வம் பற்றிய நினைவு வருகின்றது. குலதெய்வத்திற்கு இதற்கு முன் தாங்கள் வேண்டியபடி நேர்த்திக்கடன் முறையாகச் செலுத்தாத காரணத்தாலேயே, தற்போது தாங்கள் பல துன்பங்களை அனுபவிக்கின்றோம் எனவும் அவர்கள் கருதுவார்கள். அந்த வகையில் தங்கள் குலதெய்வத்துக்கு முறையான நேர்த்திக்கடன் செலுத்தாததால் ஏற்படும் பாதகமான நிலையை போக்கும் எளிய பரிகாரங்கள் சிலவற்றைக் காண்போம்.

இந்த பூமியில் நாம் வாழக் காரணமாக இருப்பவர்கள் நமது முன்னோர்கள்தான். அவர்கள் தங்களின் குலதெய்வத்தை முறையாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் வேண்டுதல் நிறைவேறினால், இந்த நேர்த்திக்கடனைச் செய்கிறோம் என வேண்டிக்கொள்வார்கள். பெரும்பாலானோர் வேண்டுதல் நிறைவேறியவுடன், தங்களின் குலதெய்வத்திற்கு முறையான நேர்த்திக்கடனை செலுத்தி விடுவர். ஒருசிலருக்கு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த முடியாத நிலை உருவாகிறது. இன்னும் சிலருக்கு தங்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாமலிருக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நமது குலதெய்வம் என்றாலும் சரி, நாம் வழிபடும் வேறு எந்த தெய்வமானாலும் சரி, “எனக்கு இந்த நேர்த்திக்கடனை நீ செலுத்தினால் மட்டுமே நான் உன்னைக் காப்பேன்; செலுத்தவில்லையென்றால் உன்னை தண்டிப்பேன்” எனக் கூறாது. மாறாக, நேத்திக்கடனை செலுத்தவில்லை என்றாலும் அந்த பக்தரை அவரின் குலதெய்வமோ அல்லது இன்னபிற தெய்வங்களோ தண்டிக்காது.

எனினும், நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும், எதிர்செயல் இருக்கும் என்கிற உலக நியதியின் அடிப்படையில், நமக்கு நன்மை செய்ததாக நாம் நினைக்கின்ற தெய்வங்களுக்கு பதில் மரியாதையாக, அந்த தெய்வங்களுக்கு நாம் செய்யவேண்டியதை செய்யாமல் போகும் பட்சத்தில் நமக்கோ நமது சந்ததியினருக்கோ அவர்களின் வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏதும் அமையாமல் போகும் நிலை ஏற்படுகிறது.

இப்படி நமக்கும், நமக்குப் பின் வரும் தலைமுறையினருக்கும் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தாததால் ஏற்படுகின்ற தெய்வ குற்றம் நீங்க இரண்டு பரிகாரங்கள் உள்ளன.

தங்களின் முன்னோர்கள், குலதெய்வத்திற்கு வேண்டியபடி நேத்திக்கடன் செலுத்தாமல் போயிருந்தால் அந்த குலதெய்வ குற்றம் நீங்கிட, செலவு செய்து பல பெரிய பெரிய கோயில்களுக்கு சென்று அங்கிருக்கும் தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தொடர்ந்து மூன்று பௌர்ணமி தினங்கள் சென்று வணங்கி வந்தாலே, உங்கள் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டதாக குலதெய்வம் கணக்கில் கொள்ளும்.

கிராம குலதெய்வம்
கிராம குலதெய்வம்

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்கள், குலதெய்வ கோயிலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், விடுபட்ட பௌர்ணமி தினத்தை கணக்கில் கொள்ளாமல், மீண்டும் தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களுக்கு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட முயற்சிக்க வேண்டும்.

ஒருசிலருக்கு தலைமுறை இடைவெளி காரணமாக தங்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாத நிலையில் இருப்பார்கள். மேலும், அவர்களின் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடனை முறையாக செலுத்தாததால், தங்கள் வாழ்வில் பல இன்னல்களை சந்திப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பார்கள். குலதெய்வம் எதுவென்றே தெரியாத பட்சத்தில் உங்கள் முன்னோர்கள் செலுத்தாத நேர்த்திக்கடனை செலுத்த விரும்புபவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அம்மன், முருகன், பெருமாள் கோயில்களில் ஏதாவது ஒன்றுக்கு தொடர்ந்து மூன்று பௌர்ணமி தினங்கள் சென்று வழிபட்டு வருவதால், குலதெய்வத்திற்கு உங்கள் முன்னோர்கள் நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கி, தற்போது வாழ்கின்ற அவர்களின் சந்ததியினர் சீரும் சிறப்புமாக வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com