ஒருசமயம் பாவமே செய்யாத முனிவர் ஒருவர் கங்கையில் நீராடச் சென்றார். அங்கே கங்கையில் நீராடிக்கொண்டு இருந்தவர்கள், ‘மாதா கங்கே, என் பாவத்தினை போக்கிக் காத்தருள்க’ என்று கூறி நீராடினார்கள். இதைக்கேட்ட முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘இப்படிப் பாவங்களைக் கரைக்கும் கங்கையில் நான் நீராடினால் அந்தப் பாவங்கள் என்னை வந்து சேருமல்லவா? எனவே, கங்கையில் நீராடாமல் இருப்பதே நலம்’ என்று அங்கிருந்து புறப்படலானார்.அப்போது அங்கு வந்த ஒரு பெண், ‘முனிவரே, ஏன் நீராடாமல் செல்கிறீர்கள்?’ என்று கேட்டாள். முனிவர் அதற்கான காரணத்தை அவளிடம் கூறினார். அதற்கு அந்தப் பெண், ‘இந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. எனவே, மற்றவர் செய்த பாவங்களும் கடலைச் சென்று அடைகிறது. எனவே, நீங்கள் கங்கையில் நீராடலாம்’ என்று கூறினாள்.முனிவர், ‘இதை அந்த சமுத்திரத்திடமே கேட்போம்’ எனக் கருதி செல்லலானார். அங்கே சென்ற முனிவர், சமுத்திர தேவனான வருணனை நோக்கி தபம் செய்தார். வருண தேவனும் அவர் முன் தோன்ற முனிவர், "வருண தேவனே, கங்கையில் விடப்படும் பாவங்கள் அனைத்தும், சமுத்திரத்தை வந்து அடைகின்றன. அப்படியிருக்க, சமுத்திரத்தில் நீராடுவது எப்படிப் புண்ணியம் ஆகும்?” என்றார்.அதற்கு வருணன், "முனிவரே… கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரியனின் ஒளிக்கதிர்களால் ஆவியாகி மேலே சென்று விடுவதால், கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்வதில்லை. எனவே, புண்ணிய நீராடலுக்கு கடல் உகந்ததுதான்" என்று கூறி வருண பகவான் மறைந்தார்.அப்படியும் தனது சந்தேகம் தீராத முனிவர், சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்தார். "சூரிய பகவானே, கடலில் சேரும் பாவங்களை தங்களது ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்வதால் அது உங்களை பாதிப்பதில்லையா?" என்று கேட்டார்.அதற்கு சூரியன், ”முனிவரே… எனது ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள், எனது உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை. அவை மேகங்களாக வானிலேயே தங்கி விடுகின்றன" என்றார்.உடனே முனிவர், "அப்படியென்றால், அந்தப் பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது?" என்று கேட்க, ”அதை நீங்கள் மேகத்திடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்" என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.உடனே, முனிவர் மேகத்திடம் தனது கேள்வியை எழுப்பினார். அதைக் கேட்ட மேகம், "முனிவரே, சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்க்கப்பட்ட பாவங்கள், காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றன. அதன் தாக்கம் அதிகரிக்கும்போது, மழையாகப் பெய்விக்கப்படுகின்றது, அங்ஙனம் மழையுடன் அந்தப் பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றன. அதை பொறுமையின் தேவதையான பூமித்தாய் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே, தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடம் கேளுங்கள்" என்றது..தனது சந்தேகத்தை பூமாதேவியிடம் திருப்பினார் முனிவர். அதற்கு பூமித்தாய், "முனிவரே, மழை மூலம் வந்து சேரும் பாவங்களை நான் ஏற்றுக்கொள்வது எனது கடமை என்றாலும், அந்தப் பாவங்கள் என்னில் தங்குவதில்லை. அவை மரம், செடிகளின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, அதன் காய் கனிகளை அடைந்து விடுகின்றது. அந்தக் காய், கனிகளை மனிதர்கள் உண்ணும்போது மீண்டும் அப்பாவங்கள் அவர்களையே சென்றடைகின்றன. மனிதர்கள் மீண்டும் கங்கைக்குச் சென்று அவர்களின் பாவத்தைப் போக்கிக் கொள்கின்றனர். இங்ஙனம், செய்த பாவங்கள் மீண்டும் மீண்டும் அவர்களையே வந்தடைகின்றன. முனிவரே, இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?” என்று கேட்டாள்."இல்லை பூமி மாதா" என்றார் முனிவர்.“அப்படியென்றால் நீங்கள் மீண்டும் கங்கைக் கரைக்கே செல்லுங்கள். அங்கு உங்களுக்கு முழு விளக்கம் கிடைக்கும்" என்றாள் பூமி மாதா.இதைக் கேட்ட முனிவர் கங்கை கரைக்குச் சென்றார். அங்கே, அவர் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தார். அவரைப் பார்த்த அந்தப் பெண்மணி, “முனிவரே, இன்னும் உங்களுக்கு என்ன சந்தேகம்?" என்று கேட்க, "நீங்கள் சாதாரணப் பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன். தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள்" என்று முனிவர் கேட்க, தனது சுயரூபத்தைக் காண்பித்து, “நான்தான் கங்கா தேவி” என்று முனிவருக்கு அருளினார் கங்கா மாதா.மகிழ்ச்சியுற்ற முனிவர், "மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள் மீண்டும் மீண்டும் மனிதர்களையே சென்றடைகின்றன. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களைச் செய்து கங்கையில் கரைப்பதால், கங்கா நதியில் பாவத்தின் பாரம் அதிகமாகிக் கொண்டே செல்லுமல்லவா?” என்றார்."முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது. அப்போது நான் சிவபெருமானிடம் எனது சந்தேகத்தை கேட்டேன். அதற்கு சிவபெருமான், ”தேவி, பாவம் செய்தவர்கள் மட்டுமே கங்கையில் நீராடுவதில்லை. பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு. அப்படிப் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும்போது கங்கையில் கரைக்கப்படும் பாவங்களின் ஒரு பாகம், அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப எரிந்து நாசமாகிறது. இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?" என்று கங்கா தேவி கேட்க, "ஆம்" என்றார் முனிவர்."அதனால்தான் தங்களை என்னில் நீராடுமாறு கேட்டுக்கொண்டேன்" என்று தேவி கூற, "நிச்சயமாக நீராடுகிறேன்" என்று கூறி, முனிவர் கங்கையில் நீராடச் சென்றார்.
ஒருசமயம் பாவமே செய்யாத முனிவர் ஒருவர் கங்கையில் நீராடச் சென்றார். அங்கே கங்கையில் நீராடிக்கொண்டு இருந்தவர்கள், ‘மாதா கங்கே, என் பாவத்தினை போக்கிக் காத்தருள்க’ என்று கூறி நீராடினார்கள். இதைக்கேட்ட முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘இப்படிப் பாவங்களைக் கரைக்கும் கங்கையில் நான் நீராடினால் அந்தப் பாவங்கள் என்னை வந்து சேருமல்லவா? எனவே, கங்கையில் நீராடாமல் இருப்பதே நலம்’ என்று அங்கிருந்து புறப்படலானார்.அப்போது அங்கு வந்த ஒரு பெண், ‘முனிவரே, ஏன் நீராடாமல் செல்கிறீர்கள்?’ என்று கேட்டாள். முனிவர் அதற்கான காரணத்தை அவளிடம் கூறினார். அதற்கு அந்தப் பெண், ‘இந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. எனவே, மற்றவர் செய்த பாவங்களும் கடலைச் சென்று அடைகிறது. எனவே, நீங்கள் கங்கையில் நீராடலாம்’ என்று கூறினாள்.முனிவர், ‘இதை அந்த சமுத்திரத்திடமே கேட்போம்’ எனக் கருதி செல்லலானார். அங்கே சென்ற முனிவர், சமுத்திர தேவனான வருணனை நோக்கி தபம் செய்தார். வருண தேவனும் அவர் முன் தோன்ற முனிவர், "வருண தேவனே, கங்கையில் விடப்படும் பாவங்கள் அனைத்தும், சமுத்திரத்தை வந்து அடைகின்றன. அப்படியிருக்க, சமுத்திரத்தில் நீராடுவது எப்படிப் புண்ணியம் ஆகும்?” என்றார்.அதற்கு வருணன், "முனிவரே… கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரியனின் ஒளிக்கதிர்களால் ஆவியாகி மேலே சென்று விடுவதால், கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்வதில்லை. எனவே, புண்ணிய நீராடலுக்கு கடல் உகந்ததுதான்" என்று கூறி வருண பகவான் மறைந்தார்.அப்படியும் தனது சந்தேகம் தீராத முனிவர், சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்தார். "சூரிய பகவானே, கடலில் சேரும் பாவங்களை தங்களது ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்வதால் அது உங்களை பாதிப்பதில்லையா?" என்று கேட்டார்.அதற்கு சூரியன், ”முனிவரே… எனது ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள், எனது உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை. அவை மேகங்களாக வானிலேயே தங்கி விடுகின்றன" என்றார்.உடனே முனிவர், "அப்படியென்றால், அந்தப் பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது?" என்று கேட்க, ”அதை நீங்கள் மேகத்திடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்" என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.உடனே, முனிவர் மேகத்திடம் தனது கேள்வியை எழுப்பினார். அதைக் கேட்ட மேகம், "முனிவரே, சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்க்கப்பட்ட பாவங்கள், காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றன. அதன் தாக்கம் அதிகரிக்கும்போது, மழையாகப் பெய்விக்கப்படுகின்றது, அங்ஙனம் மழையுடன் அந்தப் பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றன. அதை பொறுமையின் தேவதையான பூமித்தாய் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே, தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடம் கேளுங்கள்" என்றது..தனது சந்தேகத்தை பூமாதேவியிடம் திருப்பினார் முனிவர். அதற்கு பூமித்தாய், "முனிவரே, மழை மூலம் வந்து சேரும் பாவங்களை நான் ஏற்றுக்கொள்வது எனது கடமை என்றாலும், அந்தப் பாவங்கள் என்னில் தங்குவதில்லை. அவை மரம், செடிகளின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, அதன் காய் கனிகளை அடைந்து விடுகின்றது. அந்தக் காய், கனிகளை மனிதர்கள் உண்ணும்போது மீண்டும் அப்பாவங்கள் அவர்களையே சென்றடைகின்றன. மனிதர்கள் மீண்டும் கங்கைக்குச் சென்று அவர்களின் பாவத்தைப் போக்கிக் கொள்கின்றனர். இங்ஙனம், செய்த பாவங்கள் மீண்டும் மீண்டும் அவர்களையே வந்தடைகின்றன. முனிவரே, இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?” என்று கேட்டாள்."இல்லை பூமி மாதா" என்றார் முனிவர்.“அப்படியென்றால் நீங்கள் மீண்டும் கங்கைக் கரைக்கே செல்லுங்கள். அங்கு உங்களுக்கு முழு விளக்கம் கிடைக்கும்" என்றாள் பூமி மாதா.இதைக் கேட்ட முனிவர் கங்கை கரைக்குச் சென்றார். அங்கே, அவர் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தார். அவரைப் பார்த்த அந்தப் பெண்மணி, “முனிவரே, இன்னும் உங்களுக்கு என்ன சந்தேகம்?" என்று கேட்க, "நீங்கள் சாதாரணப் பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன். தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள்" என்று முனிவர் கேட்க, தனது சுயரூபத்தைக் காண்பித்து, “நான்தான் கங்கா தேவி” என்று முனிவருக்கு அருளினார் கங்கா மாதா.மகிழ்ச்சியுற்ற முனிவர், "மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள் மீண்டும் மீண்டும் மனிதர்களையே சென்றடைகின்றன. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களைச் செய்து கங்கையில் கரைப்பதால், கங்கா நதியில் பாவத்தின் பாரம் அதிகமாகிக் கொண்டே செல்லுமல்லவா?” என்றார்."முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது. அப்போது நான் சிவபெருமானிடம் எனது சந்தேகத்தை கேட்டேன். அதற்கு சிவபெருமான், ”தேவி, பாவம் செய்தவர்கள் மட்டுமே கங்கையில் நீராடுவதில்லை. பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு. அப்படிப் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும்போது கங்கையில் கரைக்கப்படும் பாவங்களின் ஒரு பாகம், அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப எரிந்து நாசமாகிறது. இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?" என்று கங்கா தேவி கேட்க, "ஆம்" என்றார் முனிவர்."அதனால்தான் தங்களை என்னில் நீராடுமாறு கேட்டுக்கொண்டேன்" என்று தேவி கூற, "நிச்சயமாக நீராடுகிறேன்" என்று கூறி, முனிவர் கங்கையில் நீராடச் சென்றார்.