- டி.எம்.இரத்தினவேல்தீபாவளி பண்டிகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாடெங்கும் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் பெயருக்குத்தான் இந்து பண்டிகைகள். ஆனால், உண்மையில் மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் இந்தத் திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். நம் பாரத நாட்டை ஒரு காலத்தில் பல நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘மொகலாய மன்னர்கள்’ தங்கள் ஆட்சிக் காலத்தில் ‘தீபாவளி பண்டிகை’யை விமரிசையாகக் கொண்டாடினர் என்பதற்கு அவர்களது வரலாற்றுக் குறிப்புகளே சான்றுகளாக உள்ளன. மொகலாய மன்னர்கள் தீபாவளி பண்டிகைக்கு வைத்த பெயர் ‘ஜெஷன்-இ-சிகராகன்’ என்பதாகும். பண்டிகை நாளில் அலங்கார அகல் விளக்குகளின் அணிவரிசையைக் கண்டு அவர்கள் பிரமித்து இந்தப் பெயரைச் சூட்டினர்.மொகலாய மன்னர்களில் அக்பர்தான் முதன்முதலில் பெரிய அளவில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அவரது மனைவி ஜோடா பாய், இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தீபாவளியை அக்பர் கொண்டாடுகிறார் என்று பலரும் அவரைக் குறை கூறினார்கள். ஆனால், அக்பர் தீபாவளியை ஒரு கலாசார விழாவாகக் கண்டாரே தவிர, ஒரு மதத்துக்குரிய விழாவாகப் பார்க்கவில்லை. தீபாவளியன்று அனைவரையும் அழைத்து அவர் கெளரவித்தார். பல பரிசுப் பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்..பேரரசர் அக்பர் காலத்தில் இருந்த பிரபல வரலாற்று ஆசிரியர் அபுல்பசல், தனது ‘அயின்-இ-அக்பரி’ என்ற புத்தகத்தில் அக்பர் கால தீபாவளி பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஆக்ரா மட்டுமின்றி, நாடு முழுவதும் தீபாவளியை கொண்டாட அக்பர் உத்தரவிட்டார். பெரிய பெரிய இந்து கடவுள் சிலைகளை உருவாக்கி கையில் விளக்கு வைத்திருப்பதுபோல் வடிவமைத்தார். வண்ண விளக்குகள் வைக்கவும், பட்டாசு வெடிக்கவும் அவர் அனுமதித்தார். “முஸ்லிம் அல்லாத பண்டிகைக்கு அவர் தந்த முன்னுரிமை பலரையும் வியக்க வைத்தது” என்று தனது நூலில் அபுல்பசல் குறிப்பிட்டுள்ளார்.மாநகர் டில்லி முழுவதும் வாணவேடிக்கைகள், விளக்கு அலங்காரங்களால் மின்னிக் கொண்டிருப்பதை, ‘குதுப்மினார்’ என்ற உயர்ந்த கோபுரத்தில் இருந்து பார்த்து ரசிப்பாராம் அக்பர். அவர் மட்டுமல்ல; மந்திரிகள் மற்றும் முக்கிய பிரதானிகள், அரண்மனைப் பெண்டிர் அனைவரும் குதுப்மினார் கோபுரத்தின் மீது ஏறி டில்லி மின்னுவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர்.தீபாவளி நன்னாளில் இந்து ஏழைக் குடும்பங்களுக்கு அக்பர் ஏராளமான உதவிகள் செய்தார். அவர் இதற்காக தனி அறக்கட்டளை அமைத்தார். புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பல பரிசுப் பொருட்களை வழங்கினார். தீபாவளி பண்டிகை மட்டுமின்றி; தசரா, ஹோலி பண்டிகையைக்கூட அக்பர் கொண்டாடி மகிழ்ந்தார் என்று தன் வரலாற்று நூலில் அபுல்பசல் குறிப்பிட்டுள்ளார்..அடுத்து வந்த மொகலாயப் பேரரசர் ஜகாங்கீர் மற்றும் நூர்ஜஹான் ஆகியோரும் தீபாவளியை கோலாகலத்துடன் கொண்டாடினர். ராஜா மான்சிங் அரண்மனைக்கு இருவரும் சென்று தீப அலங்காரங்கள், வாணவேடிக்கைகள் பார்த்து, ரசித்து, மகிழ்ந்து இனிப்புகளை ருசித்துவிட்டுத் திரும்பினார்கள். இந்து பெண்கள் பட்டாசுகள் வெடிப்பதைப் பார்த்து, அதுபோலவே நூர்ஜஹானும் அவர்களுடன் சேர்ந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தார். இச்செய்திகளையெல்லாம், ‘தஸ்க்-இ-ஜஹாங்கிரி’ என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.அடுத்து வந்த பேரரசர் ஷாஜஹான் ஒருபடி மேலே போய் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார். அன்று அமைச்சர்கள், முக்கியப் பிரதானிகள், படைத் தலைவர்கள் என்று பலரையும் அழைத்து அரண்மனையில் விருந்து அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல ஏழை, எளிய மக்களுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதற்காக அவர் ஒரு மாதம் முன்பே ஏற்பாடுகள் செய்யத் துவங்கிவிடுவார். டில்லி, ஆக்ரா, போபால், லக்னோ, மதுராவில் இருந்து விசேஷமாக குடம் குடமாக நெய் வரவழைப்பார். அதிலிருந்து பிரமாதமான இனிப்புகள் செய்யக் கட்டளையிடுவார். அவற்றை அனைவருக்கும் அளித்து மகிழ்வார்.மாலை நேரத்தில் நடக்கும் இந்த பிரம்மாண்டமான விருந்தைத் தொடர்ந்து, அரண்மனை வளாகத்தில் மிகப்பெரிய அளவில் வாண வேடிக்கைகள் இருக்கும். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இந்த வாணவேடிக்கையை மகாராணியார் துவக்கி வைப்பார். மகாராஜாவும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பட்டாசுகள் கொளுத்துவார். வண்ண வண்ணப் பூக்களைச் சொரியும் மத்தாப்பு வகைகளை விடுவது மகாராணிக்கு மிகவும் பிடிக்கும். அது முடிந்தவுடன் இரவு, செங்கோட்டையில் லட்சுமி பூஜை நடைபெறும். அதிலும் மும்தாஜூடன் ஷாஜஹான் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்..பேரரசர் ஒளரங்கசீப் காலத்தில் இப்பண்டிகை உற்சாகத்தை இழந்தது. அவர் இதன் மீது விசேஷ அக்கறை ஏதும் செலுத்தவில்லை. பொதுவாக, அவருக்குக் கலை, கலாசாரம், பண்டிகைகள் மீது விருப்பம் இருக்கவில்லை. மொகலாயப் பேரரசின் கடைசி மன்னராக பகதூர் ஷா ஜாபர் இருந்தார். பகதூர் ஷா தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடினார். அவருக்கு வண்ண விளக்குகள் அலங்காரத்தின் மீதும் வாண வேடிக்கைகள் மீதும் அதிக அக்கறை இருந்தது. கம்பீரமாகக் காட்சியளிக்கும் செங்கோட்டையில்தான் தீபாவளியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர். மன்னர் பகதூர் ஷா ஜாபரின் உயர் ராணுவ அதிகாரிகள்தான் அணிவகுப்பு மைதானத்தில் வாணவேடிக்கைகள் நடத்துவர். பல கலை நிகழ்ச்சிகளும் இங்கே நடைபெறும். இதைக் கண்டு களிக்கவே பல மணி நேரம் முன்பே மக்கள் திரண்டு வருவார்களாம். இப்படி மொகலாய மன்னர்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். மொகலாய மன்னர்கள் தீபாவளியை ஒரு கலாசார விழாவாகக் கண்டார்களே தவிர, ஒரு மதத்துக்குரிய விழாவாகப் பார்க்கவில்லை.
- டி.எம்.இரத்தினவேல்தீபாவளி பண்டிகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாடெங்கும் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் பெயருக்குத்தான் இந்து பண்டிகைகள். ஆனால், உண்மையில் மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் இந்தத் திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். நம் பாரத நாட்டை ஒரு காலத்தில் பல நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘மொகலாய மன்னர்கள்’ தங்கள் ஆட்சிக் காலத்தில் ‘தீபாவளி பண்டிகை’யை விமரிசையாகக் கொண்டாடினர் என்பதற்கு அவர்களது வரலாற்றுக் குறிப்புகளே சான்றுகளாக உள்ளன. மொகலாய மன்னர்கள் தீபாவளி பண்டிகைக்கு வைத்த பெயர் ‘ஜெஷன்-இ-சிகராகன்’ என்பதாகும். பண்டிகை நாளில் அலங்கார அகல் விளக்குகளின் அணிவரிசையைக் கண்டு அவர்கள் பிரமித்து இந்தப் பெயரைச் சூட்டினர்.மொகலாய மன்னர்களில் அக்பர்தான் முதன்முதலில் பெரிய அளவில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அவரது மனைவி ஜோடா பாய், இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தீபாவளியை அக்பர் கொண்டாடுகிறார் என்று பலரும் அவரைக் குறை கூறினார்கள். ஆனால், அக்பர் தீபாவளியை ஒரு கலாசார விழாவாகக் கண்டாரே தவிர, ஒரு மதத்துக்குரிய விழாவாகப் பார்க்கவில்லை. தீபாவளியன்று அனைவரையும் அழைத்து அவர் கெளரவித்தார். பல பரிசுப் பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்..பேரரசர் அக்பர் காலத்தில் இருந்த பிரபல வரலாற்று ஆசிரியர் அபுல்பசல், தனது ‘அயின்-இ-அக்பரி’ என்ற புத்தகத்தில் அக்பர் கால தீபாவளி பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஆக்ரா மட்டுமின்றி, நாடு முழுவதும் தீபாவளியை கொண்டாட அக்பர் உத்தரவிட்டார். பெரிய பெரிய இந்து கடவுள் சிலைகளை உருவாக்கி கையில் விளக்கு வைத்திருப்பதுபோல் வடிவமைத்தார். வண்ண விளக்குகள் வைக்கவும், பட்டாசு வெடிக்கவும் அவர் அனுமதித்தார். “முஸ்லிம் அல்லாத பண்டிகைக்கு அவர் தந்த முன்னுரிமை பலரையும் வியக்க வைத்தது” என்று தனது நூலில் அபுல்பசல் குறிப்பிட்டுள்ளார்.மாநகர் டில்லி முழுவதும் வாணவேடிக்கைகள், விளக்கு அலங்காரங்களால் மின்னிக் கொண்டிருப்பதை, ‘குதுப்மினார்’ என்ற உயர்ந்த கோபுரத்தில் இருந்து பார்த்து ரசிப்பாராம் அக்பர். அவர் மட்டுமல்ல; மந்திரிகள் மற்றும் முக்கிய பிரதானிகள், அரண்மனைப் பெண்டிர் அனைவரும் குதுப்மினார் கோபுரத்தின் மீது ஏறி டில்லி மின்னுவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர்.தீபாவளி நன்னாளில் இந்து ஏழைக் குடும்பங்களுக்கு அக்பர் ஏராளமான உதவிகள் செய்தார். அவர் இதற்காக தனி அறக்கட்டளை அமைத்தார். புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பல பரிசுப் பொருட்களை வழங்கினார். தீபாவளி பண்டிகை மட்டுமின்றி; தசரா, ஹோலி பண்டிகையைக்கூட அக்பர் கொண்டாடி மகிழ்ந்தார் என்று தன் வரலாற்று நூலில் அபுல்பசல் குறிப்பிட்டுள்ளார்..அடுத்து வந்த மொகலாயப் பேரரசர் ஜகாங்கீர் மற்றும் நூர்ஜஹான் ஆகியோரும் தீபாவளியை கோலாகலத்துடன் கொண்டாடினர். ராஜா மான்சிங் அரண்மனைக்கு இருவரும் சென்று தீப அலங்காரங்கள், வாணவேடிக்கைகள் பார்த்து, ரசித்து, மகிழ்ந்து இனிப்புகளை ருசித்துவிட்டுத் திரும்பினார்கள். இந்து பெண்கள் பட்டாசுகள் வெடிப்பதைப் பார்த்து, அதுபோலவே நூர்ஜஹானும் அவர்களுடன் சேர்ந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தார். இச்செய்திகளையெல்லாம், ‘தஸ்க்-இ-ஜஹாங்கிரி’ என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.அடுத்து வந்த பேரரசர் ஷாஜஹான் ஒருபடி மேலே போய் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார். அன்று அமைச்சர்கள், முக்கியப் பிரதானிகள், படைத் தலைவர்கள் என்று பலரையும் அழைத்து அரண்மனையில் விருந்து அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல ஏழை, எளிய மக்களுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இதற்காக அவர் ஒரு மாதம் முன்பே ஏற்பாடுகள் செய்யத் துவங்கிவிடுவார். டில்லி, ஆக்ரா, போபால், லக்னோ, மதுராவில் இருந்து விசேஷமாக குடம் குடமாக நெய் வரவழைப்பார். அதிலிருந்து பிரமாதமான இனிப்புகள் செய்யக் கட்டளையிடுவார். அவற்றை அனைவருக்கும் அளித்து மகிழ்வார்.மாலை நேரத்தில் நடக்கும் இந்த பிரம்மாண்டமான விருந்தைத் தொடர்ந்து, அரண்மனை வளாகத்தில் மிகப்பெரிய அளவில் வாண வேடிக்கைகள் இருக்கும். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இந்த வாணவேடிக்கையை மகாராணியார் துவக்கி வைப்பார். மகாராஜாவும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பட்டாசுகள் கொளுத்துவார். வண்ண வண்ணப் பூக்களைச் சொரியும் மத்தாப்பு வகைகளை விடுவது மகாராணிக்கு மிகவும் பிடிக்கும். அது முடிந்தவுடன் இரவு, செங்கோட்டையில் லட்சுமி பூஜை நடைபெறும். அதிலும் மும்தாஜூடன் ஷாஜஹான் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்..பேரரசர் ஒளரங்கசீப் காலத்தில் இப்பண்டிகை உற்சாகத்தை இழந்தது. அவர் இதன் மீது விசேஷ அக்கறை ஏதும் செலுத்தவில்லை. பொதுவாக, அவருக்குக் கலை, கலாசாரம், பண்டிகைகள் மீது விருப்பம் இருக்கவில்லை. மொகலாயப் பேரரசின் கடைசி மன்னராக பகதூர் ஷா ஜாபர் இருந்தார். பகதூர் ஷா தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடினார். அவருக்கு வண்ண விளக்குகள் அலங்காரத்தின் மீதும் வாண வேடிக்கைகள் மீதும் அதிக அக்கறை இருந்தது. கம்பீரமாகக் காட்சியளிக்கும் செங்கோட்டையில்தான் தீபாவளியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர். மன்னர் பகதூர் ஷா ஜாபரின் உயர் ராணுவ அதிகாரிகள்தான் அணிவகுப்பு மைதானத்தில் வாணவேடிக்கைகள் நடத்துவர். பல கலை நிகழ்ச்சிகளும் இங்கே நடைபெறும். இதைக் கண்டு களிக்கவே பல மணி நேரம் முன்பே மக்கள் திரண்டு வருவார்களாம். இப்படி மொகலாய மன்னர்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். மொகலாய மன்னர்கள் தீபாவளியை ஒரு கலாசார விழாவாகக் கண்டார்களே தவிர, ஒரு மதத்துக்குரிய விழாவாகப் பார்க்கவில்லை.