– எ.எஸ்.கோவிந்தராஜன்.'மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?' என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான். மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு என்றாலும், அவற்றில் மிகவும் புனிதம் தருபவையாகத் திகழ்கின்றன பஞ்சத் திருநாமங்கள்..புண்ணியம் பெருக்கும் திருமாலின் பஞ்ச திருநாமங்களின் பெருமையைக் காண்போம்..முதலாவது திருநாமம், 'ராமா'.'ராமா… ராமா… ராமா…' என்று மனதில் ஒரு நாளைக்கு எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும்போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து, மனதிற்குள் 'ராமா' எனும் திருநாமத்தைச் சொல்வதால் மனம் அமைதி அடைவது நிச்சயம். 'ராமா' என்ற இரண்டெழுத்து நாமத்தைக் கேட்டாலே அனுமன் அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்..'யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்'.பத்தாயிரம் ராம நாமாக்களைச் சொன்னால், ஏழு கோடி மந்திரங்களைச் சொன்ன பலன் கிடைக்குமாம்!.இரண்டாவது திருநாமம், 'கிருஷ்ணா'.இந்தத் திருநாமமே கடைசி வரை பாண்டவர்களைக் கூடவே இருந்து காத்தது. குந்தி தேவி, கிருஷ்ணனிடம் கேட்ட வரம், "கிருஷ்ணா… எனக்குக் கஷ்டங்களைக் கொடு! அப்போதுதான் நான் என்றும் உன்னை மறவாமல் இருப்பேன்" என்றாளாம். கஷ்டங்களைத் தாங்கும், மன வலிமையைக் கொடுப்பது, 'கிருஷ்ணா' எனும்திருநாமம்..மூன்றாவது திருநாமம், 'நாராயணா'.சிறுவன் பிரஹ்லாதனைக் காத்த திருநாமம், 'நாராயணா' என்பதாகும். பகவானுக்குப் பிடித்த அந்தக் குழந்தை எத்தனை இடர்களைச் சந்தித்தபோதும் அவனைக் காப்பாற்றிய நாமம். இதுமட்டுமின்றி, ஆண்டாள் தன் பாசுரத்தில், 'நாராயணனே நமக்கே பறை தருவான்…' என்று, 'ஏ'காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம், 'நாராயணா' என்பதாகும்..நான்காவது திருநாமம், 'கோவிந்தா'.பாஞ்சாலியை கௌரவர் சபையில் துச்சாதனன் துகிலுரித்தபோது, நிர்கதியாக நின்ற அவள் தனது இரு கைகளையும் உயரத் தூக்கி, 'கோவிந்தா… கோவிந்தா' எனக் கதறியபோது, அவளது மானத்தைக் காப்பாற்ற கைகொடுத்த திருநாமம் இது. தவிர, அன்றும், இன்றும், என்றும் திருமலையில் எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கும் புனித நாமம், 'கோவிந்தா' என்பதாகும்..ஐந்தாவது திருநாமம், 'நரஸிம்மா'.நாளை என்பதே இல்லாத நரசிம்மன், பக்தர்கள் கேட்பதை உடனே கொடுப்பவன். அதனால்தான் பிரஹ்லாதன் அழைத்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்தான். 'நீயே கதி' என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பவன். 'ஆகட்டும் பிறகு பார்க்கலாம்' என்று அவன் சொன்னதே இல்லையாம். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி. அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில், 'நாரஸிம்ஹ வபு ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம:' என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொல்கிறார் பீஷ்ம பிதாமஹர்..ராமா! க்ருஷ்ணா! நாராயணா! கோவிந்தா! நரஸிம்மா! என்ற இந்த எளிமையான ஐந்து திருநாமங்களையும் எப்போதும் நாத்தழும்பேறக் கூறுவோம். திருமாலின் இந்த திவ்யத் திருநாமங்கள் ஒருவர்தம் வாழ்வில் உய்வித்துக் கடைத்தேற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
– எ.எஸ்.கோவிந்தராஜன்.'மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?' என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான். மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு என்றாலும், அவற்றில் மிகவும் புனிதம் தருபவையாகத் திகழ்கின்றன பஞ்சத் திருநாமங்கள்..புண்ணியம் பெருக்கும் திருமாலின் பஞ்ச திருநாமங்களின் பெருமையைக் காண்போம்..முதலாவது திருநாமம், 'ராமா'.'ராமா… ராமா… ராமா…' என்று மனதில் ஒரு நாளைக்கு எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும்போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து, மனதிற்குள் 'ராமா' எனும் திருநாமத்தைச் சொல்வதால் மனம் அமைதி அடைவது நிச்சயம். 'ராமா' என்ற இரண்டெழுத்து நாமத்தைக் கேட்டாலே அனுமன் அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்..'யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்'.பத்தாயிரம் ராம நாமாக்களைச் சொன்னால், ஏழு கோடி மந்திரங்களைச் சொன்ன பலன் கிடைக்குமாம்!.இரண்டாவது திருநாமம், 'கிருஷ்ணா'.இந்தத் திருநாமமே கடைசி வரை பாண்டவர்களைக் கூடவே இருந்து காத்தது. குந்தி தேவி, கிருஷ்ணனிடம் கேட்ட வரம், "கிருஷ்ணா… எனக்குக் கஷ்டங்களைக் கொடு! அப்போதுதான் நான் என்றும் உன்னை மறவாமல் இருப்பேன்" என்றாளாம். கஷ்டங்களைத் தாங்கும், மன வலிமையைக் கொடுப்பது, 'கிருஷ்ணா' எனும்திருநாமம்..மூன்றாவது திருநாமம், 'நாராயணா'.சிறுவன் பிரஹ்லாதனைக் காத்த திருநாமம், 'நாராயணா' என்பதாகும். பகவானுக்குப் பிடித்த அந்தக் குழந்தை எத்தனை இடர்களைச் சந்தித்தபோதும் அவனைக் காப்பாற்றிய நாமம். இதுமட்டுமின்றி, ஆண்டாள் தன் பாசுரத்தில், 'நாராயணனே நமக்கே பறை தருவான்…' என்று, 'ஏ'காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம், 'நாராயணா' என்பதாகும்..நான்காவது திருநாமம், 'கோவிந்தா'.பாஞ்சாலியை கௌரவர் சபையில் துச்சாதனன் துகிலுரித்தபோது, நிர்கதியாக நின்ற அவள் தனது இரு கைகளையும் உயரத் தூக்கி, 'கோவிந்தா… கோவிந்தா' எனக் கதறியபோது, அவளது மானத்தைக் காப்பாற்ற கைகொடுத்த திருநாமம் இது. தவிர, அன்றும், இன்றும், என்றும் திருமலையில் எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கும் புனித நாமம், 'கோவிந்தா' என்பதாகும்..ஐந்தாவது திருநாமம், 'நரஸிம்மா'.நாளை என்பதே இல்லாத நரசிம்மன், பக்தர்கள் கேட்பதை உடனே கொடுப்பவன். அதனால்தான் பிரஹ்லாதன் அழைத்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்தான். 'நீயே கதி' என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பவன். 'ஆகட்டும் பிறகு பார்க்கலாம்' என்று அவன் சொன்னதே இல்லையாம். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி. அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில், 'நாரஸிம்ஹ வபு ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம:' என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொல்கிறார் பீஷ்ம பிதாமஹர்..ராமா! க்ருஷ்ணா! நாராயணா! கோவிந்தா! நரஸிம்மா! என்ற இந்த எளிமையான ஐந்து திருநாமங்களையும் எப்போதும் நாத்தழும்பேறக் கூறுவோம். திருமாலின் இந்த திவ்யத் திருநாமங்கள் ஒருவர்தம் வாழ்வில் உய்வித்துக் கடைத்தேற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!