IPL-2020 போட்டி: சிஎஸ்கே அணியுடன் பெங்களூரு ஆர்சிபி மோதல்! ஜெயிக்கப் போவது யாரு?!

IPL-2020 போட்டி: சிஎஸ்கே அணியுடன் பெங்களூரு ஆர்சிபி மோதல்! ஜெயிக்கப் போவது யாரு?!

ஐபிஎல் 2022 தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி மோதவுள்ளது. ஏற்னவே தொடர்ந்து 4 தோல்விகள் கண்ட சிஎஸ்கே-யும் ஹாட்ரிக் வெற்றி கண்ட ஆர்சிபி-யும் இன்று போட்டியிட உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக பதவியேற்ற ஜடேஜா மீது அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் துவக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில், சிஎச்கே அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே ஒருவேளை இன்றைய போட்டியிலும் தோல்வியுற்றால், ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக சிஎஸ்கே-வுக்கு 5-வது தொடர் தோல்வியாக அமைந்துவிடும்.

ஆர்சிபி அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியுற்ற போதிலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றிவாகை சூடியது.  கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளையும் மும்பை அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் அடித்தது ஆர்சிபி, தற்போது வெற்றியை தொடரும் முனைப்பில் சென்னை அணியை எதிர்கொள்ள போகிறது.

இந்நிலையில் இன்றிய ஆட்டத்தின் மூலம் 4-வது வெற்றியை ருசிக்கப் போகிறதா ஆர்சிபி.. அல்லது முதல் வெற்றி காண்ப் போகிறதா சிஎஸ்கே.. என்ற பெருத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com