TNPSC – குரூப் 2 தேர்வு; காலை 9 மணிக்கு பின் வந்தால் அனுமதியில்லை!

TNPSC – குரூப் 2 தேர்வு; காலை 9 மணிக்கு பின் வந்தால் அனுமதியில்லை!

டிஎன்பிஎஸ்சி. குரூப்  2-வுக்கான தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாதம் 21-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி இம்மாதம் 21-ம் தேதி நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு மையத்துக்கு 

காலை இதன்படி 8.30 மணிக்கு வர வேண்டும். இத்தேர்வு காலை  9.30 மணிக்கு தொடங்கும் என்பதால் அத்தேர்வுக்கு 1 மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டியது கட்டாயமாகும். அதிகபட்சம். 9 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குரூப் 2, மற்றும் குரூப் 2 தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ் வழியில் படித்த 79,942 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 2, குரூப் 2 தேர்வுக்கு மொத்தமாக 11,78,175 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலை நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட தாலுகாக்களை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் 4,012 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும்.

-இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com